பலத்த காற்றுடன் கூடிய மழை: கொடைக்கானலில் படகு சவாரி தற்காலிகமாக நிறுத்தம்

கொடைக்கானல்: கொடைக்கானல் மலைப்பகுதியில் இன்று (திங்கள்கிழமை) காலை முதலே பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் படகு சவாரி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர வடிவிலான ஏரியில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் 2 இடங்கள், நகராட்சி நிர்வாகம் சார்பில் ஒரு இடத்தில் படகு குழாம் அமைக்கப்பட்டு பல வகையான படகுகள் இயக்கப்படுகின்றன. கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகள் ஏரியில் படகு சவாரி செய்ய அதிக ஆர்வம் … Read more

‘சாதிவாரி கணக்கெடுப்பை எதிர்த்துவிட்டு இப்படி செய்யலாமா?’ – பிரதமர் மோடிக்கு ஜெய்ராம் ரமேஷ் கேள்வி

புதுடெல்லி: சாதிவாரி கணக்கெடுப்பை காங்கிரஸ் வலியுறுத்தியபோது அதனை கடுமையாக எதிர்த்த பிரதமர் நரேந்திர மோடி, தற்போது அதற்கான அனைத்துப் பெருமைகளையும் தனதாக்கிக்கொள்வதாக ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி முதல்வர்கள், துணை முதல்வர்களின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் 20 முதல்வர்கள், 18 துணை முதல்வர்கள் கலந்து கொண்டனர். மத்திய அமைச்சரும் பாஜக தேசிய தலைவருமான ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் மற்றும் … Read more

‘பொதுமக்களை கொன்றுவிட்டு தண்டனையிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது’ – சசி தரூர்

புதுடெல்லி: பொதுமக்களை கொன்றுவிட்டு, பிறகு தண்டனையிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது என காங்கிரஸ் எம்.பி சசி தரூர் பாகிஸ்தானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. இதில் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மற்றும் விமானப்படை தளங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. 4 நாட்களாக நடைபெற்ற போர் கடந்த 10-ம் தேதி முடிவுக்கு வந்தது. இதையடுத்து சர்வதேச பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை ஐ.நா. பாதுகாப்பு … Read more

வரன் தேடும் தளங்களில் வலைவீசும் திருடர்கள்! | மாய வலை

இன்று எல்லாம் இணையமயமாகிவிட்டது. இணையம் வழியாக நல்லது பலவும் நடந்தாலும், கெட்டதும் அதிகம் நடைபெறுகின்றன. இணையக் குற்றங்கள் அதற்குப் பாதை அமைத்துக் கொடுத்திருக்கின்றன. இணையக் குற்றங்கள் பல வகைகளிலும் நடக்கின்றன. அதில் இணையதளம் மூலம் திருமணத்துக்கு வரன் தேடுவோரும் இணையக் குற்றங்களுக்கு ஆளாகி வருகின்றனர். திருமணத்துக்கு வரன் தேடி லட்சக்கணக்கில் பணத்தை இழந்த ஓர் இளைஞரின் கதை இது. பெங்களூருவைச் சேர்ந்த ராஜ்குமார் ஏற்கெனவே திருமணமாகி விவகாரத்து ஆனவர். பெரிய நிறுவனத்தில் மேலாளர் பணியில் இருந்த அவரை … Read more

மகேஷ்க்கு எகிறும் பிபி.. முருகனின் வருகையால் நடக்க போவது என்ன? – கெட்டிமேளம் இன்றைய எபிசோட் அப்டேட்

Kettimelam Today’s Episode Update: மகேஷ் வீட்டில் ஜாமரை செட் செய்ய எல்லாருடைய போனும் டவர் கிடைக்காமல் போகிறது. கவினை போட்டோ எடுத்த ஏஜென்ட் அதை மஹேஷ்க்கு தெரியப்படுத்த போன் செய்து கொண்டே இருக்க போன் ரீச் ஆகவில்லை. 

ரூ.200 கோடி மதிப்புள்ள சென்னை நகர்புற நிதி பத்திரங்கள் தேசிய பங்குசந்தையில் முதலீடு! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: ரூ.200 கோடி மதிப்புள்ள சென்னை மாநகராட்சியின்  நகர்புற நிதி பத்திரங்களை தேசிய பங்குச்சந்தையில் பட்டியலிடும் நிகழ்வினை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மணி அடித்து  தொடங்கி வைத்தார். சென்னை, கலைவாணர் அரங்கில் இன்று திங்கட்கிழமை காலை 10.15 மணியளவில் நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் நடைபெறும் நகர்ப்புர நிதிப் பத்திரங்கள் தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடுதல் விழாவில் (Listing Ceremony of “GCC Municipal Bonds” on … Read more

அஸ்ஸாம்: சிறைக்குள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை; மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

அஸ்ஸாம் மாநிலத்தின் ஸ்ரீபூமி மாவட்டத்தில் சிறைக் காவளர்களாகப் பணியாற்றுபவர்கள் பிரஜேந்திர கலிதா (50) மற்றும் ஹரேஷ்வர் கலிதா (47). இவர்கள் இருவரும் இரவில் சிறைச் சாலைக்கு வெளியே ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது, நள்ளிரவு 1 மணியளவில் அந்தப் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் வந்திருக்கிறார். பாலியல் வன்கொடுமை அந்தப் பெண்ணைச் சிறைச் சாலைக்குள் இழுத்துச் சென்று இரண்டு காவலர்களும் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர். இதை அந்தப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் … Read more

தேமுதிக சட்டப்பேரவை தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்: பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு

சென்னை: சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தொகுதிவாரியாக பொறுப்பாளர்களை நியமித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன. அந்தவகையில் தேமுதிக தனது கட்சியின் கட்டமைப்புகளை வலுப்படுத்தும் விதமாக மாற்றி அமைத்து வருகிறது. சமீபத்தில், தமிழக முழுவதும் மண்டல பொறுப்பாளர்களை அந்த கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா அறிவித்தார். தொடர்ந்து தொகுதி வாரியாக பொறுப்பாளர்களை நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி … Read more

தென்மேற்கு பருவமழை தீவிரம்: கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், மும்பை, கர்நாடகாவிலும் கனமழை

மும்பை: தென்மேற்கு பருவமழை நேற்று (மே 25, 2025) தொடங்கியதால் மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரள மாநிலங்களில் கனமழை பொழிந்து வருகிறது. கேரளாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (மே.26) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அங்கு 11 மாவடங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல், கர்நாடகாவிலும் சில பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மும்பையில் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் நேற்று (மே 25, 2025) தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இது கடந்த 35 … Read more

ஜெயிலர் 2வில் மெகா சர்ப்ரைஸ்! 11 வருடங்கள் கழித்து ரஜினியுடன் நடிக்கும் பிரபல நடிகர்..

Actor Santhanam With Rajinikanth In Jailer 2 : ஜெயிலர் 2 திரைப்படத்தின் அப்டேட் தற்போது வெளியாகி இருக்கிறது. ஒரு பிரபல நடிகர், ரஜினியுடன் 11 வருடங்கள் கழித்து நடிக்க இருக்கிறார். அவர் யார் தெரியுமா?