`ஒரு கை தட்டினால் ஓசை வராது’ – பாலியல் வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து

டெல்லியைச் சேர்ந்த 23 வயதான சமூக வலைதள பிரபலத்தின் மீது துணிக்கடை நடத்தும் பெண் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்திருந்தார். ஆப்பிள் ஐபோன் கடந்த, 2021ம் ஆண்டு சமூக வலைதளம் வாயிலாக, அறிமுகமான அந்த பிரபலத்திடம், தனது ஆடைகளை விளம்பரம் செய்யுமாறு கேட்டுக் கொண்டதாகவும், அப்போது விளம்பரம் தயாரிக்க புது ஐபோன் வேண்டும் என அந்த பிரபலம் கேட்டதால் ஜம்முவில் உள்ள அதிகாரப்பூர்வ ஆப்பிள் ஸ்டோர் மூலமாக போனை வாங்கி கொடுத்ததாகவும், ஆனால் அந்த போனை பெற்றுக் … Read more

ரிசர்வ் வங்கியின் நகைக்கடன் கட்டுப்பாடுகள் கூட்டுறவு வங்கிகளை பாதிக்காது: அமைச்சர் பெரியகருப்பன் தகவல்

சென்னை: நகைக்கடன் குறித்த ரிசர்வ் வங்கியின் கட்டு்ப்பாடுகள் கூட்டுறவு வங்கிகளை வெகுவாக பாதிக்காது என்று அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார். சென்னை தீவுத்திடலில் புதிதாக அமையவுள்ள ஒருங்கிணைந்த கூட்டுறவு வளாகத்துக்கான பூர்வாங்கப் பணிகளை நேற்று காலை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தொடங்கி வைத்தார். சென்னை, தீவுத்திடல், சத்தியவாணி முத்து நகரில் 4 தளங்களுடன் 19,464 சதுர அடி பரப்பளவில் ரூ.8 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த கூட்டுறவு வளாகம் கட்டப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து, தலைமைச்செயலகத்தில் கூட்டுறவுத்துறை தொடர்பான ஆய்வுக்கூட்டம் அமைச்சர் பெரியகருப்பன் … Read more

‘பிஆர்எஸ் கட்சியை பாஜக உடன் இணைக்க முயற்சி’ – கவிதா தகவலும், தெலங்கானா அரசியல் பரபரப்பும்

ஹைதராபாத்: பிஆர்எஸ் கட்சியை பாஜக உடன் இணைக்க தொடர் முயற்சி முன்னெடுக்கப்பட்டதாக தெலங்கானா மாநில முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகளும், பிஆர்எஸ் கட்சியின் மேலவை உறுப்பினருமான கவிதா குற்றச்சாட்டை வைத்துள்ளார். இது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உளள்து. “நான் என் அப்பாவுக்கு நூற்றுக்கணக்கான கடிதங்களை எழுதுகிறேன். அதில் உங்களுக்கு என்ன பிரச்சினை? நான் எழுதிய கடிதம் எப்படி பொது வெளியில் கசிந்தது. அந்த செயலை செய்தது யார்? அதை ஏன் இதுவரை கண்டறியவில்லை? ஆனால், … Read more

ட்ரம்ப்பின் வரி விதிப்பு நடவடிக்கை மீதான வர்த்தக நீதிமன்ற தடை நிறுத்திவைப்பு

வாஷிங்டன்: உலக நாடுகள் இடையேயான வர்த்தகத்துக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வரி உயர்வை அறிவித்தார். அவரின் இந்த வரி விதிப்பு நடவடிக்கைக்கு அமெரிக்காவின் சர்வதேச வர்த்தக நீதிமன்றம் தடை விதித்தது. அதை எதிர்த்து ட்ரம்ப் நிர்வாகம் ஃபெடரல் மேல்முறையீட்டு நீதிமன்றத்தை நாடியது. இந்நிலையில், வர்த்தக நீதிமன்றத்தின் தடை உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது பெடரல் மேல்முறையீட்டு நீதிமன்றம். சீனா, இந்தியா, ஐரோப்பிய யூனியன் என உலக நாடுகளுக்கு இடையேயான வர்த்தகத்துக்கு வரி உயர்வை ட்ரம்ப் … Read more

ஈ சாலா கப் RCB-க்கு தான்! இந்த வீரரின் ராசி அப்படி… 6 பைனல்களில் தோற்றதே இல்லை!

IPL 2025 Royal Challengers Bangalore: ஐபிஎல் 2025 தொடரின் கிளைமேக்ஸ் நெருங்கி வருகிறது. கிரிக்கெட் ரசிகர்கள் முதல் கிரிக்கெட்டே பார்க்காதவர்கள் வரை இந்த வருட ஐபிஎல் இறுதிப்போட்டிக்காக காத்திருக்கின்றனர். காரணம், ஆர்சிபி 9 வருடங்களுக்கு பின்னர் இறுதிப்போட்டிக்குள் நுழைந்திருக்கிறது.  RCB: ஆர்சிபி அணியின் 18 வருட தவம் 2008ஆம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக 17 ஆண்டுகளாக ஒருமுறை கூட ஆர்சிபி ஐபிஎல் கோப்பையை கையில் ஏந்தியது கிடையாது. 2024இல் மகளிர் ஐபிஎல் கிரிக்கெட்டில் கோப்பை கிடைத்தாலும் … Read more

