ரேஷன் கார்டுதாரர்களுக்கு குட் நியூஸ்; உணவு பாதுகாப்பு துறை செம உத்தரவு!

தமிழ்நாட்டில் வசிக்கும் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் விதமாக அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் ரேஷன் கடைகளில் மலிவு விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த அத்தியாவசிய பொருட்களை பயனாளிகள் மாதந்தோறும் பெறுவதற்கு வசதியாக டிஜிட்டல் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன், அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் பெற விண்ணப்பிக்கும்போது இருப்பிட சான்றுக்கான முக்கிய ஆவணமாகவும் இதுபோன்ற ரேஷன் கார்டு எடுத்துக்கொள்ளப்படுகிறது.

மேலும் தீபாவளி, பொங்கல் பண்டிகைகளின்போது அரசு அறிவிக்கும் ஊக்கத்தொகையையம், வெள்ள நிவாரணம் போன்ற இயற்கை பேரிடர் தொடர்பான உதவித் தொகையும் ரேஷன் அட்டையை அடிப்படையாக கொண்டே, பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

புதிதாக வழங்கப்படும் ரேஷன் கார்டுகள் அனைத்தும் உணவு பொருள் வழங்கல் துறையின் மண்டல உதவி ஆணையர் அலுவலகத்தின் மூலமாக ஆக்டிவேட் செய்தால் மட்டுமே அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகிறது.

அதன் பின்னரே, பயனாளிகள் அத்தியாவசிய பொருட்களை பெற முடியும். இல்லையென்றால் நியாய விலைக் கடைகளுக்கு சென்று ரேஷன் கார்டை கொடுக்கும்போது கைரேகை பதிவு இயந்திரத்தில் அதை ஸ்கேன் செய்வார்கள்.

அவ்வாறு ஸ்கேன் செய்யும்போது அந்த கார்டு முடக்கப்பட்டு உள்ளதாகவே குறுஞ்செய்தி வரும். இவ்வாறு ரேஷன் கார்டுகள் பெறுவதில் பல்வேறு நடைமுறைகள் மற்றும் அதையொட்டி சிக்கல்கள் உள்ளன.

இவ்வளவு சிக்கல்களையும் தாண்டி ரேஷன் கார்டுகளை பெற்று ரேஷன் கடைகளுக்கு செல்லும் பொதுமக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சி வருகிறது. காரணம் சமீபகாலமாக ரேஷன் கடைகளில் தரமான உணவு பொருட்கள் வழங்கப்படுவது இல்லை என்கிற குற்றச்சாட்டு தான்.

இந்த நிலையில் உணவுப் பொருள் வழங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை வெளியிட்டு உள்ள செம சூப்பர் உத்தரவு அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

நியாய விலை கடைகளில் மத்திய, மாநில அரசுகள் வழங்கும் அரிசியை தனித்தனியாக வழங்க உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது.

நியாய விலை கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசியை நாளை 01.01.2023 முதல் 2 முறையாக ரசீது அடித்து வழங்க ரேஷன் கடை ஊழியர்களுக்கு உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

ரேஷன் கார்டுதாரர்களுக்கு மாநில அரசால் வழங்கப்படும் அரிசிக்கு ஒரு ரசீது மற்றும் மத்திய அரசால் வழங்கப்படும் அரிசிக்கு ஒரு ரசீது என, தனித்தனியாக வழங்க வேண்டும்.

இந்த முறையை பின்பற்றாமல் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கினால் அதற்குண்டான வேறுபாட்டுத் தொகையை அரசிற்கு செலுத்த சம்பந்தப்பட்ட அலுவலர்களே பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.