அதிர்ச்சி! மது அருந்தியதால் இளம்பெண் சுட்டுக்கொலை!!

மது அருந்தியதற்காக 33 வயது பெண் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் உள்ள துக்னிவரன் சாஹிப் குருத்வாரா வளாகத்தில் பெண் ஒருவர் மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. அதனைக்கண்ட ஒருவர், அந்த பெண்ணை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தார்.

தகவல் அறிந்த காவல்துறையினர், அந்த நபரைக் கைது செய்து, சம்பவ இடத்திலிருந்து புகையிலை பாக்கெட்டுகள் மற்றும் மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், இறந்த பெண் பர்மிந்தர் கவுர் என்பதும், அவர் ஏற்கனவே மது பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும் தெரியவந்தது. அவரின் செயல் சீக்கியர்களின் மத உணர்வுகள் புண்படுத்தப்பட்டதாகக் கூறி நிர்மல்ஜித் சிங் சைனி என்ற நபர் கொலை செய்துள்ளார்.

இறந்த பெண் குறித்து மேல் தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை. அவரிடம் இருந்த பொருட்களை வைத்து குடிபோதைக்கு அடிமையாகி அவர் சிகிச்சை பெற்று வந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.