பெங்களூரு பள்ளிகளில் கல்வி கட்டணம் உயர்வு| Education fee hike in Bengaluru schools

பெங்களூரு தனியார் பள்ளிகளுக்கான கல்விக் கட்டணத்தை மாநில அரசு நிர்ணயிக்க முடியாது என்று உயர் நீதிமன்ற தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து, பெங்களூரில் கல்விக் கட்டணத்தை தனியார் பள்ளிகள் கடுமையாக உயர்த்தியுள்ளன.

கர்நாடகாவில், தனியார் பள்ளிகளுக்கான கல்விக் கட்டணத்தை மாநில அரசு நிர்ணயித்து வந்தது.

இது தொடர்பாக கர்நாடகா கல்விச் சட்டத்தின் பல பிரிவுகளை எதிர்த்து வழக்குகள் தொடரப்பட்டன. இதை விசாரித்த பெங்களூரு உயர் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது.

இதில், ‘தனியார் பள்ளிகளுக்கான கல்வி கட்டணத்தை மாநில அரசு நிர்ணயிக்க முடியாது’ என கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, பெங்களூரில் உள்ள தனியார் பள்ளிகள், வரும் கல்வியாண்டுக்கான கல்வி கட்டணத்தை ௪௦ சதவீதம் வரை உயர்த்தியுள்ளன. தனியார் பள்ளி சங்கங்கள், ௧௦ – ௧௫ சதவீதம் வரை உயர்த்த ஆலோசனை வழங்கின. ஆனால், பல தனியார் பள்ளிகள், கல்வி கட்டணத்தை கடுமையாக உயர்த்தியுள்ளன.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.