ஒரு வாரத்துக்கு மழைக்கு வாய்ப்பு: உங்க ஊர் லிஸ்டுல இருக்குதா?

தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்துக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேற்று (ஜூலை 25) வடக்கு ஆந்திரா, தெற்கு ஒரிசா கடலோரப்பகுதிகளை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்றும் (ஜூலை 26) அதே பகுதிகளில் நிலவுகிறது. இதனால் தெலங்கானா, ஆந்திரா, ஒரிசா மாநிலங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.

தமிழகத்தில் இன்று காலையில், திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் மழை பதிவானது.

சட்டமன்ற மதிப்பீட்டு குழுவினர் அதன் தலைவர் க.அன்பழகன் தலைமையில் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (ஜூலை 26) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைபெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஜூலை 27ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 1ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.