தமிழகத்தில் நடப்பாண்டே மேலும் 4 புதிய அரசு கலைக்கல்லூரிகள்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் நடப்பாண்டே மேலும் 4 புதிய அரசு கலைக்கல்லூரிகள்  தொடங்கப்படும்   முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். இதன்மூலம் மொத்த கல்லூரிகள் எண்ணிக்கை 180 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் ஏழை, எளிய கிராமப்புற மாணவ, மாணவிகளின் உயர்க்கல்வி தேவையை நிறைவு செய்யும் பொருட்டு 11 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை  மே 26ந்தேதி அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஏற்கனவே   கடந்த 21.2.2025 அன்று கடலூரில் நடந்த அரசு விழா ஒன்றில் … Read more

மேயரின் கணவர் கட்சியிலிருந்து நீக்கம்! – மதுரை திமுகவில் பரபரப்பு.. நடந்தது என்ன?

மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவர் பொன்.வசந்த் திமுக அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து கட்சித் தலைமையால் நீக்கப்பட்டுள்ள சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உதயநிதியுடன் இதுகுறித்து கட்சியினரிடம் விசாரித்தபோது, “மேயர் தரப்புக்கும், அமைச்சர் பி.மூர்த்திக்கும் இடையே கான்ட்ரக்ட் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் ஏற்பட்ட மோதலே இந்த நடவடிக்கைக்கு காரணம்’ என்கிறார்கள். அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல்ராஜனின் தீவிர ஆதரவாளரான பொன்வசந்தின் மனைவி இந்திராணி, மாநகராட்சித் தேர்தலில் போட்டியிட்டு 57 வது வார்டு கவுன்சிலரானார். கட்சியில் பெரும்பாலான நிர்வாகிகள், கவுன்சிலர்களின் … Read more

குன்னூர் காட்டேரி பூங்காவில் முதல்முறையாக மலை பயிர்கள் கண்காட்சி இன்று தொடக்கம்

குன்னூர்: நீல​கிரி மாவட்​டத்​தில் கோடை விழா​வின் முக்​கிய நிகழ்​வு​களான காய்​கறி கண்​காட்​சி, மலர்கள் கண்​காட்​சி, ரோஜா கண்​காட்சி மற்​றும் பழக்​கண்​காட்சி ஆகியவை நிறைவு பெற்​றுள்ளன. இந்​நிலை​யில், இறுதி நிகழ்ச்​சி​யாக குன்​னூர் காட்​டேரி பூங்​கா​வில் இந்த ஆண்டு முதல்​முறை​யாக மலைப் பயிர்​கள் கண்​காட்சி இன்று (மே. 30) தொடங்க உள்​ளது. இது தொடர்​பாக தோட்​டக்​கலைத் துறை அதி​காரி​கள் கூறிய​தாவது: மலைப் பயிர்​கள் கண்​காட்​சிக்​காக, காட்​டேரி பூங்​காவில் இரண்டு லட்​சம் மலர் நாற்​றுகள் நடவு செய்​யப்​பட்டு அலங்​கரிக்​கப்​பட்​டுள்​ளன. இது மட்​டுமில்​லாமல் … Read more

பிரதமர் மோடியை பாராட்டிய சசி தரூருக்கு காங். எதிர்ப்பு

புதுடெல்லி: ப​னாமா நாட்​டில் மோடி அரசின் முடிவு​களை காங்​கிரஸ் எம்​.பி. சசி தரூர் பாராட்​டி​யிருப்​ப​தற்கு அவரது கட்​சி​யில் மீண்​டும் எதிர்ப்பு கிளம்​பியுள்​ளது. காங்​கிரஸ் மூத்த தலை​வரும் எம்​.பி.​யு​மான சசி தரூர் சமீப கால​மாக பிரதமர் மோடியை​யும் மத்​திய அரசை​யும் பாராட்டி பேசி வரு​கிறார். இதற்கு காங்​கிரஸ் கட்​சி​யில் கடும் எதிர்ப்பு கிளம்​பி​யுள்​ளது. என்​றாலும் சசி தரூர் அதனை கண்​டு​கொள்​வ​தில்​லை. ஆபரேஷன் சிந்​தூர் குறித்து வெளி​நாடு​களிடம் விவரிக்​கும் எம்​.பி.க்​கள் குழு​வில் காங்​கிரஸ் எதிர்ப்​பை​யும் மீறி சசி தரூர் இடம்​பெற்​றுள்​ளார். … Read more

பிரம்மோஸ் ஏவுகணைகள் மூலம் பாக். விமான தளங்கள் மீது தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஒப்புதல்

இந்திய ராணுவம் பிரம்மோஸ் ஏவுகணைகள் மூலம் பாகிஸ்தான் விமான தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது என்று அந்த நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். துருக்கி, ஈரான், அஜர்பைஜான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அவர் நேற்று அஜர்பைஜானின் லாசின் நகரில் முகாமிட்டிருந்தார். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: கடந்த 10-ம் தேதி அதிகாலையில் தொழுகையை முடித்த பிறகு இந்தியா மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் … Read more