Month: May 2025
யானைகளுக்கான வழித்தடத்தை உறுதி செய்யும் வரை எஃகு கம்பி வேலி அமைக்கக்கூடாது: ஐகோர்ட் உத்தரவு
சென்னை: யானைகளுக்கான நீர் ஆதாரம் மற்றும் வழித்தடத்தை உறுதி செய்யும் வரை வனப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் எஃகு கம்பி வேலி அமைக்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில், தற்போதைய நிலையே நீடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக வனப்பகுதிகளில் இருந்து வனத்தை ஒட்டிய ஊருக்குள் புகுந்து விடும் யானைகளால் அவ்வப்போது உயிரிழப்புகளும், பயிர்கள் சேதமடைவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. இதைத்தடுக்கும் வகையில் ஓசூர் பகுதியில் வனப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் யானைகள் ஊருக்குள் புகுந்து விடாமல் இருக்க … Read more
கர்நாடகாவில் தொழுகைக்காக அரசு பேருந்தை நிறுத்திய ஓட்டுநர்: விசாரணை நடத்த அமைச்சர் உத்தரவு
பெலகாவி: கர்நாடகாவின் ஹாவேரி மாவட்டத்தில், தொழுகை நடத்துவதற்காக அரசு பேருந்தை ஓட்டுநர் ஒருவர் நிறுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டினை விசாரிக்குமாறு வடமேற்கு கர்நாடக போக்குவரத்து கழகத்துக்கு மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி உத்தரவிட்டுள்ளார். வடமேற்கு கர்நாடக போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநருக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், ஓட்டுநர் ஒருவர் பேருந்தை நிறுத்தி இருக்கையில் தொழுகை நடத்தியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டின் உண்மைத்தன்மையை விசாரிக்குமாறு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். கடிதத்தில் அமைச்சர், “அரசுப்பணியில் இருக்கும் ஊழியர்கள் சில விதிகள் மற்றும் நடைமுறைகளை கடைபிடிக்க … Read more
தீவிரவாத தாக்குதல் விவகாரத்தில் இந்தியாவுடன் நேரடி பேச்சுவார்த்தை: பாக். பிரதமருக்கு அமெரிக்கா அறிவுறுத்தல்
புதுடெல்லி: பஹல்காம் தீவிரவாத தாக்குதல் தொடர்பாக இந்தியாவுடன் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீபுக்கு அமெரிக்கா அறிவுரை வழங்கி உள்ளது. கடந்த 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதன் காரணமாக இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் எழுந்திருக்கிறது. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவாதர் துறைமுகம், அதே மாகாணத்தில் உள்ள பஸ்னி விமானப்படை தளம், கில்ஜித் பகுதியில் உள்ள … Read more
இந்தியா பாக். எல்லை பகுதிகளில் ராணுவம் குவிப்பு! பாகிஸ்தானில் பதற்றம்
டெல்லி: பயங்கரவாதிகளை ஒழிப்பது தொடர்பாக முப்படை தளபதிகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான மத்திய அமைச்சரவை ஆலோசனை கூட்டங்களைத் தொடர்ந்து இந்திய எல்லையில் படைகள் ராணுவ துருப்புகள் குவிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், எந்த நேரமும் பாகிஸ்தான்மீத தாக்குதல் நடத்தப்படலாம் என அஞ்சப்படுகிறது. இதனால் பாகிஸ்தான் மக்கள் பீதியில்உள்ளனர். கடந்த 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உள்பட 28 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவம், அந்த நாட்டு … Read more
'பஸ்ஸைப் பாதியில் நிறுத்தி டிரைவர் தொழுகை' – வைரல் வீடியோ; அமைச்சரின் அதிரடி நடவடிக்கை
கர்நாடகாவில் ஹூப்பள்ளி – ஹவேரி சாலையில் அரசு பேருந்து டிரைவர் ஒருவர் சாலையோரமாகப் பேருந்தை நிறுத்திவிட்டு தொழுகை செய்யும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், டிரைவர் சீட்டிற்குப் பின் இருக்கும் பயணிகள் சீட்டில் டிரைவர் தொழுகை செய்கிறார். பேருந்தின் ஜன்னலுக்கு வெளியே சில பேருந்துகள், மற்ற வாகனங்கள் போய்கொண்டிருப்பது தெரிகிறது. அந்தப் பேருந்தில் பயணிக்கும் பயணிகளோ, டிரைவருக்காகக் காத்திருக்கின்றனர் என்பதைப் பார்க்க முடிகிறது. இந்த வீடியோவைப் பயணி ஒருவர்தான் எடுத்துள்ளார். கர்நாடகா பஸ் டிரைவர் … Read more
மதுரை மாவட்ட ஆட்சியரை பணியிட மாற்றம் செய்யக்கோரி விசிக சாலை மறியல்
மதுரை: மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதாவை பணியிட மாற்றம் செய்யக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மேலூர் அருகே சிட்டம்பட்டி டோல்கேட் முன்பு இன்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. மதுரை தல்லாகுளத்தில் ஏப்.14-ல் அம்பேத்கர் பிறந்த நாளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தேர்தல் அங்கீகார பேரணி நடந்தது. அப்போது தல்லாகுளத்திலிருந்து அவுட்போஸ்ட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க பேரணி சென்றனர். அப்போது 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை பின்தொடர்ந்து வந்த மாவட்ட ஆட்சியர் காரில் … Read more
“நினைவிருக்கட்டும்… இது மோடியின் இந்தியா” – பயங்கரவாதிகளுக்கு அமித்ஷா எச்சரிக்கை!
புதுடெல்லி: நாட்டின் ஒவ்வொரு மூலையில் இருந்தும் பயங்கரவாதத்தை வேரோடு அகற்றுவது உறுதி. அது நிச்சயம் நிறைவேறும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு முதல்முறையாக டெல்லியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் அமித்ஷா கலந்து கொண்டார். இதில் அவர் பேசியதாவது: “பயங்கரவாதிகள் போரில் வெற்றி பெற்றுவிட்டதாக நினைக்கக்கூடாது. இந்தப் போர் இன்னும் முடிவடையவில்லை. நாங்கள் அனைத்து பயங்கரவாதிகளையும் பழிவாங்குவோம். யாராவது ஒரு கோழைத்தனமான தாக்குதலை நடத்தி, அது அவர்களின் பெரிய வெற்றி … Read more
மாஸ் காட்டிய மும்பை பந்து வீச்சாளர்கள்.. தொடரை விட்டு வெளியேறிய ராஜஸ்தான்!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 50வது லீக் ஆட்டம் இன்று (மே 01) ஜெய்பூரில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் ரிக்கில்டன் களம் இறங்கினர். இவர்கள் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி … Read more
சாதிவாரி கணக்கெடுப்பு என்றால் என்ன? கடைசியாக எப்போது எடுக்கப்பட்டது ?
இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதி கணக்கெடுப்புக்கு அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (CCPA) ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அரசு நேற்று அறிவித்தது. 2010 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சமூக-பொருளாதார மற்றும் சாதி கணக்கெடுப்பை (SECC – எஸ்இசிசி) நடத்த முடிவு செய்தது. மாநிலம் விட்டு மாநிலம் இடம்பெயர்வதால் வகுப்பு மாறுதல் மற்றும் ஓபிசி-எஸ்சி பிரிவுகள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்திருப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து அப்போதைய உள்துறை அமைச்சர் பி. … Read more