பள்ளி திறப்பை முன்னிட்டு பேருந்து இயக்கத்தின்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்: ஓட்டுநர், நடத்துநர்களுக்கு அறிவுறுத்தல்

இன்று கோடைவிடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி பேருந்து இயக்கத்தின்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கு சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன் விவரம்: பேருந்து இயக்கத்தின்போது கதவை பேருந்து நிறுத்தம் வந்த பிறகு திறக்க வேண்டும். கதவை மூடிய பின் பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும். பள்ளி மாணவர்கள் ஆபத்தான முறையில் பேருந்தில் பயணம் செய்தால் பேருந்தை சாலையின் ஓரம் நிறுத்தி மாணவர்களை பேருந்தின் உள்ளே வர கூறி மாணவர்கள் பேருந்தின் உள்ளே வந்த பின் … Read more

டெல்லியில் தமிழர்கள் குடியிருப்பு அகற்றம்: 370-க்கும் மேற்பட்ட வீடுகள் இடித்து தரைமட்டம்

உயர் நீதிமன்ற உத்தரவின்படி டெல்லியின் ஜங்புரா பகுதியில் தமிழர்கள் குடியிருப்பு நேற்று அகற்றப்பட்டது. சுமார் 370-க்கும் மேற்பட்ட வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. தெற்கு டெல்லியின் ஜங்புரா பகுதியில் மதராசி கேம்ப் என்ற தமிழர்கள் குடியிருப்பு உள்ளது. அங்கு சுமார் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு ஜங்புரா பகுதியில் தமிழர்கள் குடியேறினர். சென்னை, விழுப்புரம் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுமார் 3,000 பேர் மதராசி கேம்ப் பகுதியில் வசித்து வந்தனர். … Read more

Vikram Sugumaran: `மதயானைக்கூட்டம்' பட இயக்குநர் விக்ரம் சுகுமாரன் காலமானார்

இயக்குநர் விக்ரம் சுகுமாரன் மாரடைப்பு காரணமாக இயற்கை எய்தியிருக்கிறார். ‘மதயானைக்கூட்டம்’, ‘இராவணக்கோட்டம்’ ஆகிய படங்களை இயக்கிய விக்ரம் சுகுமாரனின் மறைவு பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மறைந்த இயக்குநர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர் விக்ரம் சுகுமாரன். 2013-ம் ஆண்டு ‘மதயானைக்கூட்டம்’ திரைப்படத்தின் மூலமாகத் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். Vikram Sugumaran with Shanthanu இதைத் தொடர்ந்து, சாந்தனுவை கதாநாயகனாக வைத்து 2023-ம் ஆண்டு ‘இராவணக்கோட்டம்’ படத்தை இயக்கியிருந்தார் விக்ரம். இதைத் தாண்டி, வெற்றிமாறனின் ‘ஆடுகளம்’ திரைப்படத்தில் … Read more

இன்று முதல் மினிமம் பேலன்ஸ் அபராதம் இல்லை : கனரா வங்கி

டெல்லி பொதுத்துறை நிறுவனமான கனரா வங்கி இனி மினிமம் பேலன்ஸ் அபராதம் விதிக்கப்பட மாட்டாது என அறிவித்துள்ளது கனரா வங்கியின் நகர கிளைகளில் ரூ. 2,000, சிறுநகர கிளைகளில் ரூ.1,000 மற்றும் கிராம கிளைகளில் ரூ.500 என்ற குறைந்தபட்ச இருப்புத் தொகை பராமரிக்க வேண்டியிருந்தது. இவ்வாறு குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்க இல்லையெனில் ரூ.25 முதல் ரூ.45 வரை அபராதம் விதிக்கப்பட்டது. தற்போது பொதுத்துறை வங்கியான கனரா, சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை விதியை நீக்கி … Read more

மும்பை விமான நிலையத்தில் 48 கொடிய விஷப் பாம்புகள் பறிமுதல்

மும்பை, மராட்டிய மாநிலம் மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று இரவு தாய்லாந்தின் பாங்காக்கிலிருந்து விமானம் ஒன்று வந்தடைந்தது. அப்போது சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கம் போல் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்த விமானத்தில் சந்தேகத்திற்கிடமான நிலையில் நடந்து கொண்ட பயணி ஒருவரை, சுங்கத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். அந்த பயணியின் உடமைகளை பரிசோதித்தனர். அதில், 48 விஷ பாம்புகள் மற்றும் 5 ஆமைகள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து தகவலறிந்த வனவிலங்கு நல சங்க … Read more

