நெருக்கமாக இருந்த வீடியோக்களை வெளியிட்ட முன்னாள் காதலன்; அலறிய இளம்பெண்… நடவடிக்கை எடுத்த போலீஸ்!

சென்னை புதுப்பேட்டையில் வசித்து வருபவர் கவிதா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). 20 வயதான கவிதா, பெரம்பூர் பகுதியில் வசித்து வரும் ஜோஷ்வா என்பவரைக் காதலித்து வந்தார். கடந்த ஒராண்டுக்கு முன்பு கவிதாவுக்கும் ஜோஷ்வாவுக்கும் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக, இருவரும் பிரிந்துவிட்டனர். இந்த நிலையில் கவிதாவும் ஜோஷ்வாவும் நெருக்கமாக இருந்தபோது எடுத்த வீடியோக்களை ஜோஷ்வா, சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த கவிதா, தன்னுடைய அம்மாவிடம் விவரத்தைக் கூறினார்.

கைது

இதையடுத்து கவிதாவின் அம்மா, சென்னை வேப்பேரி காவல் நிலையத்தில் வீடியோ ஆதாரங்களுடன் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ஜோஷ்வா மீது வழக்கு பதிவுசெய்தனர். பின்னர் அவரிடம் வீடியோ குறித்து விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பிறகு ஜோஷ்வாவைக் கைதுசெய்த போலீஸார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.