ஸ்வாதி மாலிவாலின் பாலியல் புகார் ஒரு பொய் நாடகம் -பா.ஜ.க குற்றச்சாட்டு!

கார் ஓட்டுனர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக டெல்லி மகளிர் நல ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மாலிவால் நாடகமாடியது அம்பலமாகிவிட்டதாக பாஜக சாடியுள்ளது.

தாம் களப் பணியில் இருந்த போது குடிபோதையில் கார் ஓட்டுனர் ஏய்ம்ஸ் மருத்துவமனை அருகில் தன்னை பலவந்தப்படுத்த முயன்றதாகவும் தாம் போராடியதால் காருடன் சேர்த்து தன்னை இழுத்துச் சென்றதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். இதையடுத்து கார் ஓட்டுனர் கைது செய்யப்பட்டார்.

ஆனால் இது நாடகம் என பாஜகவின் சாஜியா இல்மி சாடியுள்ளார். கைது செய்யப்பட்ட 47 வயதான நபர் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர் என்றும் டெல்லி போலீசாரை குறைகூறுவதற்காக நடத்தப்பட்ட போலி பலாத்கார நாடகம் என்றும் சாஜியா இல்மி தெரிவித்துள்ளார்.

ஸ்வாதியை வைத்து ஆம் ஆத்மி கட்சி மலிவான அரசியல் நடத்துவதாகவும் பெண்கள் பாதுகாப்பு என்ற தீவிரமான பிரச்சினையை பொய்யாகப் பயன்படுத்தியதாகவும் பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.