மேற்கு வங்க மாணவிக்கு பாலியல் கொடுமை: சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவு; 4 பேர் கைது

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்​தில் தெற்கு கொல்​கத்தா சட்​டக் கல்​லூரி அமைந்​துள்​ளது. இதில் பயிலும் மாணவி கடந்த 25-ம் தேதி கூட்டு பாலியல் வன்​கொடுமை செய்​யப்​பட்​ட​தாக கூறப்​படு​கிறது. இது தொடர்​பாக அந்த மாணவி கஸ்பா காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​துள்​ளார்.

அதில், ‘‘தேர்வு விண்​ணப்​பத்தை பூர்த்தி செய்​வது தொடர்​பாக கல்​லூரி ஊழியர் மனோஜித் மிஸ்​ராவை சந்​தித்​தேன். அப்​போது தன்னை திரு​மணம் செய்து கொள்​ளு​மாறு அவர் என்​னிடம் கூறி​னார். இதற்கு மறுப்பு தெரி​வித்​தேன்.

பின்​னர், 2 மாணவர்​களை அழைத்து என்னை பாது​காவலர் அறைக்கு கூட்​டிச் செல்​லு​மாறு அறி​வுறுத்​தி​னார். அவர்​கள் என்னை வலுக்​கட்​டாய​மாக அங்கு அழைத்​துச் சென்​றனர். பின்​னர் பாது​காவலரை வெளியே இருக்​கு​மாறு கூறி​விட்டு என்னை வன்​கொடுமை செய்​தனர். இந்த சம்​பவத்தை தடுக்க பாது​காவலர் எந்த நடவடிக்​கை​யும் மேற்​கொள்​ள​வில்​லை’’ என கூறி​யிருந்​தார். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது.

இது தொடர்​பாக ஜைப் அகமது (19) பிரமித் முகர்ஜி (20) ஆகிய இரு மாணவர்​கள் மற்​றும் கல்​லூரி ஊழியர் மனோஜித் மிஸ்ரா (30) ஆகிய 3 பேர் கடந்த 26-ம் தேதி கைது செய்​யப்​பட்​டனர். கல்​லூரி​யின் பாது​காவலர் பினாகி பானர்​ஜியை போலீ​ஸார் நேற்று கைது செய்​தனர். இத்​துடன் இந்த வழக்​கில் கைது செய்​யப்​பட்​டோர் எண்​ணிக்கை 4 ஆக அதி​கரித்​துள்​ளது.

இதுகுறித்து காவல் துறை அதி​காரி ஒரு​வர் கூறும்​போது, “பாலியல் வன்​கொடுமையை தடுக்​காதது ஏன் என்ற கேள்விக்கு பினாகி பானர்ஜி முரண்​பட்ட பதில் அளிக்​கிறார். யாருடைய அறி​வுறுத்​தலின் பேரில் அவர் தனது அறையை விட்டு வெளி​யேறி​னார் என்​ப​தற்​கும் அவர் பதில் அளிக்க வேண்​டும்’’ என்​றார்.

இந்த விவ​காரம் குறித்து விசா​ரிக்க 5 பேர் கொண்ட சிறப்பு புல​னாய்​வுக் குழு (எஸ்​ஐடி) அமைக்​கப்​பட்​டுள்​ள​தாக கொல்​கத்தா காவல் துறை அதி​காரி ஒரு​வர் தெரி​வித்​துள்​ளார்.

சிறப்பு கண்​காணிப்பு பிரி​வின் (எஸ்​எஸ்​டி) ஏசிபி பிர​திப் குமார் கோஷல் கண்​காணிப்​பில் விசா​ரணை நடை​பெறும் என தகவல் வெளி​யாகி உள்​ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், கொல்​கத்​தா​வில் உள்ள ஆர்​.ஜி.கர் அரசு மருத்​து​வக் கல்​லூரி மற்​றும் மருத்​து​வ​மனை​யில் முதுகலை பயிற்சி பெண் மருத்​து​வர் ஒரு​வர் பாலியல் வன்​கொடுமை செய்​யப்​பட்டு கொல்​லப்​பட்​டார். இந்​தச் சம்​பவம் நடந்து 10 மாதங்​கள் கடந்​துள்ள நிலை​யில், கொல்​கத்​தா​வில் மீண்​டும் ஒரு பாலியல்​ வன்​கொடுமை சம்​பவம்​ நடந்​துள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.