வடமேற்கு சீனாவில் தங்கச் சுரங்கத்தில் நிலச்சரிவு.. நிலச்சரிவில் சிக்கிய 18 தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரம்..!

வடமேற்கு சீனாவின் ஜின்ஜியாங் பகுதியில் தங்கச் சுரங்கத்தில் சிக்கிய 18 தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கஜகஸ்தான் எல்லையில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அந்த நிலத்தடி தங்கச் சுரங்கத்தில் 40 தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்.

திடீரென மண் சரிந்ததில் அங்கிருந்த தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் சிக்கினர். 22 பேர் வரை மீட்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள தொழிலாளர்களை மீட்பதற்கான நடவடிக்கை நடைபெற்று வருகிறது.

பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக கடைப்பிடிக்கப்படாத காரணத்தால், சீனாவில் சுரங்க விபத்துகள் அடிக்கடி நிகழ்வதும், உயிர்சேதமும் தொடர்ந்தவண்ணம் உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.