முல்லைப் பெரியாறு அணையில் இருந்து இருபோக பாசனத்துக்கு தாமதமின்றி தண்ணீர் திறக்க வலியுறுத்தல்

மதுரை: முல்லைப் பெரியாறு அணையிலிருந்து இருபோக பாசனத்துக்கு கால தாமதமின்றி தண்ணீர் திறக்க வேண்டும் என மதுரையில் இன்று நடந்த விவசாயிகள் கருத்துக் கேட்பு கூட்டத்தில் வலியுறுத்தினர். மதுரை பொதுப்பணித் துறை அலுவலகத்தில் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து இரு போக பாசனத்துக்கு தண்ணீர் திறப்பதற்கான, விவசாயிகளின் கருத்துக் கேட்பு கூட்டம் பென்னிகுயிக் அரங்கில் நடைபெற்றது. இதற்கு பெரியாறு வைகை வடிநிலக் கோட்ட செயற் பொறியாளர் பாரதி தாசன் தலைமை வகித்தார். மேலூர் பிரிவு உதவி செயற் பொறியாளர் … Read more

மத்திய அரசு மருத்துவனைகளில் ‘மெடிக்கல் ரெப்’களுக்கு தடை!

புதுடெல்லி: நோயாளிகளின் நலன்களைக் காக்கவும், நெறிமுறைகள் சார்ந்த தரத்தை கடைபிடிக்கவும், மத்திய அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களை மருத்துவப் பிரதிநிதிகள் சந்திப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு நடத்தும் அனைத்து மருத்துவனைகளிலும், மருத்துவமனை வளாகத்துக்குள் மருத்துவமனை பிரதிநிகள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்று சுகாதார சேவைகள் இயக்குநரகம் (DGHS) அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து டிஜிஹெச்எஸ் வெளியிட்டுள்ள உத்தரவில், “இந்த உத்தரவு, மருத்துவமனை வளாகத்துக்குள் மருத்துவப் பிரதிநிதிகளை அனுமதிக்கக் கூடாது என்ற முந்தைய உத்தரவு தொடர்பானது. இதன்படி, மருத்துவமனை வளாகத்துக்குள், … Read more

‘Umeed’ Portal: வக்ஃப் சொத்துக்களை பதிவு செய்ய புதிய இணையதளத்தை தொடங்குகிறது மத்தியஅரசு

டெல்லி: வக்ஃப் சொத்துக்களை பதிவு செய்வதற்கான புதிய போர்ட்டலை ஜூன் 6 ஆம் தேதி மத்திய அரசு தொடங்க உள்ளது. வஃபு சொத்துக்கள் தொடர்பாக மத்தியஅரசு புதிய சட்டம் கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்தன் சில விதிகளுக்கு மத்தியஅரசு இடைக்கால தடை விதித்துள்ளது. இந்த நிலையில்,  வக்பு சொத்துக்களை பதிவு செய்ய புதிய இணையதளம் தொடங்கம் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த இணைய தளம் வரும் 6ந்தேதி (ஜுன் 6) தொடங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி … Read more

ராணிப்பேட்டை: கடத்திவரப்பட்ட 100 கிலோ கஞ்சா மூட்டைகள் – கேரள இளைஞர்கள் 2 பேர் கைது

வெளிமாநிலங்களில் இருந்து ராணிப்பேட்டை மாவட்டத்துக்குள் கஞ்சா போன்ற போதைப்பொருள்கள் கடத்திவரப்படுவதாக அம்மாவட்ட போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக, போதைப்பொருள் கடத்தல்காரர்களை கையும் களவுமாகப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டையையும் முடுக்கிவிட்டார் எஸ்.பி விவேகானந்த சுக்லா. அதன்படி, மூன்று மூட்டை கஞ்சாவுடன் இரண்டு இளைஞர்கள் பிடிபட்டனர். கஞ்சா மூட்டைகளுடன் பிடிபட்ட கேரள இளைஞர்கள் மூன்று மூட்டைகளிலும் சேர்த்து சுமார் 100 கிலோ எடையிலான கஞ்சா இருந்தது தெரியவந்தது. அதன் மதிப்பு சுமார் ரூ.30 லட்சம் எனவும் … Read more

