தமிழ் சினிமாவில் பரபரப்பிற்கு பஞ்சமில்லாத நடிகர் தான் சிம்பு. இவரை சுற்றி எப்போதும் ஒரு வித பரபரப்பும் சர்ச்சையும் இருந்து வரும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக சிம்பு எந்த சர்ச்சைகளிலும் சிக்காமல் தான் உண்டு தன் வேலை உண்டு என இருந்து வருகின்றார்.
உடல் எடை கூடி இருந்த சிம்பு இனி அவ்வளவுதான் என சிலர் விமர்சிக்க, எனக்கு எண்டே கிடையாது என மாநாடு படத்தின் மூலம் செம கம்பாக் கொடுத்தார் சிம்பு. தன் உடல் எடையை குறைத்து செம ஸ்டைலிஷாக சிம்பு மாறியது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. இதையடுத்து கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்தார் சிம்பு.
Vijay: ஓடும் ரயிலில் ஏறி 40 பேர் எங்களை அதற்காக அடித்தார்கள்..விஜய் சொன்ன திடுக்கிடும் தகவல்..!
இப்படம் கடந்தாண்டு வெளியாகி ஹிட்டடித்த நிலையில் தொடர் வெற்றிகளின் மூலம் புது உத்வேகம் பெற்றார் சிம்பு. தற்போது கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்த பத்து தல திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் தொடர் வெற்றிகளின் காரணமாக சிம்பு தன் சம்பளத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளார்.
கிட்டத்தட்ட நாற்பது கோடி வரை சிம்பு சம்பளமாக கேட்பதாக தகவல்கள் வருகின்றன. இதன் காரணமாக சிம்பு நடிக்கவிருந்த கொரோனா குமார் திரைப்படம் டிராப் ஆகிவிட்டது. மேலும் பத்து தல படத்திற்கு பிறகு எந்த படத்திலும் சிம்பு கமிட்டாகாமல் இருந்து வருகின்றார்.
இந்நிலையில் தற்போது
கமல்ஹாசன்
தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு தனது 48 ஆவது படத்தில் நடிக்கவுள்ளார். இதன் அறிவிப்பு இன்று அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து இப்படத்திற்காக சிம்பு தன் கொள்கையை தளர்ந்து தன் சம்பளத்தை பலமடங்கு குறைத்துள்ளார்.
கமலின் தயாரிப்பு என்பதால் எந்த வித பெறமும் பேசாமல் தன் சம்பளத்தை குறைத்து நடித்து வருகின்றார் சிம்பு. மேலும் இக்கதையின் மேல் சிம்பு அதீத நம்பிக்கை வைத்துள்ளதால் இப்படம் தன்னை அடுத்தகட்டத்துக்கு கொண்டுசெல்லும் என மிகுந்த நம்பிக்கையில் சிம்பு இருப்பதாக தெரிகின்றது.
எப்படியும் இப்படம் வெற்றிபெற்று விடும் என்பதால் இப்படத்திற்கு பிறகு நடிக்கும் படங்களில் தன் சம்பளத்தை உயர்த்தலாம் என சிம்பு கணக்கு போட்டிருப்பாரோ என்னவோ தெரியவில்லை.