செல்போன் பேசிக்கொண்டே தண்டவாளத்தை கடந்த மாணவி பலி!!

செல்போனில் பேசியபடியே தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது கல்லூரி மாணவி ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்த புதிய பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்த கிருத்திகா என்ற இளம்பெண் பொத்தேரியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவர் கல்லூரிக்கு மின்சார ரயிலில் சென்று வருவது வழக்கம்.

இந்நிலையில், கல்லூரி முடிந்ததும் அவர் வழக்கம் போல் வீட்டிற்குச் செல்வதற்காக பொத்தேரி ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது அவர் ரயில்வே மேம்பாலத்தைப் பயன்படுத்தாமல் செல்போனில் பேசியபடியே தண்டவாளத்தைக் கடக்க முயன்றார்.

அப்போது அந்த வழியாகச் சென்ற பல்லவன் விரைவு ரயில் மாணவி கிருத்திகா மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதைப்பார்த்த அங்கிருந்த சக கல்லூரி மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

தகவல் அறிந்து வந்த ரயில்வே போலீஸார் மாணவி உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.