வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் விமான பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கொரோனா நிலைமை குறித்து டெல்லியில் நேற்று (21) நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சீனாவில் தற்போது உருமாறிய கொரோனாவான ஒமைக்ரானின் துணை வைரஸ் பிஎப்.7 வேகமாக பரவி வருகிறது. தீவிரமாக பரவும் இந்த வைரஸ் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் சில ஐரோப்பிய நாடுகளிலும் பரவியுள்ளது.
இந்த பிஎப்.7 வைரஸ் அலை இந்தியாவில் பரவி விடக்கூடாது என்பதற்காக இந்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
இதற்கமைய சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வருகை தரும் விமான பயணிகளுக்கு விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை நடத்தப்படவுள்ளது.