Month: June 2025
பிரான்ஸ், ஜெர்மனிக்கு அமைச்சர் அன்பரசன் பயணம் – தமிழ் அமைப்புகள் கவுரவிப்பு
சென்னை: அரசு முறை பயணமாக பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி சென்றுள்ள அமைச்சர் தா.மோ.அன்பரசனுக்கு, அங்குள்ள தமிழ் அமைப்புகள் சார்பில், ‘எம்எஸ்எம்இ நண்பன் மற்றும் சாதனையாளர்’ விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. தமிழக குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அரசு முறைப் பயணமாக, ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். முதலில் நேற்று முன்தினம் பிரான்ஸ் சென்ற அவர், பாரிஸில் நடைபெறும் புத்தாக்க கருத்தரங்கில் பங்கேற்றார். அப்போது, பிரான்சில் உள்ள இந்திய வம்சாவளியினரின் சர்வதேச … Read more
அம்பேத்கருக்கு அவமரியாதை: லாலுவுக்கு நோட்டீஸ்
பாட்னா: லாலு பிரசாத்தின் 78-வது பிறந்த தினம் கடந்தவாரம் கொண்டாடப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோவில், உடல்நிலை சரியில்லாத லாலு சோபாவில் அமர்ந்து, அருகிலுள்ள சோபாவில் கால்களை நீட்டிக்கொண்டுள்ளார். அப்போது ஒரு ஆதரவாளர் அம்பேத்கரின் உருவப்படத்தை லாலு கால்களுக்கு அருகில் வைத்து அவரை வாழ்த்தினார். இது பெரும் புயலை கிளப்பியுள்ளது. அம்பேத்கருக்கு அவமரியாதையை ஏற்படுத்திவிட்டதாக எதிர்க்கட்சிகள் லாலு மீது குற்றம்சாட்டியுள்ளன. இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளிக்க பிஹார் எஸ்சி ஆணையம் லாலுவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. Source link
இந்திய மாணவர்கள் வெளியேற ஈரான் தரைவழி எல்லை திறப்பு
டெஹ்ரான்: இந்தியாவின் கோரிக்கையை ஏற்று அங்கு வசிக்கும் இந்திய மாணவர்கள் வெளியேற தரைவழி எல்லைகளை ஈரான் அரசு திறந்துள்ளது. ஈரான் – இஸ்ரேல் இடையே தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், ஈரானில் தற்போது 4,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வசிக்கின்றனர். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் மாணவர்கள். ஈரானில் உள்ள பெரும்பாலான இந்திய மாணவர்கள் ஜம்மு-காஷ்மீரை சேர்ந்தவர்கள். இந்நிலையில் ஈரானில் படிக்கும் மாணவர்களை பாதுகாப்பாக வெளியேற்ற உதவுமாறு ஈரான் அரசை, இந்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்நிலையில் இந்திய அரசு கேட்டுக் … Read more
பாரா மெடிக்கல், நர்ஸ், பாஃர்ம்டி படிப்புகளுக்கு இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்! தமிழ்நாடு அரசு
சென்னை: பாரா மெடிக்கல், ‘செவிலியர்’, டிபார்ம் போன்ற டிப்ளமாக படிப்புகளுக்கு இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகம் வெளியிட்டு உள்ளது. இந்த படிப்புகள் வெளிநாடுகளில் பணி வாய்ப்பை பெற பேருதவியாக இருக்குமை. படித்து முடித்தால், வெளிநாடுகளில் மருத்துவ பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் இருந்து வெளிநாடுகளில் வேலை பெற விரும்புபவர்களுக்கு தமிழ்நாடு அரசு உதவி செய்து வருகிறது. இதற்காகவே “தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் கடந்த … Read more
தொழில்நுட்பகோளாறு: டெல்லிக்கு திருப்பிவிடப்பட்ட விமானம்
புதுடெல்லி, டெல்லியில் இருந்து ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சிக்கு மாலை 6:20 மணிக்கு பிர்சா முண்டா விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் டெல்லிக்குத் திருப்பி விடப்பட்டது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தொழில்நுட்ப சிக்கல் என்ற சந்தேகத்தால் மீண்டும் திரும்பியதாக கூறப்படுகிறது. உரிய ஆய்வுக்கு பின் விமானம் மீண்டும் ராஞ்சிக்கு புறப்பட்டு சென்றதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். An Air India Express flight from Delhi to Ranchi, scheduled to … Read more
பாபா அபராஜித் அரைசதம்… திண்டுக்கல் அணிக்கு சவாலான இலக்கு நிர்ணயித்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ்
சேலம், சேலத்தில் நடந்து வரும் டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் இன்று நடைபெற்று வரும் 14-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் – திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. மழை காரணமாக தாமதமாக தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணியின் கேப்டன் அஸ்வின் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீசுக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன ஆஷிக் 12 ரன்களிலும், மோகித் ஹரிஹரன் … Read more
நேரலையில் இஸ்ரேல் தாக்குதல்.. நூலிழையில் உயிர்தப்பிய செய்தி வாசிப்பாளர் – வீடியோ வெளியாகி அதிர்ச்சி
டெஹ்ரான், இஸ்ரேல், ஈரான் போர்ப்பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது. அமைதி பேச்சுவார்த்தைக்கு ஈரான் மறுத்துவிட்டதோடு, இஸ்ரேல் நடத்திவரும் அதிரடி தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. இதனிடையே, அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதற்காக மசோதாவை தயாரிக்க ஈரான் நடாளுமன்றம் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இதனை ஈரான் வெளியுறவு மந்திரி இஸ்மாயில் பகாயி உறுதிப்படுத்தி உள்ளார். தாக்குதல் சம்பவம் அதிரித்து வரும்நிலையில் இரு நாடுகளிலும் உயிரிழந்தோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. … Read more
TNPL: அண்ணன் – தம்பி அதிரடி அரைசதம்… போராடி தோற்ற அஸ்வினின் திண்டுக்கல் அணி!
டிஎன்பிஎல் 14 -வது லீக் போட்டி சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியை திண்டுக்கல் டிராகன்ஸ் அணி எதிர்கொண்டது. டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. வெற்றியை கொண்டாடும் சேப்பாக் அணி 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் சிவம் சிங் தொடக்கத்தில் அதிரடி காட்டினர். திண்டுக்கல் அணி 43 ரன்கள் … Read more
தமிழகத்தில் இன்னும் முழுமையான கூட்டணி உருவாகவில்லை: அண்ணாமலை கருத்து
திருப்பூர்: தமிழ்நாட்டில் இன்னும் முழுமை யான கூட்டணி உருவாகவில்லை என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். பாரத் பெட்ரோலியத்தின் ஐடிபிஎல் எண்ணெய் குழாய் திட்டத்தை கோவை மாவட்டம் இருகூரில் இருந்து திருப்பூர் மாவட்டம் முத்தூர் வரையிலும், 25 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட கோவை – கரூர் எண்ணெய் குழாய் ஆகிய இரு திட்டங்களையும் சாலையோரம் அமைக்க வலியுறுத்தி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் அவிநாசிபாளையம் ராமசாமி கோயில் அருகே கடந்த 10-ம் தேதி … Read more