புதுச்சேரியில் இதுவரை எச்எம்பிவி பாதிப்பு எதுவும் பதிவாகவில்லை: அரசு அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை எச்எம்பிவி பாதிப்பு எதுவும் பதிவாகவில்லை என்று புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக புதுச்சேரி அரசு நலவழித்துறை தரப்பில் இன்று தெரிவித்ததாவது: சீனாவில் மனித மெட்டாப்நியூமோவைரஸ் (HMPV) நோய் பரவுவது குறித்து . இந்திய அரசு ஒரு அறிக்கையை வெளியிட்டது. இது மற்ற சுவாச வைரஸ் போன்றது, இது குளிர்காலத்தில் பொதுவான குளிர் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துகிறது. புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை எச்எம்பிவி பாதிப்பு எதுவும் பதிவாகவில்லை புதுச்சேரி … Read more

சத்தீஸ்கரில் நக்சல்களின் தாக்குதலில் ரிசர்வ் காவல் படை வீரர்கள் 8 பேர் வீர மரணம்

புதுடெல்லி: சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில், மாவட்ட ரிசர்வ் காவல் படை வீரர்களின் வாகனத்தை நக்சல்கள் வெடிகுண்டு மூலம் வெடிக்கச் செய்ததில் 8 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். ஓட்டுநரும் உயிரிழந்தார். சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் நக்சலைட் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட பாதுகாப்புப் படையினர் பின்னர் தங்கள் ஸ்கார்பியோ வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தனர். குத்ரு காவல் நிலையத்திற்கு உட்பட்ட அம்பேலி கிராமத்திற்கு அருகில் வாகனம் வந்தபோது, வெடிகுண்டு வெடித்ததில் மாவட்ட ரிசர்வ் படை வீரர்கள் 8 பேரும், ஒரு … Read more

மதகஜராஜா : `12 வருடங்களுக்கு பின் ரிலீஸ் ஆவதின் மர்மம் என்ன?’ – உண்மை பகிரும் திருப்பூர் சுப்ரமணியம்

சுந்தர்.சி. இயக்கத்தில் விஷால், சந்தானம் நடித்திருக்கும் ‘மதகஜராஜா’ பொங்கல் ரேஸில் பங்கேற்கிறது. 12 ஆண்டுகளுக்கு முன் ரெடியான இப்படம், தயாரிப்பு நிறுவனத்தின் நிதி நெருக்கடியினால், ரிலீஸ் தாமதமாகி கொண்டே இருந்தது. இப்போது விடிவு காலம் பிறந்திருக்கிறது. திரையரங்க உரிமையாளரும், தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான திருப்பூர் சுப்ரமணியம் தான், இந்த படத்தை வாங்கி வெளியிடுகிறார் என்ற தகவல் பரவியது. இதற்காக ஒரு பெரும் தொகையை பலருக்கும் செட்டில் செய்து, படத்தை கொண்டு வருகிறார் என்ற தகவல் பரவி வருகிறது. இதுகுறித்து … Read more

BSNL … ஒரு மாத கூடுதல் வேலிடிட்டியுடன்… அதிக டேட்டா.. ஜனவரி 16 வரை மட்டுமே வாய்ப்பு

BSNL Recharge Plans: ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் போன்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு கடும் போட்டி அளிக்கும் வகையில் BSNL நிறுவனம் பல அசத்தல் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகிறது. அந்தவகையில் 2025 புத்தாண்டில், BSNL அதன் வருடாந்திர திட்டங்களில் ஒன்றில் அதன் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வேலிடிட்டி மற்றும் கூடுதல் டேட்டாவை வழங்குகிறது. இப்போது நீங்கள் வருடாந்திர திட்டத்தில் 12 மாதங்கள் வேலிடிட்டி உள்ள நிலையில், இப்போது உங்களுக்கு திட்டத்தில் 14 மாதங்கள் வேலிடிட்டி கிடைக்கும். … Read more

