சென்னை: நடிகர்கள் கார்த்தி, விஷால், ஆர்யா உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களை வைத்து அடுத்தடுத்த கிராமத்து கதைக்களங்களில் படங்ளை கொடுத்துள்ளவர் இயக்குநர் முத்தையா. குட்டிப்புலி படம் மூலம் கோலிவுட்டில் இயக்குநராக அறிமுகமான முத்தையா தொடர்ந்து விருமன், கொம்பன், மருது என அடுத்தடுத்த வெற்றிப் படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்துள்ளார். பெரும்பாலும் கிராமத்து பின்னணியிலேயே இவர் தன்னுடைய படங்களை கொடுத்துள்ளார்.