சென்னை மாநகராட்சி பள்ளியில் மாணவர் சேர்க்கை இரு மடங்காக உயர்வு! மாநகராட்சி தகவல்

சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் நடப்பாண்டுக்கான  மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், வீடு வீடாக சென்று மாணவர்கள் சேர்க்கை வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில்,   இதுவரை  13 ஆயிரத்து 800 மாணவர்கள் சேர்ந்துள்ளதாகவும்,. இது கடந்த ஆண்டை விட இருமடங்கு அதிம் என  சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது சென்னை பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, நகரில் 69 நடுநிலைப் பள்ளிகள், 72 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் உட்பட … Read more

ஐ.பி.எல். வரலாற்றில்… சென்னை அணி 5 முறை சேப்பாக்கில் தொடர் தோல்வி

சென்னை, ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்த ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் மோதியது. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்ததும், சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. 19.2 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 190 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. தொடர்ந்து 191 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணி, … Read more

Health: டைப் 5 நீரிழிவு யாருக்கு வரும்.. என்ன தீர்வு; தடுக்க முடியுமா? – மருத்துவர் விளக்கம்!

சமீபத்தில் நடந்த உலக நீரிழிவு மாநாட்டில் டைப் 5 நீரிழிவு கண்டறியப்பட்டது மிகப்பெரிய பேசுபொருளானது. இந்த நோய் முதன்முதலில் 1960-களில் காணப்பட்டது. இது J-வகை நீரிழிவு நோய் என்று குறிப்பிடப்பட்டது. இது 1985-ல் உலக சுகாதார அமைப்பால் வகைப்படுத்தப்பட்டு பின் 1998-ல் உடலியல் சான்றுகள் இல்லாததால் நீக்கப்பட்டது. அந்த நேரத்தில், இது டைப் 1 மற்றும் டைப் 2-ன் தவறாக கண்டறியப்பட்ட நிலை என்று நிபுணர்கள் நம்பினர். தற்போதைய ஆராய்ச்சி, டைப் 5 நீரிழிவு நோய் வேறுபட்டது … Read more

தமிழகத்தில் பொது இடங்களில் உள்ள கொடி கம்பங்களை அகற்றும் உத்தரவுக்கு எதிராக விசிக சார்பில் திருமாவளவன் மேல்முறையீடு

மதுரை: தமிழகத்தில் பொது இடங்களில் உள்ள கொடிக் கம்பங்களை அகற்ற கெடு விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், அதன் தலைவர் திருமாவளவன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை ஜூன் மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்டது. மதுரையில் 2 இடங்களில் அதிமுக சார்பில் கொடிக் கம்பங்கள் அமைக்க அனுமதி கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் அக்கட்சி நிர்வாகிகள் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை விசாரித்த தனி நீதிபதி, … Read more

ஆம் ஆத்மி ஆட்சியில் வகுப்பறைகள் கட்டியதில் ரூ.2,000 கோடி ஊழல்: மணிஷ் சிசோடியா, சத்யேந்தர் மீது புதிய வழக்கு

புதுடெல்லி: டெல்லியில் வகுப்பறைகள் கட்டியதில் சுமார் ரூ.2,000 கோடி ஊழல் நடந்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி முன்னாள் அமைச்சர்கள் மணிஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான முந்தைய ஆம் ஆத்மி ஆட்சியில் 12,748 வகுப்பறைகளுக்கான கட்டிடங்கள் கட்டப்பட்டன. இவை அதிக செலவில் கட்டப்பட்டதாகவும், இதன் மூலம் ரூ.2,000 கோடி அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாகவும் டெல்லி காவல் துறையின் ஊழல் தடுப்பு பிரிவு (ஏசிபி) கண்டறிந்துள்ளது. இதையடுத்து … Read more

தமிழ்நாடு அரசின் மாஸ் அறிவிப்பு, தொழில் தொடங்க கடன் உதவி – ரூ.1 கோடி வரை மானியம் பெறலாம்

Tamilnadu Government : அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான சிறப்பு சுய தொழில் திட்டத்தில் தொழில் கடன் பெற விண்ணப்பிக்காலம் என கரூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.  