மகாராஷ்டிராவில் 3.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

பால்கர் இன்று மகாராஷ்டிர மாநிலத்தில் 3.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது/ கடந்த சில நாட்களாகஇந்தியாவின் வடமாநிலங்களில் தொடர்ந்து நிலநடுக்கம் உணரப்பட்டு வருகிறது. இவற்றால் பாதிப்பு எதுவும் இல்லாவிட்டாலும் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்த வரிசையில் இன்று அதிகாலை சுமார் 4.15 மணி அளவில் மகாராஷ்டிர  மாநிலம் பால்கர் பகுதியில்  நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 3.7 ஆக பதிவானதாக மாவட்ட பேரிடர் மேலாண்மை பிரிவு தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து … Read more

சென்னை: தொழிலதிபரை நம்பவைத்து ரூ.10 லட்சம் மோசடி; `சென்ட்டிமென்ட்' சங்கர் சிக்கியது எப்படி?

திருச்சி மாவட்டம், இளங்காகுறிச்சி, பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் முகமது நசுருதீன் (43). இவர் கட்டட பொருள்கள் சப்ளை மற்றும் பெயின்டிங் வேலை செய்து வருகிறார். இவருக்கு தொழில் முறையில் சுதன் என்பவர் மூலம் சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சேர்ந்த சங்கர் என்பவர் அறிமுகமானார். பின்னர் சங்கரும் முகமது நசுருதீனும் நட்பாக பழகி வந்தனர். கடந்த 2024-ம் ஆண்டு சங்கர், தனது தங்க நகை அடமானத்தில் உள்ளதாகவும் அந்தக் கடனை அடைக்க உதவி செய்யுங்கள் என முகமது நசுருதீனிடம் … Read more

பெண்களின் பாதுகாப்பு முதல் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் வரை: ஆளுநர் உரை முக்கிய அம்சங்கள்

பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யவும் அரசு எடுத்து வரும் தொடர் நடவடிக்கைகளால் தமிழகத்தில் பெண்கள் அதிகளவில் பணிபுரியும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், செயற்கை நுண்ணறிவு இயக்கம் தொடங்கி 6 ஆண்டுகளில், தலா 3.50 லட்சத்தில் கிராமப்புறங்களில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் இலக்கு வரை பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. சட்டப்பேரவையில் திங்கள்கிழமை பேரவைத் தலைவர் அப்பாவு வாசித்த ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள்: பெண்களின் பாதுகாப்பு: சட்டம் – ஒழுங்கை சிறந்த … Read more

‘இந்தியா கேட்’ பெயரை ‘பாரத் மாதா துவார்’ என மாற்றுக: பிரதமர் மோடிக்கு பாஜக கோரிக்கை

புதுடெல்லி: டெல்லியிலுள்ள இந்தியா கேட் பெயரை பாரத் மாதா துவார் என மாற்றும்படி கோரிக்கை எழுந்துள்ளது. இதற்காக, பிரதமர் நரேந்திரமோடிக்கு பாஜகவின் சிறுபான்மை பிரிவு தலைவரான ஜமால் சித்திக்கீ கடிதம் எழுதியுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 வரும் குடியரசு தினத்தன்று, கர்தவ்யா பாதையில் அணிவகுப்பு நடத்தப்படுகிறது. இதில் முப்படைகளின் தளபதிகள் அணிவகுப்பு நடத்துகிறார்கள். இந்த ஊர்வலத்தில், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்வேறு வகையான கலாச்சார நிகழ்ச்சிகளும் இடம் பெறுகின்றன. இவ்வேளையில், அந்த ஊர்வலம் நடைபெறும் … Read more

ஆஸ்திரேலியா WTC பைனல் போகாது… இந்த மேஜிக் நடந்தால் – இந்தியாவுக்கு வாய்ப்பு இருக்கா?

ICC World Test Championship Final 2025: ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரும் ஜூன் மாதத்தில், இங்கிலாந்தில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்ற இந்த 2023-25 சுழற்சியில் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய அணிகள் WTC புள்ளிகள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்க கடுமையாக போராடின. அந்த வகையில் சொந்த மண்ணில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதன் … Read more