செப்.11, 14, 15-ம் தேதிகளில் விநாயகர் ஊர்வலம் நடத்தலாம்: சிலைகளை கடலில் கரைக்க 4 இடங்களில் அனுமதி

சென்னை: சென்னையில், விநாயகர் சிலைகளை செப். 11, 14, 15 ஆகிய தேதிகளில் ஊர்வலமாக எடுத்துச் சென்று 4 இடங்களில் கடலில் கரைக்க போலீஸார் அனுமதி வழங்கி உள்ளனர். விநாயகர் சதுர்த்தி விழா அடுத்த மாதம் 7-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் இந்து அமைப்புகள், தன்னார்வலர்கள் மற்றும் குடியிருப்பு வாசிகள் உட்பட பல்வேறு தரப்பினர் விநாயகர் சிலைகளை நிறுவி, அதை வழிபட்டு வணங்குவார்கள். பின்னர், ஒருவார காலம் சிறப்பு பூஜைகள், அன்னதானம் நடைபெறும். பிறகு, … Read more

ஜப்பான் தற்காப்பு கலை அகிடோ, ஜியு-ஜிட்சுவில் ‘பிளாக் மற்றும் புளூ பெல்ட்’ வாங்கிய ராகுல்: 8 நிமிட வீடியோவை வெளியிட்டார்

புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க் கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் நேற்று வீடியோ ஒன்று வெளியிட்டு கூறியதாவது: இந்த ஆண்டு தொடக்கத்தில் நான் மேற்கொண்ட பாரத் ஜோடோயாத்திரையின் போது, தற்காப்புக் கலை பயிற்சியில் ஈடுபட்டேன். விரைவில் பாரத் டோஜோ (தற்காப்புக் கலை அரங்கம் அல்லது பள்ளி) யாத்திரை வரும். பாரத் ஜோடோ யாத்திரையின் போது நான் தங்கியிருக்கும் இடத்தில் மாலை வேளையில் தினமும் ‘ஜியு-ஜிட்சு’ என்ற ஜப்பானிய தற்காப்புக்கலை … Read more

நா த க ஒருங்கிணைப்பாளர் சீமான்மீது வழக்கு பதிய உத்தரவு

சென்னை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியை பற்றி சர்ச்சைக்குரிய வார்த்தையை பயன்படுத்தியதாக சீமான் மீது வழக்கு பதிய உத்தரவிடப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த விக்கரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரத்தின் போர்ஹு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியி விமர்சிப்பதற்காக சண்டாளன் என்ற வார்த்தையை பேசியதாக கூறப்படுகிறது. சண்டாளன் என்பது ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின் ஜாதிப் பெயர் ஆகும். எனவே வேறு ஒரு சமூக பெயரைச் … Read more

நாங்கள் 2 பேரும் அந்த முடிவில்தான் இருக்கிறோம்.. பல நாள் சீக்ரெட்டை சொன்ன தமன்னாவின் காதலர்

சென்னை: நடிகை தமன்னா தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். பல படங்களில் நடித்த அவருக்கு பாலிவுட் கதவும் திறந்தது. இதனையடுத்து அங்கு நடித்துக்கொண்டிருந்தபோது விஜய் வர்மாவை காதலிக்க ஆரம்பித்தார். இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் தமன்னா பற்றி அவரது காதலர் விஜய் வர்மா பேசியிருக்கும்

இன்சூரன்ஸ் பணத்திற்காக நண்பனின் தலையில் கல்லை போட்டு கொன்ற வாலிபர்

பெங்களூரு, கர்நாடக மாநிலம் மைசூரு அருகே உள்ள வருணா பகுதியை சேர்ந்தவர் விஜய். இவரது நண்பர் சிவா. இவர்கள் 2 பேரும் கடந்த 15 ஆண்டுகளுக்கு நண்பர்களாக பழகினர். இதில் சிவா சூதாட்டத்திற்கு அடிமையாகி இருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவர் லட்சக்கணக்கில் கடன் வாங்கி உள்ளார். இதையடுத்து வாங்கிய கடனை சிவாவால் திருப்பி கொடுக்க முடியவில்லை. இதனால் அவர் கடனை அடைக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார். இந்தநிலையில், தனது நண்பர் விஜய் பெயரில் ரூ.17 லட்சத்தில் இன்சூரன்ஸ் … Read more

