கனவுகள் கலைந்து சோகத்தில் மூழ்கிய குடும்பங்கள் – அகமதாபாத் விமான விபத்து பெருந்துயர்

அகமதாபாத்: அகம​தா​பாத்​தில் நடந்த 241 உயிர்​களை இழந்த பயங்​கர​மான விமான விபத்​தில் பல குடும்​பங்​களின் கனவு​கள் கலைந்து போயுள்​ளன. குஜ​ராத் மாநிலம் அகம​தா​பாத்​தில் நேற்று முன்​தினம் ஏர் இந்​தியா விமானம் விபத்​துக்​குள்​ளானது. இதில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயி​ரிழந்​தனர். ஒரு​வர் மட்​டுமே உயிர்​பிழைத்​தார். இதில் பயணம் செய்தவர்களின் கனவு​கள் கலைந்து அவர்​களது குடும்​பத்​தைச் சேர்ந்​தவர்​கள் மீள முடி​யாத சோகத்​துக்​குச் சென்​றுள்​ளனர். விபத்​தில் ராஜஸ்​தானைச் சேர்ந்த 10 பேர் இறந்​தனர். அதில் 5 பேர் ஒரே குடும்​பத்தை சேர்ந்​தவர்​கள் என்று தெரிய​வந்​துள்​ளது.

தொழில் ரீதி​யாக லண்​ட​னுக்கு குடியேற சென்ற மருத்​து​வர்​களின் குடும்​பம் இந்த விபத்​தில் உயி​ரிழந்​துள்​ளது பலருக்கு கண்​ணீரை வரவழைத்​துள்​ளது. டாக்​டர் பிரதீக் ஜோஷி, அவரது மனைவி டாக்​டர் கோனி வியாஸ் ஆகியோர் தங்​கள் 3 குழந்​தைகளான மிரா​யா, நகுல், பிரத்​யுத் ஆகியோ​ருடன் புதிய வாழ்க்​கை​யைத் தொடங்​கு​வதற்​காக லண்​ட​னுக்​குப் பயணம் செய்​தனர். இதில் பிரத்​யுத்​தும், நகுலும் 5 வயதே​யான இரட்​டையர்​கள். மிரா​யா​வுக்கு 8 வயதாகிறது.

அவர்​கள் தொழில்​முறை முன்​னேற்​றத்​துக்​காக​வும், தங்​கள் குழந்​தைகளின் எதிர்​காலத்​துக்​காக​வும் இந்த முடிவை எடுத்​திருந்​தனர். ஆனால் நடந்து முடிந்த கோர விபத்​தில் டாக்​டர் பிரதீக் ஜோஷி குடும்​பத்​தார் அனை​வரும் இறந்​தது பலரை சோகத்​தில் ஆழ்த்​தி​யுள்​ளது. விமானம் புறப்​படு​வதற்கு முன்பு கோனி வியாஸ், பிரதீக் தங்​களது குழந்​தைகளு​டன் செல்பி எடுத்​துக்​கொண்டு அதை சமூக வலை​தளத்​தில் பதி​விட்​டுள்​ளனர். ஆனால், அதுவே அவர்​களது கடைசி புகைப்​பட​மாகி விட்​டது.

சிகிச்​சைக்​காக வந்​தவர்: லண்​டனைச் சேர்ந்த ரூபல் பென் படேல், தனது கணவர், 3 குழந்​தைகளு​டன் லண்​டனில் வசித்து வந்​தார். இந்​நிலை​யில் அவர் தனது மருத்​துவ சிகிச்​சைக்​காக குஜ​ராத்​துக்கு வந்து அவரது உறவினர் வீட்​டில் தங்​கி​யிருந்​தார். சிகிச்சை முடிந்த நிலை​யில் அவர், லண்​டன் விமானத்​தில் புறப்​பட்​டார். ஆனால், துர​திருஷ்ட​வச​மாக விபத்​தில் சிக்கி இறந்​தார். அவரை வழியனுப்ப ரூபல் பென்​னின் அண்​ணன், அண்ணி ஆகியோர் அகம​தா​பாத் வந்​திருந்​தனர். வழியனுப்பி விட்டு அவர்​கள் ஊருக்​குத் திரும்​பிய பின்​னர்​தான் தனது தங்கை ரூபல் பென் இறந்த செய்தி அவருக்கு தெரிந்​துள்​ளது.

மகளைக் காணச் சென்​றவர்: இதே​போல வதோத​ராவைச் சேர்ந்த அஞ்சு சர்​மா​வும் விபத்​தில் இறந்​தார். இவர் லண்​டனில் உள்ள மூத்த மகளைக் காண லண்​ட​னுக்​கு, போயிங் 787 விமானத்​தில் பயணித்து இறந்​தார். அஞ்சு சர்மா இறந்​துள்​ள​தால் அந்த கிராமமே சோகத்​தில் மூழ்​கி​யுள்​ளது. அவர் இறந்த தகவல், அஞ்​சு​வின் வயதான பெற்​றோருக்கு இன்​னும் தெரிவிக்​கப்​பட​வில்​லை. அஞ்​சு​வின் தந்தை ஜெகதீஷ் சர்​மா, முன்​னாள் ராணுவ வீரர். மூப்பு காரண​மாக படுத்த படுக்​கை​யாக உள்​ளார். இதே​போல அவரது தாயும் உடல் நலமின்றி உள்​ளார்.

இதுகுறித்து அஞ்​சு​வின் தங்கை நீலு சர்மா கூறும்​போது, “வி​மானத்​தில் ஏறிய பின்​னர், அஞ்சு சர்மா எனக்கு வீடியோ கால் செய்​தார். ஆனால் அப்​போது என்​னால் போனை எடுக்க முடிய​வில்​லை. அவரை இனி பார்க்​கவே முடி​யாது என்று எண்​ணும் போது சோகம்​ தாங்​க முடிய​வில்​லை” என்​று கூறி​விட்​டு உடைந்​து அழு​தார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.