தமிழக வாழ்வுரிமை கட்சி பாமகவுடன் இணையாது: தலைவர் வேல்முருகன் திட்டவட்டம்

கடலூர்: நடிகர் விஜய், மாணவர்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக வேல்முருகனுக்கு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தமிழக வாழ்வுரிமை கட்சி அலுவலகத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சேலத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சித் தலைவர் வேல்முருகன், 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய் வழங்கி வரும் கல்வி விருது நிகழ்வையும், விருது பெறும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் … Read more

“ஒவ்வொரு சாதாரண இந்தியரின் பொருளாதார அழுத்தம்…” – ராகுல் காந்தி ‘டேட்டா’ விமர்சனம்

புதுடெல்லி: “பிரமாண்டமான நிகழ்வுகளை விட, அன்றாட வாழ்க்கையின் யதார்த்தத்தில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட சில முதலாளிகளுக்கு மட்டுமல்ல, அனைத்து இந்தியர்களுக்கும் வேலை செய்யும் பொருளாதாரம் வேண்டும்” என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இரு சக்கர வாகனங்கள், கார்கள் மற்றும் மொபைல் போன்களின் விற்பனையில் சரிவைக் காட்டும் புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டி, இந்திய பொருளாதாரத்தின் நிலை குறித்து ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “புள்ளிவிவரங்கள் உண்மையைச் சொல்கின்றன. கடந்த … Read more

அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று மற்றும் நாளை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 07-06-2025 முதல் 09-06-2025 … Read more

பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை

புதுடெல்லி, ஜம்மு மற்றும் காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இதில், நேபாள நாட்டை சேர்ந்த ஒருவர் உள்பட சுற்றுலாவுக்காக சென்ற பயணிகள் 26 பேர் பலியானார்கள். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பின்னணியில் பாகிஸ்தானை சேர்ந்த, தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்துடன் இணைந்த ரெசிஸ்டண்ட் பிரன்ட் என்ற பயங்கரவாத அமைப்புக்கு உள்ள தொடர்பு தெரிய வந்தது. இதற்கு பதிலடியாக, இரு வாரங்களுக்கு பின்னர் பாகிஸ்தான் மற்றும் … Read more

டி.என்.பி.எல்: திண்டுக்கல் அணிக்கு 150 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கோவை

கோவை, 9-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது. கோவை, சேலம், நெல்லை, திண்டுக்கல் ஆகிய நகரங்களில் மொத்தம் 32 ஆட்டங்கள் நடைபெறுகிறது. இந்த கிரிக்கெட் திருவிழாவில் நடப்பு சாம்பியன் திண்டுக்கல் டிராகன்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், கோவை கிங்ஸ் உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் … Read more

பாகிஸ்தான்: 2025-26 பட்ஜெட்டிற்கு ரூ.4.2 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்ய ஒப்புதல்

பாகிஸ்தான் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தானின் தேசிய பொருளாதார கவுன்சில்(NCC), அந்நாட்டின் 2025-26 நிதியாண்டிற்கான 4.2 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP) வளர்ச்சி இலக்குடன் கூடிய தேசிய வளர்ச்சி பட்ஜெட்டிற்கு, ரூ.4,224 பில்லியன்(இந்திய மதிப்பில் சுமார் ரூ.4.2 லட்சம் கோடி) ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளித்துள்ளது. இஸ்லாமாபாத்தில் நேற்று நடைபெற்ற பாகிஸ்தானின் தேசிய பொருளாதார கவுன்சில் கூட்டத்தில் பஞ்சாப், சிந்து, கைபர் பக்துன்க்வா மற்றும் பலுசிஸ்தான் ஆகிய நான்கு மாகாண முதல்-மந்திரிகள் கலந்து கொண்டனர். … Read more

தமிழகத்தில் ஜூன் 9-ம் தேதி வரை பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 9-ம் தேதி வரை 4 நாட்களுக்கு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று (ஜூன் 6) ஓரிரு இடங்களிலும், வரும் 7 முதல் 9-ம் தேதி வரை சில இடங்களிலும் இடி, … Read more

நாட்டு நலனுக்காக பணிபுரிவது கட்சி விரோத செயலா? – காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் கேள்வி

வாஷிங்டன்: நாட்டு நலனுக்காக பணிபுரிவதை கட்சி விரோத செயல் என கூறுபவர்கள் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தெரிவித்துள்ளார். பஹல்காம் தீவிரவாத தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய பாதுகாப்புப் படை துல்லிய தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்குவதற்காக நாடாளுமன்ற எம்.பி.க்கள் அடங்கிய 7 குழுக்களை பல்வேறு நாடுகளுக்கு மத்திய அரசு அனுப்பி வைத்தது. இதில் காங்கிரஸ் … Read more

விஜய்க்கு அமித்ஷா நிகழ்ச்சிக்கு அழைப்பு

கோவை தவெக தலைவர் விஜய்க்கு அமைச்சர் அமித்ஷா பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளதகா நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இன்று கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம், “பெங்களூரில் நெரிசலில் சிக்கி இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் கர்நாடக மாநிலத்தின் ஆளும் கட்சியினர் சரியான ஏற்பாடு செய்யாததே காரணம். இது போன்ற நிகழ்வுகளை பாதுகாப்போடு நடத்த வேண்டும். மகாராஷ்ராவில் அதைவிட அதிகமாக கூட்டம் கூடிய போதும் கூட சிறு பிரச்சனை ஏற்படவில்லை. தேனி … Read more

ஒடிசா: அடுத்தடுத்து 6 நோயாளிகள் மருத்துவமனையில் மரணம்; மந்திரி நேரில் சென்று விசாரணை

கொராபுட், ஒடிசாவின் கொராபுட் மாவட்டத்தில் ஷாகீத் லட்சுமண் நாயக் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை உள்ளது. இதில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் 6 பேர், கடந்த செவ்வாய் மற்றும் புதன் ஆகிய 2 நாட்களில் அடுத்தடுத்து மரணம் அடைந்தது, அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி துறை ரீதியிலான விசாரணை நடந்து வருகிறது. இதுதவிர, மருத்துவ கல்வி மற்றும் பயிற்சி இயக்குநரான சந்தோஷ் மிஷ்ராவும், தனியாக நிபுணர் குழுவினருடன் விசாரணை மேற்கொண்டு வருகிறார். அவருடைய குழுவினர் நோயாளிகள் … Read more