ஹமாஸ் தலைவர் முகமது சின்வாருக்கு இஸ்ரேல் படைகள் முடிவு கட்டியது எப்படி?

ஜெருசலேம்: ஹமாஸ் தலைவர் முகமது சின்வார் மற்றும் முகமது சபோனே ஆகி யோரை கொன்றது தொடர்பான 3டி வீடியோவை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து இஸ்ரேலிய பாது காப்பு படை கூறியுள்ளதாவது: காசாவின் கான் யூனுஸ் நகரில் அமைந்துள்ள ஐரோப்பிய மருத்துவமனைக்கு அடியில் ஒரு பதுங்கு குழி கட்டமைப்பு இருப்பதை இஸ்ரேலிய ராணுவம் கண்டுபிடித்தது. ஹமாஸ் போர் கட்டுப்பாட்டு மையமாகவும் அது செயல்பட்டு வந்தது. நிலத்துக்கு அடியில் சுரங்கப்பாதை வழியாக சென்று அந்த மையத்தை அடையும் வழியும் … Read more

இந்தியாவில் 3500+ கொரோனா பரவல்.. தமிழ்நாட்டில் எத்தனை பேர் பாதிப்பு?

Corona virus: இந்தியாவில் 3500க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் 199 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ஹீரோவாக அறிமுகமாவும் விஷ்ணு விஷால் சகோதரர்! இயக்குனர் யார் தெரியுமா?

‘ஓஹோ எந்தன் பேபி’ படத்தின் மூலம் நம்பிக்கைக்குரிய நடிகர் ருத்ராவை நடிகர் விஷ்ணு விஷால் அறிமுகப்படுத்துகிறார். இவர் விஷ்ணு விஷாலின் இளைய சகோதரர்.

இந்தியாவில் சமூகநீதி போராளி என்றால் அது அய்யா தான் – அன்புமணி பேச்சு!

கடந்த இரண்டு நாட்களாக சோழிங்கநல்லூரில் நடைபெற்ற கூட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்கள் சந்தித்து அன்புமணி ராமதாஸ் ஆலோசனைகளை வழங்கினார்.

ஞானசேகரனுக்கு 30ஆண்டுகள் ஆயுள் தண்டனை: அண்ணா பல்கலை மாணவி வழக்கில் நீதிபதி அதிரடி தீர்ப்பு…

சென்னை:  பாலியல் குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் ஆயுள் தண்டனை என்றும் 90ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மகளிர் நீதிமன்ற நீதிபதி அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளார். நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய யார் அந்த சார், விவகாரத்தில் அண்ணா பல்கலை மாணவி வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், இன்று தண்டனை அறிவிக்கப்பட்டது. அதன்படி,  அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகளுக்கு குறையாத ஆயுள் தண்டனை … Read more

May 2025 Top 5 Electric 4 Wheelers – இந்தியாவின் டாப் 5 எலக்ட்ரிக் கார் தயாரிப்பாளர்கள் மே 2025

இந்திய சந்தையில் டாடா மோட்டார்ஸ் எலக்ட்ரிக் வாகன சந்தையில் முன்னிலையில் இருந்தாலும், மஹிந்திரா மற்றும் எம்ஜி என இரண்டும் கடும் சவாலினை ஏற்படுத்த துவங்கியுள்ளது. முதலிடத்தில் உள்ள டாடா மோட்டார்சின் எலக்ட்ரிக் கார் விற்பனை எண்ணிக்கை Vahan தரவுகளின் அடிப்படையில் மே 2025ல் சுமார் 4,319 யூனிட்டுகளை டெலிவரி வழங்கியுள்ளது. இதற்கு அடுத்தப்படியாக எம்ஜி எலக்ட்ரிக் எண்ணிக்கை 3,732 ஆக உள்ளது. குறிப்பாக இந்நிறுவன விண்ட்சர் இவி அமோக ஆதரவினை கொண்டுள்ளது. மூன்றாவது இடத்தில் உள்ள மஹிந்திரா … Read more

`பெண்களுக்கு மாதம் ரூ.1500; சட்டவிரோதமாக வாங்கிய 2200 அரசு ஊழியர்கள்' -மகாராஷ்டிரா அரசு சொல்வதென்ன?

