‘ஆர்.எம்.வி – தி கிங் மேக்கர்’ ஆவணப்படத்தின் முன்னோட்டம் வெளியானது!

RMV The King Maker : சத்யா மூவிஸ் தயாரிக்கும் அருளாளர் ஐயா இராம வீரப்பன் குறித்த  ஆவணப்படத்தின் முன்னோட்டம் வெளியானது.  

NDA கூட்டணியில் விஜய்யா?.. நயினார் நாகேந்திரன் ஓபன்!

தவெக தலைவர் விஜய்க்கு ஏற்கனவே அழைப்பு விடுத்ததாகவும் அவரின் பதிலுக்காக காத்திருப்பதாகவும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். 

ஐபிஎல்லின் சிறந்த பிளேயிங் 11.. இடம் பிடித்த இரண்டு சிஎஸ்கே வீரர்கள்!

2025 ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், ஜூன் 3ஆம் தேதி முடிவடைந்துள்ளது. 18 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த சீசனில் முதல் முறையாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. தொடர் முழுக்க ஆதிக்கம் செலுத்தி வந்த அணி அணி, இறுதி போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது.  இத்தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க … Read more

10 பேரை பலிவாங்கிய ஐபிஎல் வெற்றிக் கொண்டாட்டம்… கர்நாடக உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு

ஐபிஎல் கோப்பையை வென்றதை அடுத்து புதன்கிழமை (ஜூன் 4) சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ஆர்சிபி அணியின் வெற்றி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் தொடர்பாக மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து தாக்கல் செய்த பொது நல வழக்கை (பிஐஎல்) தற்காலிக தலைமை நீதிபதி வி. காமேஸ்வர ராவ் தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் இன்று பிற்பகல் விசாரித்தது. விசாரணையின் போது அரசு தரப்பில் … Read more

Israel: "கிரேட்டா தன்பெர்கின் படகை எதிர்கொள்ள 'தயாராக' இருக்கிறோம்" – இஸ்ரேல் ராணுவ அதிகாரி!

சுவிடனைச் சேர்ந்த 22 வயது காலநிலை செயற்பாட்டாளர் கிரேட்டா தன்பெர்க், காசாவில் மனிதாபிமான உதவிகளை தடுத்துவரும் இஸ்ரேஸ் ராணுவத்தை எதிர்த்து, அங்குள்ள மக்களுக்கு உதவிகள் வழங்குவதற்காகக் கடந்த ஜுன் 1ம் தேதி சிசிலியில் உள்ள கேடேனியா துறைமுகத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றார். இஸ்ரேல் ராணுவம் கிரேட்டா தன்பெர்க் செல்லும் ஃப்ரீடம் ஃப்ளோட்டிலா கூட்டணியின் (FCC) மேடலின் கப்பலை தடுத்து நிறுத்த தயாராக இருப்பதாக மூத்த ராணுவ அதிகாரி தெரிவித்திருக்கிறார். இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் (IDF) செய்தித் தொடர்பாளர் … Read more

“எத்தனை ரஃபேல் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன?” – திமுக எம்.பி டி.ஆர்.பாலு கேள்வி

தாம்பரம்: “ஆபரேஷன் சிந்தூரில் எத்தனை ரஃபேல் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன?” என்று திமுக எம்.பி டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பியுள்ளார். தாம்பரம் மாநகர திமுக சார்பில் கருணாநிதியின் 102-வது பிறந்தநாள் பொதுக் கூட்டம் தாம்பரத்தில் நேற்று (ஜூன் 4) நடைபெற்றது. தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் திமுக பொருளாளரும், திமுக மக்களவை குழுத்தலைவருமான டி.ஆர்.பாலு மற்றும் திமுக தேர்தல் பணிக்குழு செயலாளர் கம்பம் பெ.செல்வேந்திரன் ஆகியோர் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் டி.ஆர்.பாலு பேசியது: “இந்தியா … Read more

அசாம் மழை, வெள்ளத்தால் 7 லட்சம் மக்கள் பாதிப்பு – இதுவரை 19 பேர் உயிரிழப்பு

குவஹாத்தி: அசாமில் வெள்ள பாதிப்பு தொடர்ந்து மோசமாக இருந்து வருவதாகவும், 21 மாவட்டங்களில் கிட்டத்தட்ட 7 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பிரம்மபுத்திரா உள்ளிட்ட முக்கிய ஆறுகளின் நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெள்ள பாதிப்பு தொடர்பாக அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஹைலகண்டி, திப்ருகார், மோரிகான், ஹோஜாய், கம்ரூப், நாகோன், கோலாகாட், பிவநாத், கச்சார், ஸ்ரீபூமி, சோனித்பூர், லக்கிம்பூர், தர்ராங், பார்பேட்டா, கோல்பாரா, தெற்கு சல்மாரா, கர்பி அங்லாங் … Read more

விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ள தமிழிசை சவுந்தரராஜன்! வேறு யாரும் கொடுக்கவில்லை!

விஜய் கல்வி விருது வழங்கும் விழாவை பற்றி வேல்முருகன் கொச்சையாக பேசியது கடும் கண்டனத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் விஜய்க்கு தமிழிசை சவுந்தரராஜன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

சின்னசாமி துயர சம்பவத்துக்கு விராட் கோலியின் ரியாக்ஷன் – திட்டி தீர்க்கும் ரசிகர்கள்

Virat Kohli : ஆர்சிபி அணியின் ஐபிஎல் 2025 சாம்பியன் வெற்றிக் கொண்டாட்டம் பெரும் துயரச் சம்பவமாக மாறியது. பெங்களூரு சின்னசாமி மைதானம் அருகே ரசிகர்கள் பெருமளவு குவிந்ததால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இந்த கோர துயர சம்பவத்துக்கு நாட்டின் முக்கிய தலைவர்கள் முதல் கிரிக்கெட் வீரர்கள் வரை எல்லோரும் தங்களின் அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர். அதேநேரத்தில் ஆர்சிபி அணியின் அடையாளமாக உள்ள விராட் கோலி இந்த சம்பவத்துக்கு எந்த ரியாக்ஷனும் … Read more

இந்த வேலையும் போச்சா: அடுத்த டார்கெட் இவங்கதான், டெலிவரி பாய் ஆகும் AI

Amazon Latest News: அமேசான் தற்போது மற்றொரு தொழில்நுட்ப புரட்சிக்கு தயாராகி வருகிறது. அந்த நிறுவனம் விரைவில் Humanoid Robots எனப்படும் மனித உருவ ரோபோக்களை (அதாவது மனிதர்களைப் போல தோற்றமளிக்கும் மற்றும் வேலை செய்யும் ரோபோக்கள்) சோதிக்கத் தொடங்க உள்ளது. இது எதிர்காலத்தில் பார்சல் டெலிவரிக்கு உதவ சோதிக்கப்படுவதாக கூறப்படுகின்றது. சான் பிரான்சிஸ்கோவில் உள்ள ஒரு அலுவலகத்தில் கட்டப்பட்ட ஒரு சிறப்பு உட்புற “மனித உருவ பூங்காவில்” இந்த சோதனை செய்யப்படும். உண்மையான டெலிவரி சூழ்நிலைகளில் … Read more