Retro: “சித்தா பாட்டு கேட்டு என் மகளை நினைச்சு அழுதேன்'' – எமோஷனலான சூர்யா!

சூர்யாவின் Retro திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களி வரவேற்பைப் பெற்றுவருகிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் பூஜா ஹெக்டே, கருணாகரன், நாசர், ஸ்வாசிகா, பிரகாஷ் ராஜ், ஜோஜு ஜார்ஜ், ஜெயராம் உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை முன்னிட்டு யூடியூபில் சூர்யா, கார்த்திக் சுப்புராஜ், சந்தோஷ் நாராயணன் உரையாடும் வீடியோவெளியிடப்பட்டது. Santhosh Narayanan அதில் சந்தோஷ் நாராயணன் இசை பற்றி பேசிய சூர்யா, சித்தா படத்தில் வரும் பாடலைக் கேட்டு கண்ணீர் சிந்திய நினைவைப் பகிர்ந்துள்ளார். … Read more

அங்கன்வாடி ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை : தமிழக அமைச்சர் கீதா ஜீவன்

சென்னை தமிழக அமைச்சர் கீதா ஜீவன் விடுமுறை அற்ற நாட்களில் போராட்டம் நடத்தும் அங்கன்வாடி ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளார். தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி. கீதா ஜீவன் “தமிழக அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம், அங்கன்வாடி ஊழியர்களுக்கான கோடை விடுமுறையை மே மாதம் முழுவதும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து எவ்வித முன்னறிவிப்புமின்றி அனைத்து மாவட்ட அலுவலகங்கள் முன்பாக மே 2′ … Read more

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

சென்னை: தேர்தல் மற்றும் கட்சிப்பணிகள் குறித்து ஆலோசிப்பதற்காக இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, ஆளும் திமுக கடந்தாண்டு முதலே தேர்தல்களத்தில் பயணிக்க தொடங்கிவிட்டது. தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு உள்ளிட்டோர் அடங்கிய குழுவை அமைத்து, அவர்கள் மாவட்டங்கள் வாரியாக அணிகளின் நிர்வாகிகளை அழைத்து பேசி, பல்வேறு பரிந்துரைகளை கட்சி … Read more

விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தால் கேரளாவுக்கும் நாட்டுக்கும் பொருளாதார ஸ்திரத்தன்மை: பிரதமர் மோடி நம்பிக்கை

நாட்டின் முதலாவது தானியங்கி துறைமுகமான விழிஞ்சம் துறைமுகம் கேரளாவுக்கும் நாட்டுக்கும் பொருளாதார ஸ்திரத்தன்மையைக் கொண்டுவரும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள விழிஞ்சம் பகுதியில் சர்வதேச ஆழ்கடல் பல்நோக்கு துறைமுகம் ரூ.8,867 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. மூன்று கட்டங்களாக மேற்கொள்ள திட்டமிடப்பட்ட துறைமுகத்தின் கட்டுமான பணிகள் கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கின. விழிஞ்சம் துறைமுகத்தில் முதற்கட்ட பணிகள் முடிவுற்ற நிலையில் நேற்று நடைபெற்ற விழாவில் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. திறப்பு … Read more

“அவர் சந்தித்த அவமானங்களை என் கிட்ட சொல்லி இருக்காரு..'' – கிரேஸி மோகன் குறித்து கே.எஸ் ரவிக்குமார்

தமிழ் நாடக மற்றும் திரைப்பட உலகில் தனது நகைச்சுவை வசனங்களுக்கும், நாடகங்களுக்கும், திரைப்படங்களுக்கு வசனம் எழுதியதற்கும் புகழ்பெற்றவர் கிரேஸி மோகன். மறைந்த நடிகரும், எழுத்தாளருமான கிரேஸி மோகன் எழுதிய 25 புத்தகங்கள் வெளியீட்டு விழா நேற்று (மே1) நடைபெற்றது. இந்த விழாவில் கமல்ஹாசன், கே.எஸ் ரவிக்குமார், ஜெயராம் ஆகியோர் கலந்துகொண்டனர். கிரேஸி மோகன் இந்த நிகழ்வில் பேசிய  கே.எஸ் ரவிக்குமார், “ கிரேஸி மோகன் சார் என்னிடம் பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.  அவரது ஆரம்ப காலங்களில் அவர் … Read more

