மூன்று கதாநாயகிகளுடன் ஜெயம் ரவி நடிக்கும் 'ஜீனி'

“எல்கேஜி, கோமாளி, மூக்குத்தி அம்மன், வெந்து தணிந்தது காடு” உள்ளிட்ட படங்களைத் தயாரித்த வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் அடுத்து தயாரிக்க உள்ள படம் 'ஜீனி'.

இப்படத்தை மிஷ்கின் உதவியாளரான அர்ஜுனன் இயக்க, ஏஆர் ரகுமான் இசையமைக்கிறார். ஜெயம் ரவியின் 32வது படமாக உருவாகும் இப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், கிரித்தி ஷெட்டி, வாமிக்கா கபி ஆகிய மூவர் கதாநாயகிகளாக நடிக்க, தேவயானி முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார்.

கல்யாணி, கிரித்தி, வாமிக்கா மூவருமே ஜெயம் ரவியுடன் முதல் முறையாக ஜோடி சேர்ந்து நடிக்கிறார்கள். கல்யாணி இதற்கு முன்பு தமிழில், “ஹீரோ, மாநாடு” ஆகிய படங்களிலும், கிரித்தி ஷெட்டி, “த வாரியர், கஸ்டடி” ஆகிய படங்களிலும், வாமிக்கா கபி 'மாலை நேரத்து மயக்கம்' படத்திலும் நடித்துள்ளார்கள்.

ஒரு ஹீரோவின் படத்தில் மூன்று ஹீரோயின்களா என இன்று நடைபெற்ற பூஜையில் கலந்து கொண்டவர்கள் ஆச்சரியப்பட்டார்கள், சிலர் ஜெயம் ரவியைப் பார்த்து பொறாமையும்பட்டார்கள். விழாவில் பல திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.