மேற்கு வங்கம் முழுவதும் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ளது: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ஊழல் அதிகரித்துள்ளது என பிரதமர் நரேந்திர மோடி நேற்று குற்றம்சாட்டினார்.

மேற்​கு​வங்​கத்​தின் அலிப்​பூர்​து​வாரில் நேற்று நடை​பெற்ற அரசு நலத்​திட்ட விழா​வில் பிரதமர் மோடி பங்​கேற்​றார். அப்​போது அலிப்​பூர்​து​வார் மற்​றும் கூச்​பெஹார் மாவட்​டங்​களில் ரூ.1,010 கோடி மதிப்​பிலான எரி​வாயு விநி​யோக திட்​டத்​துக்கு அவர் அடிக்​கல் நாட்​டி​னார்.

விழா​வில் அவர் பேசி​ய​தாவது: அண்​மை​யில் மேற்​கு​வங்​கத்​தின் முர்​ஷி​தா​பாத், மால்​டா​வில் வன்​முறை சம்​பவங்​கள் அரங்​கேறின. அப்​பகுதி பொது​மக்​கள் மீது கொடூர தாக்​குதல்​கள் நடத்​தப்​பட்​டன. அவர்​களின் சொத்​துகள் சூறை​யாடப்​பட்​டன. அவர்​களின் வீடு​கள் தீ வைத்து எரிக்​கப்​பட்​டன. திரிண​மூல் காங்​கிரஸ் கொடுங்​கோல் ஆட்​சியை நடத்தி வரு​கிறது. இந்த ஆட்​சி​யில் அப்​பாவி மக்​களுக்கு அநீதி இழைக்​கப்​படு​கிறது.அரசு பள்ளி ஆசிரியர் நியமனத்​தில் மிகப்​பெரிய மோசடி நடை​பெற்று இருக்​கிறது. இந்த விவ​காரத்​தில் ஏராள​மான ஆசிரியர்​கள் வேலை​யிழந்து உள்​ளனர். மாநிலத்​தின் கல்​வித் துறை முழு​மை​யாக சீர்​குலைந்​திருக்​கிறது.

சட்​டம், ஒழுங்கு சீர்​குலைவு: மேற்​கு​வங்​கத்​தில் பல்​வேறு பிரச்​சினை​கள் பூதாகர​மாகி வரு​கின்​றன. குறிப்​பாக மாநிலம் முழு​வதும் சட்​டம், ஒழுங்கு சீர்​குலைந்து வன்​முறை சம்​பவங்​கள் அதி​கரித்து வரு​கின்​றன. பெண்​களுக்கு எதி​ரான குற்​றங்​கள் கணிச​மாக அதி​கரித்து உள்​ளன. வேலை​வாய்ப்​பின்மை பிரச்​சினை​யால் இளைஞர்​கள் பரிதவிக்​கின்​றனர். அரசு நிர்​வாகம் சீர்​குலைந்து அனைத்து துறை​களி​லும்ஊழல் வியாபித்து பரவி உள்​ளது. ஏழைகளின் உரிமை​கள், சொத்​துகள் பறிக்​கப்​பட்டு வரு​கின்​றன.

கடந்த ஏப்​ரல் 22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்​காமில் சுற்​றுலா பயணி​கள் மீது தீவிர​வா​தி​கள் தாக்​குதல் நடத்​தினர். நமது சகோ​தரி​களின் குங்​குமம் அழிக்​கப்​பட்​டது. இதற்கு பதிலடி​யாக ஆபரேஷன் சிந்​தூர் ராணுவ நடவடிக்​கை​யின் மூலம் கடந்த 7-ம் தேதி பாகிஸ்​தானில் செயல்​பட்ட 9 தீவிர​வாத முகாம்​கள் அழிக்​கப்​பட்​டன. அதன்​பிறகு நடை​பெற்ற போரில் பாகிஸ்​தானின் விமான படைத் தளங்​கள் அழிக்​கப்​பட்​டன.

குங்​குமத்​தின் வலிமை குறித்து நமது ராணுவம் வீரர்​கள் பாகிஸ்​தானுக்கு தகுந்த பாடம் கற்​பித்து உள்​ளனர். இந்​தி​யா​வில் மீண்​டும் தீவிர​வாத தாக்​குதல் நடத்​தப்​பட்​டால் அதற்​கான விலையை பாகிஸ்​தான் கொடுக்க நேரிடும். ஆபரேஷன் சிந்​தூர் முடிய​வில்​லை. இவ்​வாறு அவர் பேசி​னார்.

சிக்கிம் 50 ஆண்டு நிறைவு: சிக்கிம் மாநிலம் உதயமாகி 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையொட்டி தலைநகர் காங்டாக்கில், ‘சிக்கிம் 50’ என்ற நிகழ்ச்சிநேற்று நடை​பெற்​றது. இதில் காணொலி வாயி​லாக பங்​கேற்ற பிரதமர் நரேந்​திர மோடி, நாம்சி பகு​தி​யில் ரூ.750 கோடி​யில் கட்​டப்​பட்ட அரசு மருத்​து​வ​மனையை திறந்​து​ வைத்​தார்.

விழா​வில் அவர் பேசும்​போது, “சிக்​கிம் உட்பட வடகிழக்கு மாநிலங்​கள் அனைத்​தும் அதிவேக​மாக வளர்ச்சி அடைந்து வரு​கின்​றன. இயற்கை வேளாண்​மை​யின் மைய​மாக சிக்​கிம் உரு​வெடுத்​துள்​ளது. மாநிலத்​தின் சுற்​றுலா துறை அபார வளர்ச்சி அடைந்து வரு​கிறது. பல்​வேறு விளை​யாட்டு வீரர்​கள் வடகிழக்கை சேர்ந்​தவர்​கள் என்​பது பெரு​மிதம் அளிக்​கிறது’’ என்றார். பிரதமர் நரேந்​திர மோடி நேற்று மாலை பிஹார் தலைநகர் பாட்​னா​வுக்கு சென்​றார். அங்கு பாட்னா விமான நிலை​யத்​தின் புதிய முனை​யத்தை அவர் திறந்​து வைத்​தார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.