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சொத்து இனி இவர் தான் – எம் எஸ் தோனி ஓபன் ஸ்டேட்மென்ட்

MS Dhoni : பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை அணி தோல்வியை சந்தித்து. இதனால் நடப்பு ஐபிஎல் தொடரில் பிளே ஆப் வாய்ப்பை முதல் அணியாக இழந்தது. இது குறித்து பேசிய தோனி, பேட்டிங்கை வலுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே அணி இருப்பதாகவும், இப்போதைக்கு அணியின் சொத்தாக டெவால்ட் ப்ரீவிஸ் மட்டுமே இருப்பதாகவும் கூறியுள்ளார். அவர் வரும் காலத்திலும் அணிக்கு முக்கிய பங்காற்றுவார் என தெரிவித்த தோனி, தன்னுடைய … Read more

HBD Ajith Kumar: கேமராக் காதலன், பைக் சேகரிப்பு!; அஜித் பற்றி பலரும் அறிந்திடாத பர்சனல் தகவல்கள்!

நடிகர் அஜித்தின் 54-வது பிறந்தநாள் இன்று. ‘குட் பேட் அக்லி’ படத்தின் வெற்றி, பெல்ஜியம் நாட்டில் நடைபெற்ற கார் பந்தயத்தில் வெற்றி, பத்ம பூஷன் விருது என பல ஸ்பெஷல் விஷயங்களோடு இந்தப் பிறந்தநாளை கொண்டாடவிருக்கிறார் அஜித். அவரைப் பற்றி பலரும் அறிந்திடாத சில விஷயங்களை இங்குப் பார்க்கலாம். அஜித்குமார் * தன் வீட்டில் நெடுங்காலமாக பணியாற்றும் ஊழியர்களுக்கு வீடு கட்டிக் கொடுத்து அதை அவர்களுக்கே உரிமையாக்கி பத்திரப்பதிவும் செய்து கொடுத்துவிட்டார். * அஜித் முன்பெல்லாம் திருவண்ணாமலைக்கு … Read more

சென்னை மாநகர பேருந்துகளின் வழித்தட எண்கள் மாற்றம்!

சென்னை: சென்னையில் இயக்கப்பட்டு வரும் மாநகர பேருந்துகளின் வழித்தட எண்களை மாற்றி மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்து உள்ளது. அதன்படி, இன்றுமுதல் (மே1) 7 வழித்தடங்களில் எண்கள் மாற்றப்பட்டு உள்ளது. சென்னை மக்களின் வசதிக்காக மாநகரம் முழுவதும் அரசு மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்து தட எண்களை பகுதிவாரியாக சீரமைத்து, அதில் 7 வழித்தட எண்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.  இப்பேருந்துகள் அதே வழித்தடத்தில்  இன்று முதல் (மே 1) இயக்கப்பட … Read more

பிரதமர் மோடி அல்ல… ரஷியாவின் வெற்றி தின அணிவகுப்பில் ராஜ்நாத் சிங் பங்கேற்பு

புதுடெல்லி, 2-ம் உலக போரில் ஜெர்மனியின் நாஜி படைகளை சோவியத் யூனியன் வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில், ஆண்டுதோறும் ரஷிய தலைநகர் மாஸ்கோவில் பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு நடைபெறும். இந்நிகழ்ச்சியில் பங்கேற்க வருகை தரும்படி பிரதமர் மோடிக்கு ரஷியா அழைப்பு விடுத்திருந்தது. எனினும், ரஷியாவின் இந்த வெற்றி தின அணிவகுப்பில் பங்கேற்பதற்காக, இந்தியா சார்பில் மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொள்வார். இதனை ரஷியாவின் அதிபருக்கான பத்திரிகை செயலாளர் … Read more