மதுரை – தூத்துக்குடி நெடுஞ்சாலையில் இரு சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்க ஐகோர்ட் தடை

மதுரை: மதுரை – தூத்துக்குடி சாலையில் எலியார்பத்தி, புதூர் பாண்டியபுரம் சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் வசூலிக்க தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை கடந்த 2011-ல் பயன்பாட்டுக்கு வந்தது. சாலை ஒப்பந்த அடிப்படையில் தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் மரங்கள் மற்றும் நெடுஞ்சாலை நடுவில் (சென்டர் மீடியன்) செடிகள் நட்டு பரமரிப்பது உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்ய … Read more

‘ஒரே நாடு, ஒரே கணவர்’ திட்டமா? – பகவந்த் மானின் கருத்தால் வெடித்தது சர்ச்சை!

சண்டிகர்: ஆபரேஷன் சிந்தூரை கேலி செய்யும் விதமாக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பேசிய கருத்தானது பெரும் அரசியல் சர்ச்சையை தூண்டியுள்ளது. அவர் இந்திய ராணுவத்தை விமர்சித்ததாக பாஜக தெரிவித்துள்ளது. லூதியானாவில் இடைத்தேர்தலுக்கு முன்னதாக, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாஜக வாக்கு சேகரிப்பது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், “ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாஜக வாக்குகளை கோருகிறது. அவர்கள் ‘சிந்தூர்’ என்பதை நகைச்சுவையாக மாற்றியுள்ளனர். அவர்கள் ஒவ்வொரு வீட்டுக்கும் சிந்தூர் … Read more

கமல்ஹாசனால் விஜய்க்கு வந்த சிக்கல்! தக் லைஃப்க்கு வந்த நிலை ஜனநாயகன் படத்துக்குமா?

கர்நாடகாவில் தக் லைஃப் படம் வெளியாகவில்லை என்றால், கே.வி.என். புரொடக்ஷன்ஸ் தயாரித்த ஜானநாயகன் படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம் என சமூக வலைத்தளத்தில் பலரும் கமலுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். 

ரயில்களில் படுக்கை வசதி பெட்டிகளின் எண்ணிக்கையை குறைக்கக்கூடாது.. அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!

ரயிலில் படுக்கை வசதி பெட்டிகளின் எண்ணிக்கையை குறைக்கக்கூடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். 

Deepika Padukone: "தீபிகா படுகோன் கேட்பது நியாயமான கோரிக்கை!" – ஆதரவு தெரிவிக்கும் மணி ரத்னம்!

இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் ‘ஸ்பிரிட்’ திரைப்படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தில் முதலில் கதாநாயகியாக நடிப்பதற்கு தீபிகா படுகோனே கமிட்டாகியிருந்தார். ஆனால், அதன் பிறகு அவர் படத்திலிருந்து விலகினார். Deepika Padukone அவருக்கு பதிலாக நடிகை த்ரிப்தி டிம்ரி படத்தில் நடிக்கவந்திருக்கிறார். தீபிகா படுகோனே சந்தீப் ரெட்டி வங்காவின் இத்திரைப்படத்திலிருந்து விலகியதற்கான காரணங்கள் குறித்து பலவற்றைக் கூறப்பட்டது. அதில், தீபிகா படுகோனே தன்னுடைய குழந்தையைப் பார்த்துக் கொள்ளவேண்டும் என்கிற காரணத்தினால் ஒரு நாளைக்கு 8 மணி … Read more

2025 IPL T20 கோப்பையை ஆர்.சி.பி. அணி நிச்சயம் வெல்லும்… விராட் கோலி ரசிகராக மாறிய ரிஷி சுனக் கணிப்பு…

இந்தியன் பிரீமியர் லீக் டுவென்டி20 கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. 18 ஆண்டுகால ஐ.பி.எல். வரலாற்றில் முதல்முறையாக இவ்விரு அணிகளும் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. இதனால் தங்களது அணியே கோப்பையை வெல்லும் என்று இரு அணி ரசிகர்களும் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்த போட்டியைக் காண அகமதாபாத் வந்துள்ள இங்கிலாந்து முன்னாள் பிரதமர் ரிஷி சுனக், ஆர்.சி.பி. அணியே இம்முறை கோப்பையை … Read more