ஈரோடு கிழக்கில் அமமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டதாம்!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சண்முகவேலு தலைமையில் நடைபெற்ற இந்த அறிமுக கூட்டத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சிவப்பிரசாந்தை அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளுக்கு வார்டு வாரியாக நிர்வாகிகள் தேர்தல் பணியாற்ற ஒதுக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் சண்முகவேலு, “திமுக மற்றும் அதிமுகவின் அதிருப்தி வாக்குகள் எங்களுக்கு கிடைக்கும் என்றும், இந்த இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெற்றி பெறுவது குறித்து நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டது எனவும் தெரிவித்தார்.

மேலும் “எங்களது வேட்பாளர் இளைஞர், படித்தவர், பண்பாளர் இவரது தேர்தல் வெற்றிக்காக கடுமையாக நாங்கள் பாடுபடுவோம் எனவும் எங்களது வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது என்றும், ஏனென்றால் கடந்த அதிமுக திமுக ஆட்சியில் மக்களின் தேவை அறிந்து பணிகளை செய்யாததால் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவி வருகிறது இதை பயன்படுத்தி அவர்களுக்கு எதிரான வாக்குகளை நாங்கள் சேகரித்து வெற்றி பெறுவோம்” எனவும் அவர் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.