ஜஸ்வர்யா மேனனுக்கு ஜாக்பாட்

‛நான் சிரித்தால், தமிழ்படம் 2' ஆகிய தமிழ் படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா மேனன். தற்போது தெலுங்கில் அதிகம் கவனம் செலுத்துகிறார். சமீபத்தில் இவர் நடித்த ‛ஸ்பை' படம் வெளியானது. அடுத்த ஜாக்பாட்டாக பவன் கல்யாண் பட வாய்ப்பு இவரை தேடி வந்துள்ளது.

சுஜித் இயக்கத்தில் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் படம் ஓ.ஜி . பிரியங்கா மோகன், அர்ஜுன் தாஸ், ஸ்ரேயா ரெட்டி, இம்ரான் ஹாஸ்மி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். டிவிவி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு மும்பை, ஐதராபாத் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வந்த நிலையில் இதுவரை 50 சதவீத படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை ஜஸ்வர்யா மேனன் ஒப்பந்தம் ஆகி உள்ளதாக கூறப்படுகிறது. ஸ்பை படத்தில் இவரது நடிப்பு ஓரளவுக்கு பேசப்பட்டதால் தற்போது பவன் கல்யாண் படத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.