`விஜயபாஸ்கர் அடடடடா’ – துரைமுருகன் கலாய்… `உதயநிதி கிரியேட்டர்’ – எ.வ வேலு | சட்டப்பேரவை ஹைலைட்ஸ்

சட்டப்பேரவையில் இன்று பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சரும் விராலிமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான விஜயபாஸ்கர் காவிரி-குண்டாறு திட்டம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். அப்போது பேசியவர், “இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்தது இன்றைய எதிர்க்கட்சி தலைவரும், அப்போதைய முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி. ஆனால், திட்டம் மந்தமாகயிருப்பதாக தெரிகிறது. எனவே, அமைச்சரே, எங்களோடு வாருங்கள்! ஆறு வெட்டப்படுகிறதா பாருங்கள்! தாராளமாக நிதியைத் தாருங்கள்!” … Read more

கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட கல்லூரி மாணவியின் உடல்… காவல் நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்

கோபிச்செட்டிப்பாளையம் அருகே கல்லூரி மாணவியின் தற்கொலை வழக்கை கொலை வழக்காக மாற்றக் கோரி அவரது உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். சுவேதா என்ற அந்த மாணவியின் உடல், சாக்குப் பையில் மூட்டையாகக் கட்டப்பட்ட நிலையில் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டது. அவரை தற்கொலைக்குத் தூண்டி, சடலத்தை மறைத்ததாக காதலன் லோகேஷ் கைது செய்யப்பட்டார். சடலத்தை லோகேஷ் மட்டுமே மூட்டையாகக் கட்டிக் கொண்டுவந்து கிணற்றில் வீசியிருக்க வாய்ப்பில்லை என்றும் அவனுடன் மேலும் சிலர் சம்மந்தப்பட்டிருக்கலாம் என்று குற்றஞ்சாட்டிய மாணவியின் உறவினர்கள் முதலில் … Read more

திருவள்ளூரில் செல்போன் கோபுரம் அமைக்க தடை கோரிய வழக்கு தள்ளுபடி

சென்னை: திருவள்ளூரில் செல்போன் கோபுரம் அமைக்க தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், திருவள்ளூரைச் சேர்ந்த உதயகுமார் தாக்கல் செய்த பொதுநல மனுவில், திருவள்ளூர் மாவட்டம் மோரையை அடுத்த பூரணி நகர் பகுதியில் ரிலையன்ஸ் நிறுவனம் செல்போன் கோபுரம் அமைக்க திட்டமிட்டு வருகிறது. செல்போன் கோபுரம் அமைக்க திட்டமிட்டுள்ள பகுதியை சுற்றி ஏராளமான குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வசித்து வருவதால் செல்போன் கதிர்வீச்சினால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட … Read more

ஏழுமலையான் ஊதுபத்திகளுக்கு வரவேற்பு: திருப்பதியில் 2-வது தொழிற்சாலை தொடக்கம்

திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான கோயில்களில் மூலவர்கள் மற்றும் உற்சவர்களுக்கு பயன்படுத்தப்படும் பலடன் மலர் மாலைகள் வீணாகின்றன. இதைத் தடுக்க தேவஸ்தான நிர்வாகம் ஊதுபத்தி தொழிற்சாலையை தொடங்கியது. சுவாமிக்கு பயன்படுத்திய மலர்களின் இதழ்களை பிரித்து அவைகளை உலர வைத்து, ரசாயனம் கலந்து விதவிதமான நறுமணம் கொண்ட ஊதுபத்திகளை தயாரித்து பக்தர்களுக்கு விற்பனை செய்து வருகிறது. இதற்கு பக்தர்களிடையே அமோக வரவேற்பு உள்ளது. தற்போது இந்த ஊதுபத்திகளுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளதால், 2-வது தொழிற்சாலையை தொடங்க தேவஸ்தானம் முடிவு … Read more

"சார்.. கைய விடுங்க".. நடுவானில் அலறிய விமானப் பணிப்பெண்.. விடாமல் "சில்மிஷம்".. இந்த வயசுல இது தேவையா?

மும்பை: விமானத்தில் சமீபகாலமாக நடைபெறும் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை தந்து கொண்டிருக்கின்றன. விமானப் பயணமே இனி வேண்டாம் என நினைக்கும் அளவுக்கு படுமோசமான செயல்கள் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில், தற்போது ஒரு அதிர்ச்சி சம்பவம் இண்டிகோ விமானத்தில் நடந்திருக்கிறது. நடுவானில் விமானப் பணிப்பெண்ணிடம் சில்மிஷம் செய்து சிக்கியிருக்கிறார் 63 வயது முதியவர். விமானத்தில் இதுபோன்ற அநாகரீக செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இத்தகைய சம்பவங்கள் குறையும் என பொதுமக்கள் வலியுறுத்துகிறார்கள். சிறுநீர் … Read more

மத்திய அரசால் தமிழ்நாட்டில் தடுப்பூசி இல்லை… சொன்னது அமைச்சர் மா. சுப்பிரமணியன்

Covid Vaccines In Tamil Nadu: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். கொரானோ நோய் பரவுதல் அதிகரித்து வரும் நிலையில், இன்று முதல் அரசு மருத்துவமனைகளில் முக கவசம் கட்டாயமாக்கபட்டுள்ளது.  எனவே, அந்த உத்தரவு முறையாக பின்பற்றப்படுகிறதா என ஆய்வு செய்த அமைச்சர் மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவு, பிரசவ வார்டு, பொதுப்பிரிவு போன்ற பகுதிகளிலும் ஆய்வு நடத்தி முகக்கவசம் அணியாதவர்களுக்கு முகக்கவசம் வழங்கினார். தனியார் … Read more

”சுயமரியாதை, சமூக நீதி போராட்டத்தின் தொடக்கம்தான் வைக்கம் போராட்டம்..” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

கேரளாவின் கோட்டயம் மாவட்டத்திலுள்ள வைக்கத்தில் நடைபெற்ற வைக்கம் சத்தியாகிரக போராட்டத்தின் நூற்றாண்டு விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பங்கேற்றனர். வைக்கம் போராட்ட வீரர்கள் சிலைக்கு, இரு மாநில முதலமைச்சர்களும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில், மலையாளத்தில் பேசி தனது உரையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கினார். சுயமரியாதை, சமூக நீதிக்கான போராட்டத்தின் தொடக்கமாக வைக்கம் போராட்டம் இருந்ததாகவும், தமிழ்நாடு – கேரள தலைவர்கள் இணைந்து போராடியதற்கு கிடைத்த வெற்றியை இன்று கொண்டாடப்படுவதாகவும் … Read more

வைக்கத்தில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மலர்தூவி மரியாதை செய்த முதல்வர் ஸ்டாலின் அங்குள்ள ஜானகி அம்மாள் இல்லத்திற்கும் சென்றார்…

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் வைக்கத்தில் நடைபெற்ற வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டார். இந்த விழாவில் உரையாற்றிய முதல்வர் மு.க. ஸ்டாலின் “வைக்கம் போராட்டம் இந்தியாவுக்கே வழிகாட்டிய போராட்டம். வைக்கம் போராட்டம் நடைபெற்று 100 ஆண்டுகள் ஆகிறது. தமிழ்நாட்டுக்கு உணர்ச்சி, எழுச்சியை ஏற்படுத்திய ஊர் வைக்கம். வைக்கம் மண்ணில் நிற்பதை பெருமையாக கருதுகிறேன்” என்று உணர்ச்சிப்பெருக்குடன் பேசினார் ஸ்டாலின். கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் வைக்கத்தில் உள்ள முன்னாள் முதலமைச்சர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் … Read more

கோவையில் முதல் பேருந்து ஓட்டுநர் ஆனார் இளம்பெண்: பணியை தொடங்கிய சர்மிளாவிற்கு குவியும் பாராட்டு

கோவை: கோவை மாவட்டத்தில் முதல் பேருந்து ஓட்டுனரான இளம்பெண் சர்மிளாவிற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. கோவை மாவட்டம் வடவள்ளியை சேர்ந்தவர் சர்மிளா இவருக்கு சிறு வயது முதலே வாகனங்களை இயக்குவதில் அதீத ஆர்வம் இருந்துள்ளது. அதன் காரணமாக கடந்த 2019ம் ஆண்டு லோட் ஆட்டோ ஓட்ட கற்று கொண்ட சர்மிளா அதற்கான உரிமத்தை பெற்றார். அதை தொடர்ந்து கனரக வாகனங்களை இயக்கவும் கற்றுக்கொண்ட சர்மிளா மக்களுக்காக பேருந்து ஓட்ட வேண்டும் என்ற லட்சியம் … Read more

காரைக்கால் கைலாசநாதர் கோயில் பங்குனி திருவிழாவின் அனைத்து நாட்களிலும் சுவாமி ஊர்வலம் நடத்த ஐகோர்ட் உத்தரவு

சென்னை: காரைக்கால் கைலாசநாதர் கோயில் பங்குனி திருவிழாவின் அனைத்து நாட்களிலும் சுவாமி ஊர்வலம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. சுவாமி ஊர்வலத்தை தடுப்போர் மீது இரக்கம் காட்டாமல் நடவடிக்கை எடுக்கவும் புதுச்சேரி அரசுக்கு கோர்ட் ஆணையிட்டுள்ளது. அமைதியான முறையில் ஊர்வலம் நடைபெற தேவையான பாதுகாப்பு அளிக்கவும் காவல்துறைக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 10 நாள் நடைபெறும் பங்குனி உத்திர விழாவில் 1, 9, 10ம் நாளில் சுவாமி உலா என்ற அறிவிப்பை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டிருந்தது.