அட்டாரி வாகா எல்லை மீண்டும் திறக்கப்பட்டது… குடிமக்கள் வாகா எல்லை வழியாக நாட்டிற்கு திரும்பலாம்: பாகிஸ்தான்

பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸ் மற்றும் பாகிஸ்தானில் உள்ள லாகூருக்கு அருகில் அமைந்துள்ள அட்டாரி-வாகா எல்லை இந்தியா பாகிஸ்தான் பதற்றம் காரணமாக மூடப்பட்டது. இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேற ஏப்ரல் 30 ஆம் தேதி வரை அரசாங்கம் அவகாசம் அளித்திருந்தது. இந்த காலக்கெடு முடிவடைந்ததை அடுத்து அட்டாரி – வாகா எல்லை நேற்று மூடப்பட்டது. இதன் விளைவாக, 70க்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர்கள் இந்தியாவில் சிக்கித் தவித்தனர். இந்த நிலையில் இந்தியாவில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான் நாட்டினரை உள்ளே நுழைய … Read more

பாதுகாப்பைத் திரும்பப் பெற்ற தமிழக அரசு; `உயிருக்கு அச்சுறுத்தல்' என நீதிமன்றத்தில் ஆஜராகாத சகாயம்!

மதுரை, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியராகவும். பல்வேறு துறைகளில் உயரதிகாரியாகவும் பணியாற்றியவர் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம். இவர், மதுரை மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றிய காலத்தில் கிரானைட் குவாரி ஊழலை வெளிப்படுத்தினார். அதையடுத்து, 2014-ல் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் கிரானைட் முறைகேடுகள் குறித்து விசாரித்த சகாயம், கிரானைட் ஊழலால் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவில் தமிழ்நாடு அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாக 2015-ல் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார். சகாயம் IAS (VR) … Read more

அதிகரிக்கும் தெருநாய்கள் தொல்லை: இனப்பெருக்க கட்டுப்பாடு பணிகளை துரிதப்படுத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

தெரு நாய்கள் இனப்பெருக்க கட்டுப்பாடு பணிகளை துரிதப்படுத்தவும், அதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் நிதி ஒதுக்கீடு மற்றும் சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று (2.5.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், நகரப் பகுதிகளில் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பொதுமக்களுக்கு பாதிப்புகளும் அச்சுறுத்தலான சூழலும் நிலவுவதை கருத்தில்கொண்டு, இப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. தெரு நாய் தொல்லைகளை கட்டுப்படுத்துவது தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், உள்ளாட்சி அமைப்புகள், … Read more

‘குடும்பங்களை, சமூகத்தை வழிநடத்த முதியோர் நல்வாழ்வு அவசியம்’ – திரவுபதி முர்மு

புதுடெல்லி: ஞானம் மற்றும் பாரம்பரியத்தின் தூண்களாக மூத்த குடிமக்கள் விளங்குவதாகவும், குடும்பங்களை, சமூகத்தை வழிநடத்த அவர்களின் நல்வாழ்வு அவசியம் என்றும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார். ‘கண்ணியத்துடன் கூடிய முதுமை’ எனும் நிகழ்ச்சி குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய திரவுபதி முர்மு, “நமது கடந்த காலத்துடன் ஒரு முக்கிய இணைப்பாகவும், நமது எதிர்காலத்துக்கான வழிகாட்டியாகவும் மூத்த குடிமக்கள் திகழ்கிறார்கள். நமது மூத்த குடிமக்கள் ஞானம், விவேகம் மற்றும் பாரம்பரியத்தை பிரதிநிதித்துவப் படுத்துகிறார்கள். அவர்களின் … Read more

பிளே ஆப் நோக்கி குஜராத்… தோல்வியுடன் வெளியேறும் SRH…? – புள்ளிப்பட்டியல் இதோ!

IPL 2025, GT vs SRH: ஐபிஎல் தொடரின் 51வது லீக் போட்டி இன்று அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. குஜராத் டைட்டன்ஸ் அணியுடன், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விளையாடியது. GT vs SRH: குஜராத்தின் மிரட்டல் டாப் ஆர்டர்   ஹைதராபாத் அணி கடந்தாண்டு சிறப்பாக விளையாடி இறுதிப்போட்டி வரை சென்றிருந்தாலும், இம்முறை பெரியளவில் விளையாடவில்லை. 9வது இடத்திலேயே நீடிக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, சிஎஸ்கேவுக்கு எதிரான வெற்றிக்கு பின் நம்பிக்கையுடன் பிளேயிங் … Read more