வெயிலில் நடந்து சென்ற கர்ப்பிணி உயிரிழப்பு!!

கடும் வெயிலில் நடந்தே மருத்துவமனைக்கு சென்ற கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் பகுதியை சேர்ந்த 8 மாத கரப்பிணியான சோனாலி வாகத் (21) மருத்துவமனைக்கு சென்று அடிக்கடி உடல் பரிசோதனை செய்து வந்துள்ளார். அந்த வகையில் கடந்த வெள்ளிக்கிழமை மருத்துவமனைக்கு செல்ல அவர் திட்டமிட்டிருந்தார்.

ஆனால் இவர் வசிக்கும் பகுதியில் போக்குவரத்து வசதி இல்லாததால், வீட்டில் இருந்து சுமார் 3.2 கி.மீ தூரம் வரை நடந்து நெடுஞ்சாலை பகுதிக்கு வந்துள்ளார். பின்னர் அங்கிருந்து ஆட்டோ ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்றார்.

அங்கு பரிசோதனை முடிந்த பிறகு, மீண்டும் ஆட்டோ மூலம் நெடுஞ்சாலை பகுதி வரை வந்து, பின்னர் அங்கிருந்து தனது வீட்டுக்கு நடந்தே சென்றுள்ளார். சுட்டெரிக்கும் வெயிலில் சுமார் 7 கி.மீ வரை நடந்தே சென்ற கர்ப்பிணிக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டது.

இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே நிறைமாத கர்ப்பிணி பலியானார்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது. கடும் வெயிலில் நடந்து சென்ற கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.