மேகாலயா மாநிலம் சிரபுஞ்சி அருகே உள்ள பள்ளத்தாக்கு ஒன்றில் கடந்த வாரம் ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்ட வழக்கில் கணவரை கொன்றதாக மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். மேகாலயாவின் கிழக்கு காசி ஹில்ஸ் மாவட்டத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து அம்மாநில போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். அதேவேளையில், மத்திய பிரதேச மாநில இந்தூரில் இருந்து மேகாலயாவுக்கு தேனிலவு சென்ற ராஜா ரகுவன்ஷி மற்றும் சோனம் தம்பதியர் காணாமல் போனதாக புகாரளிக்கப்பட்டது. சோனம் மற்றும் ராஜா […]
