லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் தளபதி அப்துல் ரவூப் அசார் இந்திய ராணுவ தாக்குதலில் உயிரிழப்பு

லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் தளபதியாக இருந்தவர் அப்துல் ரவூப் அசார். ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக, பல ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த பயங்கரவாதிகளில் ஒருவர். அப்துல் ரவூப் அசார் மற்றும் அவரது சகோதரரான மசூத் அசாரும் தான் இந்திய ராணுவ தலைமையகத் தாக்குதல், ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தாக்குதல், தில்லி நாடாளுமன்ற தாக்குதல், பதான்கோட் தாக்குதல், புல்வாமா தாக்குதல் உள்ளிட்டவற்றுக்கு காரணமாய் அமைந்தவர்கள். ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின்போது, பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது தலைமையகத்தின் மீது … Read more

தேர்ச்சி பெறாதவர்கள் துவண்டுவிட கூடாது: பிளஸ் 2 தேர்வானோருக்கு தலைவர்கள் வாழ்த்து

சென்னை: பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின்: பள்ளிக்கல்வி நிறைந்து உயர்கல்விக்குள் அடியெடுத்து வைக்கும் மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். நமது பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சொன்னதுபோல கல்லூரிக் கனவு – உயர்வுக்குப் படி – சிகரம் தொடு – நான் முதல்வன் என நமது அரசின் திட்டங்கள், மாணவர்களின் ஒவ்வொரு … Read more

ஆர்டிஐ வரம்புக்குள் அரசியல் கட்சிகள் இறுதி விசாரணை தள்ளிவைப்பு: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: அரசியல் கட்சிகளை ஆர்டிஐ வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என தொடரப்பட்ட பொது நல வழக்கின் இறுதி விசாரணையை உச்ச நீதிமன்றம் நேற்று ஒத்திவைத்தது. தேசிய கட்சிகள் மற்றும் மாநில கட்சிகளை ஆர்டிஐ வரம்புக்குள் கொண்டு வரக்கோரி கடந்த 2015 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ஏடிஆர்) என்ற தொண்டு நிறுவனம், வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் சார்பில் இரண்டு பொது நல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. தேர்தலில் கருப்பு பணம் பயன்படுத்தப்படுவதால், அரசியல் … Read more

இந்தியா பாகிஸ்தான் போர் : நாடு முழுவதும் விமான நிலையங்கள் மூடலா? உண்மை இதுதான்

Fake News alert : இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உட்சகட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், நாடு முழுவதும் விமான நிலையங்கள் மூடல் என்ற வதந்திக்கு மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.   

ஆப்ரேஷன் சிந்தூர் : இந்தியாவுக்கு உலக நாடுகள் ஆதரவு

டெல்லி இந்தியாவின் அபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பல உலக நாடுகல் ஆதரவு தெரிவித்துள்ளன. கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா மே 7-ந்தேதி(நேற்று) அதிரடி தாக்குதல் நடத்தியது. மேலும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. ‘ஆபரேஷன் சிந்தூர்’ என பெயரிடப்பட்டஇந்த தாக்குதலில் … Read more

முக்கிய அமைச்சர்கள் தப்பியோட்டம்.. தலை இல்லாத முண்டமானது பாகிஸ்தான்!

Pakistan Prime Minister Shehbaz Sharif: பாகிஸ்தானில் இருந்து வரும் தகவல்களின் அடிப்படையில் பாகிஸ்தான் உச்சமட்ட தலைவர்கள் தப்பி ஓட்டம்? என கேள்விகள் எழுப்படுகின்றன. 

பாகிஸ்தானின் முக்கிய இடங்களைக் குறிவைக்கும் இந்தியா; ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்த பாகிஸ்தான்?

இஸ்லாமாபாத், லாகூர், சியால்கோட் ஆகிய முக்கிய நகரங்களில் இந்தியா பதில் தாக்குதலை நடத்தியதை அடுத்து, நாடு முழுவதும் பாகிஸ்தான் அரசு ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மே7 ஆம் தேதி இந்திய ராணுவத்தால் ஆப்ரேஷன் சிந்தூர் நடத்திய பிறகு நேற்று இரவு திடீரென பாகிஸ்தானால் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் ஏவப்பட்டன. ஆனால் இந்தியாவின் S-400 வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு வெற்றிகரமாக அதனை முறியடித்தது. குப்வாரா மற்றும் பாரமுல்லாவில் உள்ள கட்டுப்பாட்டுக் கோடு அருகே பாகிஸ்தான் … Read more

சாலை விபத்தில் காயமடைபவர்களுக்கு இலவச சிகிச்சை: மத்திய அரசுக்கு நயினார் நாகேந்திரன், சரத்குமார் நன்றி

சென்னை: சாலை விபத்தில் காயமடைபவர்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை அளிக்கும் மத்திய அரசின் திட்டத்துக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் முன்னாள் எம்.பி. சரத்குமார் ஆகியோர் வரவேற்பும் நன்றியும் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நயினார் நாகேந்திரன்: இந்தியாவில் ஓராண்டுக்கு சராசரியாக 1.8 லட்சத்துக்கும் மேற்பட்ட சாலை விபத்துகள் நிகழ்கின்றன. இந்நிலையில் சாலை விபத்து நிகழ்ந்த முதல் 7 நாட்களுக்குள் காயமடைந்தவர்களுக்கு ரூ.1.5 லட்சம் வரை தனியார் மருத்துவமனைகளில் கட்டணமில்லா … Read more

ராஜஸ்தான் மாநிலத்தில் அவசர நிலை அமல்!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் உள்ள விமானப்படை தளங்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் நேற்றிரவு ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்த முயற்சி செய்தது. இந்த ட்ரோன்களை இந்திய விமானப்படை நடுவானில் அழித்தது. மேலும் ஜெய்சல்மர் பகுதியை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் நேற்று பீரங்கி தாக்குதலை நடத்தியது. இதற்கு இந்திய ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்தது. இதைத் தொடர்ந்து ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா தலைமையில் ஜெய்ப்பூரில் நேற்று இரவு உயர்நிலை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தலைமைச் செயலாளர், உள்துறை … Read more

நேருக்கு நேர் மோதும் இந்தியா – பாகிஸ்தான்.. கராச்சி துறைமுகத்தை தாக்கிய இந்திய கடற்படை

Karachi Port Latest News: இந்திய கடற்படை பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்தை தாக்கி படு பயங்கரமாக சேதாரம் ஏற்படுத்தி விட்டதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது. இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை.