`ரித்தீஷ் ரூ.300 கோடிக்கும், ஆகாஷ் ரூ.500 கோடிக்கும் வீடு கட்டுகிறார்கள்' – நயினார் நாகேந்திரன்

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “மதுரையில் தூர்வாரப்படாமல் குப்பைகள் நிறைந்த கால்வாயை துணி மூடி மறைத்துள்ளனர். இதுதான் திராவிட மாடல் அரசு. நயினார் நாகேந்திரன் ஒரு முதலமைச்சருக்கு இந்த நாட்டில் என்ன நடக்கிறது என்று கூட தெரியவில்லை. அதிகாரிகள் அதனை மறைக்கிறார்கள். அதிகாரிகள் நாட்டில் என்ன நடக்கிறது என்பதை கவனித்து முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். கமல்ஹாசன் திமுகவுடன் கூட்டணி வைத்தது அவரின் … Read more

தமிழக ரயில் திட்டங்களுக்கான நிதியை வேறு மாநிலங்களுக்கு திருப்பி விடுவதா? – அன்புமணி கண்டனம்

சென்னை: தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை வேறு மாநிலங்களுக்கு திருப்பி விடுவதை அனுமதிக்க முடியாது. தமிழகத்துக்கான புதிய ரயில் பாதை திட்டங்களை விரைந்து செயல்படுத்துவது குறித்து மத்திய அரசிடம் தமிழக அரசு பேச வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வலைதளப் பதிவில்: “தமிழ்நாட்டில் திண்டிவனம் – திருவண்ணாமலை, சென்னை – மாமல்லபுரம்- கடலூர் உள்ளிட்ட பல்வேறு புதிய ரயில் பாதை திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த ரூ.728 கோடியை ரயில்வே … Read more

வடகிழக்கு மாநிலங்களில் மழை வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 30 பேர் உயிரிழப்பு!

குவாஹாட்டி: தேசத்தின் வடகிழக்கு மாநிலங்களான அசாம், மிசோரம், அருணாச்சல் பிரதேசம், சிக்கிம், மேகாலயா, திரிபுரா, மணிப்பூரில் கனமழையை அடுத்து ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் சுமார் 30 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், வடகிழக்கு மாநிலங்களில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் கடந்த 29-ம் தேதி முதல் மழை பொழிந்து வருவது குறிப்பிடத்தக்கது. இதில் 22 பேர் சனிக்கிழமை (மே 31) அன்று மட்டும் உயிரிழந்தனர். இதனை அரசு தரப்பு உறுதி … Read more

உயர்கல்வியை முடித்த சூர்யா மகள் தியா.. அடுத்து அம்மா ஜோதிகாவை வைத்து இயக்க பிளான்னிங்கா?

நேற்று முதல் தியாவுக்கும் சூர்யா மற்றும் ஜோதிகாவுக்கு ரசிகர்கள் தொடங்கி திரைத்துறையினர் வரை பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.  

அரசியல் வாழ்வில் இது எனக்கு ஒரு பாடம் – ஆதவ் அர்ஜுனா முக்கிய தகவல்!

உண்மையும், நேர்மையும் கொண்ட  ஒரு புதிய மக்கள் அரசியலைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற ஆவலுடனே நான் இந்த அரசியல் களத்திற்கு வந்தேன் என்று ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

இந்த வீரருக்கு இந்திய அணியில் இடமே கிடைக்காது – அப்போ ரோஹித்துக்கு யார் மாற்று?

Latest Cricket Updates In Tamil: ஐபிஎல் தொடர் நிறைவடைய இருக்கிறது. இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு வரும் ஜூன் 2வது வாரத்தில் இருந்து டெஸ்ட் விருந்து தொடங்கும் எனலாம். Cricket Updates: அடுத்தடுத்து டெஸ்ட் போட்டிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி (World Test Championship Final 2025) ஜூன் 11ஆம் தேதி தொடங்குகிறது. ஆஸ்திரேலியா – தென்னாப்பிரிக்கா (Australia – South Africa) அணிகள் மோதினாலும் இந்தியா உள்ளிட்ட மற்ற நாட்டு கிரிக்கெட் ரசிகர்களும் பெரும் … Read more

Ravi Mohan: "கடவுளின் அருளால் அனைத்தும் நன்றாக நடக்க வேண்டும்"- நடிகர் ரவி மோகன்

தென்னிந்திய ஸ்ட்ரீட் கிரிக்கெட் லீக் (Southern Street Premier League) நிகழ்ச்சி ஒன்றில் ரவி மோகன் கலந்துகொண்டிருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் பேசிய ரவி மோகன், “ என்னை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்ததற்கு மிக்க நன்றி. எனக்கு கிரிக்கெட் என்றால்  மிகவும் பிடிக்கும். பள்ளி, கல்லூரிகளில் அணியின் கேப்டனாக இருந்திருக்கிறேன். ரவி மோகன் கிரிக்கெட் நன்றாக விளையாடக்கூடிய சிலருக்கு ஒரு எல்லையைத் தாண்டி போகமுடியாத சூழல் இருக்கும். அப்படி ஒரு சூழலை தென்னிந்திய தெரு கிரிக்கெட் லீக் உடைத்திருக்கிறது. அதனால் இளைஞர்கள் இந்தப் … Read more

50MP கேமரா.. கம்மி விலையில் OnePlus CE 4.. Amazonல் டிஸ்கௌண்ட்

OnePlus CE 4 Smartphone On Sale: ஒன்பிளஸ் நார்ட் சிஇ 4 (OnePlus Nord CE 4) ஸ்மார்ட்போனில் தற்போது மிகப்பெரிய சலுகை ஒன்று வழங்கப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் இந்த ஸ்மார்ட்போனை மலிவான விலையில் வாங்கலாம். ஸ்மார்ட்போனில் பல சிறந்த அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அது மட்டுமின்றி இந்த ஸ்மார்ட்போனில் 50MP கேமரா உள்ளது. OnePlus CE 4 தள்ளுபடி சலுகை | OnePlus CE 4 Discount Offer: உண்மையில், இ-காமர்ஸ் தளமான அமேசானில், … Read more

2026ல் தான் தேமுதிக-வுக்கு ராஜ்யசபா சீட் என்ற அதிமுக-வின் அறிவிப்பால் பிரேமலதா விஜயகாந்த் அப்செட்

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ள அதிமுக 2026ம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் தேமுதிக-வுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இதையடுத்து அதிமுக தனது கடமையை செய்திருக்கிறது எங்கள் கடமையை நாங்கள் ஆற்றுவோம் என்று தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.க்களாக உள்ள திமுக வழக்கறிஞர் வில்சன், தொமுச தலைவர் சண்முகம், எம்.எம்.அப்துல்லா மற்றும் திமுக கூட்டணி சார்பில் தேர்வான மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் பதவிக் காலமும், அதிமுக ஆதரவுடன் … Read more

"2024-லேயே ராஜ்ய சபா சீட் உறுதி என அதிமுக எழுதிக்கொடுத்தது; எங்கள் நிலைப்பாட்டை…" – பிரேமலதா

அதிமுக கூட்டணியில் தே.மு.தி.க-வுக்கு ராஜ்ய சபா சீட் ஒதுக்கப்படுமா என்பது கடந்த சில நாள்களாகவே பேசுபொருளாகவே இருந்த நிலையில், தே.மு.தி.க-வுக்கு இப்போது இல்லை, 2026-ல் ராஜ்ய சபா சீட் வழங்கப்படும் என்று அ.தி.மு.க இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. இந்த நிலையில், அ.தி.மு.க-வின் இத்தகைய அறிவிப்பு குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், “2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது 5 தொகுதிகளுடன் ஒரு ராஜ்ய சபா சீட்டும் உறுதி செய்யப்பட்ட ஒன்றுதான். பிரேமலதா – … Read more