உலக பேட்மிண்டன் போட்டி: இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் கால்இறுதிக்கு முன்னேற்றம்

ஹோபன்ஹேகன்,

28-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி டென்மார்க்கின் ஹோபன்ஹேகன் நகரில் நடந்து வருகிறது.

இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் நேற்று நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி 21-15, 19-21, 21-9 என்ற செட் கணக்கில் இந்தோனேசியாவின் லியோ ரோலி கார்னன்டோ- டேனியல் மார்தின் இணையை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறியது.

இதன் ஒற்றையர் 3-வது சுற்றில் 9-ம் நிலை வீரரான எச்.எஸ்.பிரனாய் (இந்தியா) 21-18, 15-21, 21-19 என்ற செட் கணக்கில் முன்னாள் உலக சாம்பியனான லோ கியான் யேவுக்கு (சிங்கப்பூர்) அதிர்ச்சி அளித்து கால்இறுதியை எட்டினார்.

பெண்கள் இரட்டையரில் இந்தியாவின் திரிஷா ஜாலி- காயத்ரி கோபிசந்த் இணை 14-21, 9-21 என்ற நேர் செட்டில் சீனாவின் சென் கியூங் சென்- ஜியா யி பேன் ஜோடியிடம் தோற்று வெளியேறியது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.