Vignesh Shivan: அடப்பாவமே, இன்னுமா அதையே நினைச்சுக்கிட்டிருக்கீங்க விக்னேஷ் சிவன்?

அஜித் குமார் தனக்கு மிகவும் பிடித்த ஹீரோ என நயன்தாரா பலமுறை கூறியிருக்கிறார். நயன்தாராவுக்கு மட்டும் அல்ல அவரின் காதல் கணவரான விக்னேஷ் சிவனுக்கும் அஜித் என்றால் ரொம்ப பிடிக்கும்.

அஜித்தை வைத்து ஒரு படமாவது இயக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார் விக்னேஷ் சிவன். கணவரின் ஆசையை புரிந்து கொண்ட நயன்தாராவோ அஜித்தை அணுகி டேட்ஸ் வாங்கிக் கொடுத்தார். இதையடுத்தே அஜித் குமாரின் ஏ.கே. 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என லைகா நிறுவனம் கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியிட்டது.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

தன் கனவு நிறைவேறிய சந்தோஷத்தில் இருந்தார் விக்னேஷ் சிவன். இந்த ஆண்டு ஜனவரி மாதம் படப்பிடிப்பை துவங்க தயாரானார். ஆனால் கடைசி நேரத்தில் அவரை படத்தில் இருந்து நீக்கிவிட்டார்கள். இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத விக்னேஷ் சிவன் ஆடிப் போனார்.

நிலைமையை புரிந்து கொண்ட நயன்தாரா தன் கணவருக்கு ஆதரவாக இருந்து வருகிறார். விஜய் சேதுபதியிடம் பேசி டேட்ஸ் வாங்கிக் கொடுத்திருக்கிறாராம் நயன்தாரா. விஜய் சேதுபதியின் டேட்ஸ் கிடைப்பது சாதாரண விஷயம் அல்ல. அவர் பல மொழிகளில் படுபிசியாக இருக்கும் நடிகர்.

Nayanthara: துவங்கியது நயன்தாரா 75 படப்பிடிப்பு: அடடே, ஹீரோ இவரா, இப்பயாவது சேர்வார்களா?

இந்நிலையில் தான் விக்னேஷ் சிவனின் இன்ஸ்டா ஸ்டோரீஸை பார்த்த ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். இது முடிந்துவிட்டது. முன்பை விட ஸ்டிராங்காக வரப் போகிறாய் என ஸ்டோரீஸில் தெரிவித்துள்ளார் விக்கி.

அதை பார்த்த ரசிகர்கள் கூறியிருப்பதாவது,

அது முடிந்தே விட்டது அன்பான இயக்குநரே. அதையே நினைத்துக் கொண்டிருக்காமல் அடுத்த வேலையை பார்க்கவும். தலைவியை வைத்து படம் எடுக்கவும். எதிர்காலத்தில் அஜித் படத்தை இயக்கும் வாய்ப்பு நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும்.

அது வரை ஏ.கே. 62 வாய்ப்பு கை நழுவி போய்விட்டதே என ஃபீல் பண்ண வேண்டாம் என தெரிவித்துள்ளனர்.

விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் சேர்ந்து தங்களின் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் படங்களை தயாரித்து வருகிறார்கள். இந்நிலையில் ஷுப் யாத்ரா என்கிற குஜராத்தி மொழி படத்தை தயாரித்துள்ளனர். முதல் முறையாக அவர்கள் குஜராத்தி மொழி படத்தை தயாரித்துள்ளனர்.

ஷுப் யாத்ரா படம் ஏப்ரல் 28ம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இதற்கிடையே விக்னேஷ் சிவன் விரைவில் பாலிவுட் போகப் போகிறார் என்றும் கூறப்படுகிறது.

ஏ.கே. 62 படத்தை பொறுத்தவரை விக்னேஷ் சிவனை நீக்கிய பிறகு மகிழ்திருமேனியை ஒப்பந்தம் செய்தார்கள். ஆனால் படம் குறித்த அதிகார்ப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. மார்ச் மாதம் முதல் வாரத்திலேயே அறிவிப்பு வரும் என்றார்கள். ஆனால் மார்ச் மாதமும் முடியப் போகிறது, இதுவரை அறிவிப்பு எதுவும் வராததால் அஜித் ரசிகர்கள் லைகா மீது கடுப்பில் இருக்கிறார்கள்.

Ajith, AK 62: மகிழ்திருமேனியையும் கழட்டிவிடும் அஜித்?: எஸ்கேப் டா மச்சினு விக்னேஷ் சிவன் ஹேப்பி?

இதற்கிடையே மார்ச் மாதம் முடிவதற்குள் ஃபைனல் ஸ்க்ரிப்ட்டை மகிழ்திருமேனி தயார் செய்யவில்லை என்றால் அவரையும் மாற்றும் எண்ணத்தில் இருக்கிறார் அஜித் குமார் என்று கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.