பெங்களூருவில் ஒரு நல்ல ஐடி கம்பெனியில் வேலை கிடைத்தால் போதும். நன்றாக செட்டிலாகி விடலாம் என்ற பேச்சு, இளைஞர்கள் மத்தியில் இருப்பதை தவிர்க்க முடியாது. வேலை கிடைச்சாச்சு சரி. வாடகைக்கு வீடு எடுத்து தங்கலாம் என்று தேடிப் பார்த்தால், அப்போது தான் வருகிறது வில்லங்கம். அதாங்க பெரிய சிக்கல். பெங்களூருவை பொறுத்தவரை மாரதஹள்ளி, பெல்லந்தூர், ஒயிட்ஃபீல்டு உள்ளிட்ட பகுதிகளில் ஐடி நிறுவனங்கள் அதிகமிருக்கின்றன.
பெங்களூருவில் வீட்டு வாடகைஇதனை ஒட்டிய பகுதிகளில் ஐடி ஊழியர்கள் பலரும் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி வருகின்றனர். மேற்குறிப்பிட்ட பகுதிகளில் எவ்வளவு வாடகை என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா விசாரித்தது. இதற்காக புரோக்கர்கள், வீட்டு உரிமையாளர்கள், வாடகைதாரர்கள் ஆகியோரிடம் விசாரித்தனர். அவர்கள் அளித்த தகவலின்படி, 1000 சதுர அடிக்கும் குறைவாக உள்ள 2 BHK வீட்டிற்கு மாதம் 30,000 ரூபாய் வாடகை. ஒருவேளை பெரிய பிளாட்களில் வாடகைக்கு போனால் 50,000 ரூபாய் வரை சொல்கிறார்கள்.கொரோனாவிற்கு முன்பும், பின்பும்என்னங்க இது? இவ்வளவு வாடகையா? வாங்குற சம்பளத்துல பாதி வாடகைக்கே போயிடும் போலயே? என்ற சிந்தனை வருவதை பார்க்க முடிகிறது. இதுபற்றி வீட்டு உரிமையாளர்கள் சிலரிடம் விசாரித்தால், கொரோனா பெருந்தொற்று காலத்திற்கு முன்பு 2 BHK அல்லது பிளாட்களில் 12,000 முதல் 20,000 ரூபாய் வரை வாடகை வாங்கினோம். தற்போது 25,000 முதல் 40,000 வரை வாடகை வாங்குகிறோம். 1 BHK என்று எடுத்து கொண்டால் கொரோனாவிற்கு முன்பு 7,000 முதல் 10,000 வரை வாங்கினோம். தற்போது 15,000 முதல் 25,000 வரை வாடகை வாங்குகிறோம்.
ஐடி நிறுவனங்கள் சலுகைகுறிப்பாக ஒயிட்ஃபீல்டு பகுதியில் வாடகைக்கு வீடே கிடைப்பதில்லையாம். எல்லாம் ஹவுஸ்புல்லாக காட்சி அளிக்கின்றன. ஆனால் புதிது புதிதாக வரும் ஊழியர்களால் வாடகைக்கு வீடுகளின் தேவை பெரிதும் அதிகரித்துள்ளது. பலரும் வீடு தேடி பம்பரமாய் சுழன்று கொண்டிருக்கிறார்கள். பெங்களூருவில் உள்ள பல்வேறு ஐடி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வாரத்தில் இரண்டு முறை வீட்டிலிருந்தே வேலை செய்யலாம் (Work From Home) என்று அறிவுறுத்தியுள்ளன.
Paying Guest கலாச்சாரம்இதனால் பெங்களூருவிலேயே தங்கி வேலை செய்ய பலரும் விரும்புகின்றனர். இதன் காரணமாக வீடுகளின் தேவையும் பல மடங்கு அதிகரித்துள்ளது. இதில் மற்றொரு விஷயமும் இருக்கிறது. பேச்சுலராக வரும் ஐடி ஊழியர்கள் சிலர், வீடுகளை வாடகைக்கு எடுத்து Paying Guest என்ற வகையில் புதிதாக சிலரை சேர்த்து கொள்கின்றனர். இத்தகைய நடவடிக்கைகள் பல இடங்களில் இருப்பதாக தெரிகிறது. இதை கருத்தில் கொண்டே வீட்டை வாடகைக்கு விடும் போதே பல்க்காக ஒரு பெரிய தொகைக்கு வாடகைக்கு விட்டு விடுகின்றனர் உரிமையாளர்கள்.
தாமதமாகும் கட்டுமானப் பணிகள்இந்த வாய்ப்பை பயன்படுத்தி புதிதாக அபார்ட்மெண்ட் கட்டுவதற்கான வேலைகளும் ஒருபுறம் நடந்து வருகின்றன. NoBroker நிறுவனம் ரியல் எஸ்டேட் தொடர்பான அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டிருந்தனர். அதில், பெங்களூருவில் வீடுகளின் தேவை அதிகரித்து வருவதற்கு ஏற்ப கட்டுமானங்கள் விரைவாக நடைபெறுவதில்லை. இதற்கு விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. இதனால் புதியவர்கள் வந்து தங்குவதில் சிரமங்கள் நீடித்து வருகின்றன.படிப்படியாக வாடகை உயர்வுAnarock என்ற ரியல் எஸ்டேட் கன்சல்டண்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, நடப்பாண்டின் முதல் காலாண்டில் 2 BHK வீடுகளுக்கு சராசரி வாடகை ஒயிட்ஃபீல்டு பகுதியில் 28,000 ரூபாய், ஓ.ஆர்.ஆர் – மாரதஹள்ளி பகுதியில் 30,000 ரூபாய், பெல்லந்தூரில் 32,000 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இதுதவிர பராமரிப்பு கட்டணம் வேறு தனியாக செலுத்த வேண்டும். தற்போது மூன்றாவது காலாண்டில் இருப்பதால் வாடகைக்கு சற்றே அதிகரித்திருக்கும் எனக் கூறப்படுகிறது.