3 லட்சம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்: தமிழ்நாடு அனைத்து போட்டி தேர்வு அமைப்பு வலியுறுத்தல்

சென்னை: திமுகவின் தேர்தல் வாக்குறுதிப்படி, 3 லட்சம் காலி பணியிடங்களை விரைவாக நிரப்பவேண்டும் என்று தமிழ்நாடு அனைத்துப்போட்டி தேர்வு அமைப்பு வலியுறுத்தியுள்ளது. டிஎன்பிஎஸ்சி-யால் நடத்தப்படும் குரூப்-1 தேர்வு வயது உச்சவரம்பை மற்ற 12 மாநிலங்களில் உள்ளதுபோல 49 வயது வரை உயர்த்த வேண்டும்; வெளிப்படைத்தன்மையுடன் டிஎன்பிஎஸ்சி செயல்பட வேண்டும்; தமிழ் வழியில் முதன்மைத் தேர்வு எழுதுபவர்களுக்கு மட்டுமே இடஒதுக்கீடு 20 சதவீதம் வழங்க வேண்டும்; தேர்வு முடிவுகளை விரைந்து வெளியிட வேண்டும்; முதன்மை (மெயின்ஸ்) தேர்வு மதிப்பீட்டினை … Read more

ஆபரேஷன் சிந்தூரின் புதிய வீடியோ வெளியீடு

புதுடெல்லி: ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கை தொடர்பான புதிய வீடியோவை இந்திய ராணுவம் நேற்று வெளியிட்டது. கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக கடந்த 7-ம் தேதி ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானின் 9 தீவிரவாத முகாம்களை இந்திய விமானப் படை ஏவுகணைகளை வீசி அழித்தது. அப்போது தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது தொடர்பான செயற்கைக்கோள் புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியிடப்பட்டன. இதைத் … Read more

சென்னையில் அதிகாலை முதல் மழை… இன்னும் தொடருமாம் – வானிலை அப்டேட் இதோ!

TN Rain Updates: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

‘ஆபரேஷன் சிந்தூர்’ சர்ச்சை கருத்து: அசோகா பல்கலை. பேராசிரியர் அலி கான் மஹ்முதாபாத்கைது

டெல்லி:  பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கை குறித்து  சர்ச்சைக்குரிய கருத்து பதிவிட்டதாக டெல்லி  அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் அலி கான் மஹ்முதாபாத் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது பதிவில், சிந்தூர் நடவடிக்கை குறித்தும்,  அதில் ஈடுபட்டுள்ள பெண் அதிகாரிகள் குறித்தும் வெறுப்பு கருத்து தெரிவித்திருந்த நிலையில், அதுதொடர்பான புகாரின் பேரில், அவர் கைது செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்டுள்ள அலி கான் மஹ்முதாபாத்  அசோகா பல்கலைக்கழக அரசியல் அறிவியல் துறையின் பேராசிரியராக பதவி வகித்து … Read more

லஷ்கர் பயங்கரவாதி சுட்டுக்கொலை… பாகிஸ்தானில் பயங்கரம் – யார் இந்த சைபுல்லா காலித்?

Saifullah Khalid: பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில், லஷ்கர்-இ-தொய்பா இயக்கியத்தின் முக்கிய பயங்கரவாதியான சைபுல்லா காலித் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Operation Sindoor: “மே 9 – இரவு 9 மணி, பாகிஸ்தானுக்கு நல்ல பாடம்..!'' – இந்திய ராணுவத்தின் வீடியோ

‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்த வீடியோக்களை இந்திய ராணுவம் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில், இன்றும் இந்தியா பாகிஸ்தானுக்கு கொடுத்த பதிலடி வீடியோவை வெளியிட்டுள்ளது இந்திய ராணுவம். அந்த வீடியோவிற்கு கேப்ஷனாக, “திட்டமிடப்பட்டது, பயிற்சியளிக்கப்பட்டது மற்றும் முடிக்கப்பட்டது. நீதி வழங்கப்பட்டது” என்று கொடுக்கப்பட்டுள்ளது. ஹேஷ்டேக்குகளாக ‘பலமான மற்றும் திறமையான’ (#StrongAndCapable) என்றும், ‘ஆபரேஷன் சிந்தூர்’ (#OpSindoor) என்றும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் இந்திய ராணுவ வீரர் ஒருவர், “இது அனைத்தும் பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலில் இருந்து தொடங்கியது. … Read more

நயினார் நாகேந்திரனை சந்தித்த 2 போலீஸார் பணியிட மாற்றம்

திருப்பூர்: திருப்பூரில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்த போலீஸார் இருவர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். திருப்பூரில் பாஜக சார்பில் தேசியக்கொடி பேரணி சமீபத்தில் நடைபெற்றது. அதில், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்றார். அப்போது, அனுப்பர்பாளையம் மற்றும் திருப்பூர் தெற்கு காவல் நிலையங்களில் காவலர்களாகப் பணியாற்றும் மந்திரம், சின்னச்சாமி ஆகியோர் நயினார் நாகேந்திரனை நேரில் சந்தித்துப் பேசியுள்ளனர். இதையடுத்து, இருவரையும் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பணியிட மாற்றம் செய்து, மாநகர காவல் … Read more

ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் இயங்கும் அமெரிக்க தயாரிப்பு – ‘விபாட்’ ட்ரோன்கள் இந்தியா வந்தன

புதுடெல்லி: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட நவீன விபாட் ட்ரோன்கள் இந்தியா வந்துள்ளன. இவற்றால் செங்குத்தாக மேலெழும்பவும், தரையிறங்கி தாக்குதல் நடத்தவும் இயலும். இதனால் இவை வி -டால் ட்ரோன்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. இனிமேல் போர்க்களத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் இயங்கும் ட்ரோன்கள்தான் ஆதிக்கம் செலுத்தும். இதனால் அமெரிக்கா மற்றும் இதர நாடுகளின் தொழில்நுட்ப ஒத்துழைப்புடன் தயாரிக்கப்பட்ட விடால் மற்றும் விபாட் ட்ரோன்கள் இந்தியா வந்துள்ளன. இவற்றின் மூலம் போர்க்களத்தில் இந்தியா ஆதிக்கம் செலுத்தும் என … Read more

பாகிஸ்தானுக்கு நிதி வழங்க ஐஎம்எப் 11 நிபந்தனை

சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எப்) பாகிஸ்தானுக்கு நிதி உதவி வழங்குவது தொடர்பாக 11 நிபந்தனைகளை புதிதாக விதித்துள்ளது. இதையடுத்து, பாகிஸ்தானுக்கு விதிக்கப்பட்ட மொத்த நிபந்தனைகளின் எண்ணிக்கை 50-ஆக அதிகரித்துள்ளது என எக்ஸ்பிரஸ் டிரிபியூன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அந்த நாளிதழ் மேலும் கூறியுள்ளதாவது: நிதி நெருக்கடியில் உள்ள பாகிஸ்தானுக்கு 1 பில்லியன் டாலர் அதாவது ரூ.8,560 கோடி நிதியுதவி அளிக்க ஐஎம்எப் ஒப்புதல் தெரிவித்தது. ஆனால், இதற்கு இந்தியா சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், … Read more

தமிழ்கத்தில் மழை : இன்று முதல்வர் ஆலோசனை

சென்னை தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக இன்று முதல்வர் மு க ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகம் அதை ஒட்டிய வடக்கு கேரள பகுதிகளின் மேல் தற்போது ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று (திங்கட்கிழமை) கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வழக்கமாக ஜூன் மாதம் தொடங்கும். தென்மேற்கு பருவமழை … Read more