நாங்களும் மனிதர்கள்தான் – விராட் கோலியின் திடீர் ஓய்வு குறித்து வில்லியம்சன்

வெலிங்டன், இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து சமீபத்தில் விடைபெற்றார். இந்திய அணிக்காக கடந்த 2011-ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் ஆன அவர் 123 போட்டிகளில் விளையாடி அதில் 30 சதம் உட்பட 9,230 ரன்கள் குவித்துள்ளார். மேலும் 68 போட்டிகளில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டுள்ள விராட் அதில் 40 போட்டிகளை வென்று கொடுத்து இந்திய அணிக்காக அதிக வெற்றிகளை பெற்றுக்கொடுத்த கேப்டனாகவும் வரலாறு … Read more

பிரான்ஸ்: வெற்றி கொண்டாட்டத்தில் வன்முறை பரவியதில் 2 பேர் பலி; 192 பேர் காயம்

பாரீஸ், ஜெர்மனியின் முனிச் நகரில், பாரீஸ் செயின்ட்-ஜெர்மைன் (பி.எஸ்.ஜி.) மற்றும் இன்டர் மிலன் அணிகளுக்கு இடையே சாம்பியன்ஸ் லீக் கால்பந்து இறுதி போட்டி நடந்தது. இந்த போட்டியில், பி.எஸ்.ஜி. அணி 5-0 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. இதுவரை இல்லாத வகையில் இது மிக பெரிய வெற்றியாகும். இதனை தொடர்ந்து, பிரான்சின் பாரீஸ் நகரின் தெருக்களில் மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். அப்போது திடீரென வன்முறை பரவியது. அப்போது டாக்ஸ் நகரில், 17 வயது சிறுவன் கத்தியால் … Read more

பால்வினை தொற்று: `இதை மறைக்கக்கூடாது' – எப்படியெல்லாம் பரவும்? நிபுணர் விளக்கம்

உலகம் எவ்வளவுதான் அப்டேட் ஆகிக்கொண்டே இருந்தாலும் மக்களுக்கு ஒரு சில தலைப்புகளின் கீழ் அடிபடும் பேச்சுகளுக்கும், யூகங்களுக்கும் எண்ட் கார்ட் இல்லையென்றே சொல்லலாம். அதிலும் மருத்துவம் சார்ந்த கட்டுக்கதைகள் ஏராளம் ஏராளம். அதில் முக்கியமான ஒரு விஷயம், பால்வினை தொற்று. பால்வினை தொற்று என்பதற்கு, அதன் பெயரிலேயே பதிலும் இருக்கிறது. பாதுகாப்பற்ற உடலுறவு கொள்வதால் ஏற்படும் தொற்று நோய்கள் என்பது பொருள். இந்தப் பால்வினை தொற்று பாதித்தவர்கள் மீது சுழலும் குற்றச்சாட்டுகளும் ஏராளம். பலருடன் உடலுறவில் ஈடுபட்டு … Read more

இலங்கைக்கு அனுப்பப்படும் தமிழ் அகதிகளின் பாதுகாப்பை உறுதி செய்க: திருமாவளவன் கோரிக்கை

புதுச்சேரி: இலங்கைக்கு அனுப்பப்படும் தமிழ் அகதிகள் பாதுகாப்பாக அவர்களது இல்லத்துக்கு போய்ச்சேர உரிய நடவடிக்கைகளை இந்திய அரசும், தமிழக அரசும் மேற்கொள்ள வேண்டும் என்று திருமாவளவன் எம்பி தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்பியின் சகோதரர் நடேசன் (92) புதுச்சேரி லாஸ்பேட்டை அவ்வைநகரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலமானார். அவரது உடலுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று மாலை அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் திருமாவளவன் … Read more

அணு ஆயுத அச்சுறுத்தல்களுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு

புதுடெல்லி: அணு ஆயுத அச்சுறுத்தல்களுக்கு இந்தியா அடிபணியாது என்றும், பயங்கரவாதத்திற்கு கடுமையாக பதிலடி கொடுக்கப்படும் என்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். குஜராத்தின் வதோதராவில் நடந்த ஒரு நிகழ்வில் பேசிய அமைச்சர் ஜெய்சங்கர், “ஏப்ரல் 22 நடத்தப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதல், ஜம்மு காஷ்மீரின் சுற்றுலாவை சேதப்படுத்துவதையும், மத பதற்றத்தை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்ட தீய வடிவமைப்பாக இருந்தது. இந்த காட்டுமிராண்டித்தனத்திற்கு ஒரு முன்மாதிரியான பதில் தேவைப்பட்டது. இது பாகிஸ்தானில் பஹாவல்பூர் மற்றும் முரிட்கே உள்ளிட்ட இடங்களில் … Read more