மகாராஷ்டிராவில் கடந்த நவம்பர் மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு மாநில அரசு, பெண்களுக்கு மாதம் ரூ.1500 வழங்கும் `லட்கி பெஹின் யோஜனா’ என்ற திட்டத்தை அறிவித்தது. தேர்தல் நேரம் என்பதால் இத்திட்டத்தில் தங்களது பெயர்களை பதிவு செய்து கொண்ட அனைவருக்கும் அவர்களது வங்கிக்கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டது. அரசு இத்திட்டத்தில் சேர சில நிபந்தனைகளை விதித்து இருந்தது. ஆனால் அந்த நிபந்தனைகள் பின்பற்றப்பட்டுள்ளதா என்று ஆவணங்களை ஆய்வு செய்யாமல் அவசரமாக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. தற்போது இத்திட்டத்தில் … Read more

ஏஜி டிஎம்எஸ் உட்பட 3 மெட்ரோ நிலைய நுழைவு வாயிலில் தானியங்கி டிக்கெட் பரிசோதிக்கும் இயந்திரத்தை மாற்ற முடிவு

சென்னை: சென்னையில் இரு வழித்தடங்களில் 54 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. பயணிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், மெட்ரோ ரயில் நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கிறது. இதன் ஒரு பகுதியாக, நெரிசல் மிகுந்த நேரங்களில் பயணிகள் எளிதாகச் செல்லும் வகையில், மெட்ரோ ரயில் நிலையங்களின் நுழைவு வாயில்களில் தானியங்கி டிக்கெட் பரிசோதிக்கும் இயந்திரங்களை, திறந்த முறையில் செயல்படும் வகையில் மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாத இறுதியில் ஆயிரம் விளக்கு மெட்ரோ ரயில் … Read more

கொல்கத்தா இஸ்கான் கோயிலின் ஜெகந்நாதர் ரதத்தில் சுகோய் போர் விமான சக்கரம்

கொல்கத்தா: கொல்கத்தா இஸ்கான் கோயிலில் வலம் வர உள்ள ஜெகந்நாதர் ரதத்தில் சுகோய் ரக போர் விமானத்தின் சக்கரம் பொருத்தப்படுகிறது. கொல்கத்தாவில் உள்ள இஸ்கான் கோயிலில் வரும் 27-ம் தேதி வருடாந்திர ரத யாத்திரை நடைபெற உள்ளது. இதில் வலம் வரவுள்ள ஜெகந்நாதர் ரதத்தில் ரஷ்யாவின் சுகோய் ரக போர் விமானத்தின் சக்கரங்களை பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சக்கரங்கள் விமானம் புறப்படும்போது மணிக்கு 280 கி.மீ. வேகத்தில் சுற்றும் திறன் வாய்ந்தவை ஆகும். ஆனால் … Read more

நைஜீரி​யா​ சாலை விபத்தில் 22 விளை​யாட்டு வீரர்​கள் உயி​ரிழப்பு

அபுஜா: நைஜீரி​யா​வில் நடந்த சாலை விபத்​தில் 22 விளை​யாட்டு வீரர்​கள் உயி​ரிழந்​தனர். நைஜீரிய நாட்​டின் தென்​மேற்கு பகு​தி​யில் அமைந்​துள்ள ஓகுன் மாகாணத்​தில் நடை​பெற்ற விளை​யாட்​டு போட்​டிகளில் பங்​கேற்று விட்டு 35 விளையாட்டு வீரர்​கள், பயிற்​சி​யாளர்​கள் நேற்று முன்​தினம் இரவு பேருந்​தில் வீடு திரும்பி கொண்​டிருந்​தனர். இந்த பேருந்து சிரோ​மாவா என்ற இடத்​தில் உள்ள மேம்​பாலத்​தில் சென்​ற​போது கட்​டுப்​பாட்டை இழந்து, மேம்​பாலத்​தின் தடுப்​புச்​சுவரை இடித்​துக் கொண்டு தரை​யில் விழுந்​தது. இதில் 22 பேர் உயி​ரிழந்​தனர். காயமடைந்​தவர்​கள் அரு​கிலுள்ள மருத்​து​வ​மனை​யில் … Read more