இலங்கை சிறையில் இருந்து ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் விடுதலை

கொழும்பு, கடந்த ஜூலை 23-ந் தேதி 9 ராமேசுவரம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். இந்த சம்லவம் தமிழக மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியது. இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் உடனடியாக இலங்கை சிறையில் உள்ள அனைத்து தமிழக மீனவர்களையும், படகுகளையும் மீட்டு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்களும், மீனவ அமைப்புகளின் நிர்வாகிகளும் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் விடுதலை … Read more

முதல்வர் ஸ்டாலினுக்கு அமெரிக்காவில் உற்சாக வரவேற்பு

சென்னை: அமெரிக்காவில் முதல்வர் ஸ்டாலினுக்கு இந்திய துணை தூதர் ஸ்ரீகர் ரெட்டி, மற்றும் அமெரிக்கா வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தமிழகத்துக்கு அதிக அளவில் முதலீடுகளை ஈர்க்கவும், படித்த இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், மேலும் பல புதிய தொழில்களை தமிழகத்தில் உருவாக்கும் முயற்சியாகவும், முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். சென்னையில் இருந்து கடந்த 27-ம் தேதி இரவு விமானத்தில் புறப்பட்ட அவர், அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ மாகாணத்துக்கு நேற்று காலை சென்றடைந்தார். மனைவி … Read more

கொல்கத்தா போராட்டத்தில் போலீஸார் பீய்ச்சியடித்த தண்ணீரின் வேகத்தை தாங்கி நின்ற முதியவர்

கொல்கத்தா: கொல்கத்தாவில் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதற்கு நீதி கேட்டு மாணவர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை தலைமைச் செயலகம் நோக்கி பேரணி சென்றனர். ஹவுரா பாலத்தில் மாணவர்களை தடுத்து நிறுத்திய போலீஸார்அவர்களை கலைக்க அவர்கள் மீது தண்ணீரை பீய்ச்சியடித்தனர். அப்போது மாணவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். எனினும் காவி உடை அணிந்த முதியவர் ஒருவர் தேசியக்கொடியை அசைத்தவாறு அந்த இடத்தை விட்டு சற்றும் அகலாமல் நின்றிருந்தார். போலீஸார் பீய்ச்சியடித்த தண்ணீரை அவர் தனி ஆளாக … Read more

நெல்லையில் தேசிய பேரிடர் மீட்புக் குழு மையம் அமைக்கும் மத்திய அரசு

நெல்லை மத்திய அரசு நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே தேசிய பேரிடர் மீட்புக்குழ் மையம் அமைக்க முடிவு செய்துள்ளது. மத்திய அர்சு தென் தமிழகம், கேரளாவில் பேரிடர்களின் போது பணியில் ஈடுபட ஏதுவாக நெல்லை மாவட்டத்தில் மையம் அமைக்க திட்டமிட்டுள்ளது.  இந்த மையத்தில் கதிரியக்கம், ரசாயனம் உள்ளிட்டவைகளை சார்ந்த பேரிடர்களையும் சமாளிக்கும் வகையில் மையத்தில் வசதிகள் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. கூடங்குளம் அணுமின் நிலையம் அருகே உள்ள ராதாபுரத்தில் என் டி ஆர் எப் … Read more

வாழை படத்திற்காக எவ்ளோ உழைச்சிருக்காரு.. கேரக்டராக மாறிய மாரி செல்வராஜ்.. சூட்டிங் ஸ்பாட் வீடியோ!

       சென்னை: இயக்குனர் மாரி செல்வராஜ் அடுத்தடுத்து அழுத்தமான கதைக்களங்கள் மூலம் ரசிகர்களை சந்தித்து வருகிறார். அந்த வகையில் பரியேறும் பெருமாள், கர்ணன் மாமன்னன் போன்ற படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்த மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வாழை படம் வெளியாகி உள்ளது. வாழை படம் ரசிகர்களை மிகப்பெரிய