குன்னூர் காட்டேரி பூங்காவில் முதல்முறையாக மலை பயிர்கள் கண்காட்சி இன்று தொடக்கம்

குன்னூர்: நீல​கிரி மாவட்​டத்​தில் கோடை விழா​வின் முக்​கிய நிகழ்​வு​களான காய்​கறி கண்​காட்​சி, மலர்கள் கண்​காட்​சி, ரோஜா கண்​காட்சி மற்​றும் பழக்​கண்​காட்சி ஆகியவை நிறைவு பெற்​றுள்ளன. இந்​நிலை​யில், இறுதி நிகழ்ச்​சி​யாக குன்​னூர் காட்​டேரி பூங்​கா​வில் இந்த ஆண்டு முதல்​முறை​யாக மலைப் பயிர்​கள் கண்​காட்சி இன்று (மே. 30) தொடங்க உள்​ளது.

இது தொடர்​பாக தோட்​டக்​கலைத் துறை அதி​காரி​கள் கூறிய​தாவது: மலைப் பயிர்​கள் கண்​காட்​சிக்​காக, காட்​டேரி பூங்​காவில் இரண்டு லட்​சம் மலர் நாற்​றுகள் நடவு செய்​யப்​பட்டு அலங்​கரிக்​கப்​பட்​டுள்​ளன.

இது மட்​டுமில்​லாமல் ஆயிரக்​கணக்​கான தொட்​டிகளில் பல்​வேறு வகை​யான மலர்​கள் காட்​சிப்​படுத்​தப்பட உள்​ளன. மேலும், பனை, கோகோ, இளநீர் வைத்து பனை குடிசை அமைக்​கப்​பட்​டுள்​ளது. தேயிலை, காபி, ரப்​பர், வெற்​றிலை, பாக்கு உட்பட 10 வகை​யான மலைப் பயிர்​களைக் கொண்​டு, பல்​வேறு வடிவ​மைப்​பு​கள் வைக்​கப்​படு​கின்​றன. இவ்​வாறு அவர்​கள்​ கூறினர்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.