தானே: தடை செய்யப்பட்டுள்ள பி.எப்.ஐ., எனப்படும், பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பின் ஸ்டிக்கர்கள் மற்றும் பட்டாசுகளை, மஹாராஷ்டிர மாநில வீடுகளில் விட்டுச் சென்ற மர்ம நபர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
சர்வதேச பயங்கர வாத அமைப்பான ஐ.எஸ்., உடன் தொடர்பில் இருந்த பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பு மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு, மத்திய அரசு கடந்த ஆண்டு தடை விதித்தது.
இந்நிலையில், மஹாராஷ்டிராவின் நவி மும்பையில் உள்ள பன்வெல் பகுதியில் ஒரு வீட்டில், இந்த அமைப்பின் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருந்தன.
அருகில் இருந்த சில வீடுகளில் பட்டாசுகள், கட்டி வைக்கப்பட்டிருந்தன.
இதையடுத்து, ஸ்டிக்கர் ஒட்டிய மர்ம நபர்கள் மீது நேற்று வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement