நெல் மகசூலை அதிகரிக்க பூச்சிக்கொல்லி, பூஞ்சாணக்கொல்லி அறிமுகம்: ‘மேட் இன் இந்தியா’ திட்டத்தில் பிஏஎஸ்எப் நிறுவனம் தயாரிப்பு

ஹைத​ரா​பாத்: உலகிலேயே அதிக நெல் உற்​பத்தி செய்​யும் 2-வது பெரிய நாடாக இந்​தியா உள்​ளது. நெல்உற்​பத்​தி​யில் உரத்​தின் பங்கு மிக முக்​கிய​மான​தாகும். உரங்​கள் நெல்​லுக்கு தேவையான ஊட்​டச்சத்​துக்​களை வழங்​கு​கின்​றன. உறை கரு​கல் நோயை ஆரம்​பத்​திலேயே கண்டு பிடித்து தடுக்​கா​விட்​டால், நெல் வளர்ச்சி 40 முதல் 50 சதவீதம் வரை பாதிக்​கப்​படும் என்​கிறது விவ​சா​யத் துறை. இதற்கு தீர்வு ஏற்​படுத்​தும் வகை​யில், பிஏஎஸ்​எப் நிறு​வனம் தனது மும்​பை, புனே ஆய்​வகங்​களில் தொடர்ச்​சி​யாக நடத்​திய ஆய்​வில் புதிய ரசாயன திர​வங்​களை கண்​டு​பிடித்​துள்​ளது.

இதுகுறித்​து, பிஏஎஸ்​எப் தெற்​காசிய நிர்​வாக இயக்​குநர்​கள் குழு​வின் உறுப்​பினர் மைக் ஹெய்ன்​ஸ், மூத்த துணைத் தலை​வர்​கள் மார்கோ க்ரோஸ்​டானோவிக், சிமோன் பார்க், பிஏஎஸ்​எப் இந்​தியா நிறு​வனத்​தின் நிர்​வாக இயக்​குநர் அலெக்​சாண்​டர் கெர்​டிங், பிஏஎஸ்​எப் இந்​தி​யா​வுக்​கான வேளாண் தீர்​வு​கள் பிரி​வின் வணிக இயக்​குநர் கிரிதர் ரனுவா ஆகியோர் ‘வேலெக்​சி​யோ’ மற்​றும் ‘மிபிலி​யா’ என்ற புதிய ரசாயன திர​வங்​களை ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் வெளி​யிட்ட​னர். பின்னர் அவர்கள் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: இந்​தி​யா​வில் 130 ஆண்​டு​களுக்​கும் மேலாக விவ​சா​யத்​துறை​யுடன் இணைந்து செயல்​படும் எங்​களது பிஏஎஸ்​எப் என்ற பிரபல ரசாயன உற்​பத்தி நிறு​வனம், ‘வேலெக்​சி​யோ’ மற்​றும் ‘மிபிலி​யா’ என்ற இரண்டு நவீன ரசாயன திர​வங்​களை வெளி​யிட்​டுள்​ளது.

இந்​தி​யா​விலேயே கண்​டு​பிடிக்​கப்​பட்ட ‘வேலெக்​சி​யோ’ என்ற பூச்​சிக்​கொல்லி திரவம், தாவரங்​களின் முழு வளர்ச்​சி​யை​யும், அறு​வடை காலம்​வரை பூச்​சிகளிட​மிருந்து முழு பாது​காப்​பை​யும் வழங்​கும் பிரெக்​ஸியோ ஆற்​றல் கொண்​ட​தாக இருக்​கும். அதே​போல ‘மிபிலி​யா’ என்ற பூஞ்​சாணக்​கொல்​லி, ரெவி​சால் ரசாயனத்​தில் முதன்​மை​யானது. இந்​திய சுற்​றுச்​சூழலுக்கு ஏற்ப நெல் பயிர்​களுக்கு முழு​மை​யான வளர்ச்​சி​யும், பூஞ்​சாண நோயி​லிருந்து பாது​காப்​பும் வழங்​கு​கிறது.

இதுதொடர்​பாக நாங்​கள் நடத்​திய ஆய்​வு​களில், வேலெக்​சியோ மூலம் நெல் பயிர்​களுக்கு மிகச் சிறப்​பான வளர்ச்சி கிடைப்​பது உறுதி ஆனது. லெக்​சியோ தெளிக்​கப்​பட்ட நெல் வயல்​களில் பயிர்​கள் வலு​வான தண்​டு, சிறப்​பான இழை தன்மை வளர்ச்​சி, அடர்த்​தி​யான வேர்​கள் மற்​றும் அகல​மான கொடி (கண்​ணாடி இலை) இலைகளு​டன் வளர்​வ​தால், நெல் விவ​சா​யிகளுக்கு அதிக மகசூல் கிடைக்​கும் என உறு​தி​யளிக்​கிறோம். மேலும், இந்த பூஞ்​சாணக்​கொல்​லி, நெல்​லில் இலை​யுறைக்கரு​கல் நோய் மற்​றும் டர்ட்டி பானிகல் நோய்​களை விரை​வாகக்கட்​டுப்​படுத்​தி, நீண்ட காலத்​திற்​குப் பாது​காப்பு வழங்​கும். இந்த இரு ரசாயன திர​வங்​களும் இந்​தி​யா​வில் நெல் பயிர்​களை பூச்​சிகளின் தாக்​குதலில் இருந்​தும், சுற்​றுச்​சூழல் பாதிப்​பு​களில் இருந்​தும் பாது​காத்து நெல் உற்​பத்​தியை அதி​கரிக்​கச் செய்​யும் என்​ப​தில் ஐயமில்​லை.

‘மேட் இன் இந்​தி​யா’ திட்​டத்​தில் புனே மற்​றும் மும்​பை​யில் உள்ள ஆய்​வகத்​தில் தயாரிக்​கப்​பட்ட வேலெக்​சி​யோ, உலக சந்​தை​யிலும் கால் பதிக்​கிறது. நெல் பயி​ரில் நோய் தாக்​குதலை தடுக்​கா​விட்​டால், 25 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை இழப்பு ஏற்​படலாம். அதனால், விவ​சா​யிகளின் தேவைக்கு ஏற்ப இந்த பரு​வத்​தில், நெல் நடவு தொடங்​கும் போது, வேலெக்​சியோ பூச்​சிக்​கொல்லி மற்​றும் மிபிலியா பூஞ்​சாணக்​கொல்லி ஆகியவை ஜூன் மாதத்​திலிருந்து சந்​தை​யில் கிடைக்​கும், என்​றனர்.

விலை விவரம்: ‘வேலெக்​சி​யோ’ 60 மிலி கொண்ட ரசாயன திர​வத்​தின் விலை ரூ.1,755. இது ஒரு ஏக்​கருக்கு போது​மான​தாக இருக்​கும். 120 மிலி கொண்ட திர​வத்​தின் விலை ரூ.3,360. அதே​போல, 300 மிலி கொண்ட திர​வத்​தின் விலை ரூ. 7,920. ஒரு ஏக்​கர் நெல் பயிருக்கு தேவை​யான மிபிலியா திர​வத்​தின் 120 மிலி விலை ரூ.1,092. அதே​நேரத்​தில் 360 மிலி கொண்ட திர​வத்​தின் விலை ரூ.3,096.உலகில் நெல் உற்​பத்தி செய்​யும் நாடு​களில் இந்​தியா மிகப்​பெரிய பங்கு வகிக்​கிறது. குறிப்​பாக, ஒவ்​வொரு ஆண்​டும் 100 மில்​லியன் மெட்​ரிக் டன்​களுக்கு மேல், அதாவது உலக நெல் வர்த்​தகத்​தில் 40 சதவீத பங்​களிப்​புடன் முக்​கிய இடத்தை பெற்​றுள்​ளது.

சீனா​வில் ஒரு ஹெக்​டேரில் 7 டன் நெல் அறு​வடை செய்​யப்​படு​கிறது. ஆனால், இந்​தி​யா​வில் இது 4.2 டன்​னாக மட்​டுமே உள்​ளது. இதனால், இந்​திய நெல் விவ​சா​யிகளுக்​கு, நோய் தடுப்பு திரவங்கள் அவசி​யம் தேவை என்​பதை உணர்ந்​த​தால், பல்​வேறு ஆராய்ச்​சிகளின் அடிப்​படை​யில் இந்த இரண்டு ரசாயன திர​வங்​களும் தயாரிக்​கப்​பட்​டுள்ளன என்​கிறது பிஏஎஸ்​எப்.

தமிழகத்​தில் உற்​பத்தி குறைந்​தது: தமிழகத்​தில் காவிரி டெல்டா மாவட்​டங்​களில் சுமார் 18 லட்​சம் ஏக்​கரிலும், காவிரி டெல்டா அல்​லாத மாவட்​டங்​களில் சுமார் 34 லட்​சம் ஏக்​கரிலும் நெல் பயி​ரிடப்​படு​கிறது.2023-24 காலாண்​டில், தமிழ்​நாட்​டின் நெல் விளைச்​சல், தேசிய சராசரியை விட (2.74 டன்​/ஹெக்​டேர்) குறை​வாக, 2.31 டன்​/ஹெக்​டேர் ஆக பதி​வாகி​யுள்​ளது.இதற்கு பல்​வேறு காரணி​களை விவ​சா​யத் துறை தெரி​வித்​துள்​ளது. 2024 – ம் ஆண்​டில், காவிரி டெல்டா பகு​தி​யில் நீர் பற்​றாக்​குறை காரண​மாக சாம்பா பயிரின் விளைச்​சல் 40% குறைந்தது குறிப்பிடத்தக்கது.

– ஹைத​ரா​பாத்​தில் இருந்து எஸ்.அருள்மொழிச் செல்​வன்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.