வெறும் வேட்டி பேச்சுக்கு தான் வார்ரூம் – விளாசும் காயத்ரி ரகுராம்..!!

ட்விட்டரில் பதிவிட்டுள்ள காயத்ரி ரகுராம், “ஜே.ஜே.அம்மாவின் ஆசியும், எம்.ஜி.ஆரின் ஆசிர்வாதமும் இபிஎஸ்ஸுக்குத்தான். இபிஎஸ் அய்யா தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதையும், அதிமுக கட்சிக்காக மற்றும் அதிமுக தொண்டர்களுக்காக அவரது போராட்டம் கண்டு வியந்தேன். எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவின் இரட்டை இலை சின்னம் கிடைத்துள்ளது. வாழ்த்துக்கள். இது நியாயமான போராக இருக்கட்டும்.

இப்போ காங்கிரஸ் வெற்றி பெறும், அதிமுக டெபாசிட் இழக்கும் என்று பல வார்ரூம் கைப்பிடிகள் கூறுவது வேடிக்கையாக உள்ளது. அப்புறம் ஏன் காங்கிரசுக்கு எதிராக அண்ணாமலை போட்டியிட்டு ஜெயிக்க முடியாது? ஒரு வேட்பாளரை கூட தேர்ந்தெடுக்க முடியவில்லையா? வெறும் வேட்டி பேச்சு வார்ரூம். ஏன் என்றால் அவர் இதுவரை பாஜகவுக்கு பூத் ஏஜெண்ட் அல்லது கமிட்டி நியமிக்கவில்லை. அண்ணாமலை களப்பணியில் & வலுவான கூட்டணியை அமைக்க பெரிய தோல்வி பெரிய பூஜ்யம். வார்ரூம் வேட்டி வீரம் வெறும் ஆன்லைனில் மட்டுமே” எனக் குறிப்பிட்டுள்ளார். 


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.