கவிதைக்காட்டில் கிளைத்த புல்லின் இதழ்கள் – வால்ட் விட்மன்| கடல் தாண்டிய சொற்கள் – பகுதி 10

தமிழ்க்கவிதை வரலாற்றின் திசையை மாற்றிப் புதிய கவிதைகள் புத்துணர்ச்சியோடும் உயிர்ப்போடும்  உருமாறுவதற்குக் காரணமாகத் திகழ்ந்த வால்ட் விட்மன் ஓர் கவிதைக்காடு.  பாரதியின் எண்ணவோட்டத்திற்கு விதையாகவும் உரமாகவும் விளங்கியவர்; எதையும் ஒரு கட்டமைப்பிற்குள் அடைத்து வைக்க விரும்பாத கவிஞர்.  பாரம்பரியக் கவிதையின் கண்பட்டை வழிமுறைகளுக்கு மாற்றான, சுதந்திரக் கவிதைகளால், உணர்வுகளுக்கு புதிய சுருதியை அளித்தவர். அவருடைய புல்லின் இதழ்கள் என்னை மீண்டும் மீண்டும் வாசிக்க வைத்தது.  சாதாரண தனிமனிதனின் குரலும், தேசத்தின் தேடலும்  இணைய, கவிதை என்பது வடிவக் … Read more

மதுரையில் 2-வது நாளாக ரோடு ஷோவில் மக்களை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

மதுரை: மதுரையில் 2வது நாளாக ரோடு ஷோவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள், கட்சியினரை சந்தித்தார். அப்போது, முதல்வருக்கு மக்கள் கைகெடுத்தும், அவருடன் செல்பி எடுத்துக் கொண்டும் மகிழ்ந்தனர். மதுரை அருகே உத்தங்குடியில் திமுகவின் மாநில பொதுக்கூட்டம் இன்று (ஜூன் 1) நடந்தது. இதில் பங்கேற்க தமிழக முதல்வர் முக. ஸ்டாலின் நேற்று மதுரை வந்தார். பொதுக்குழுவில் பங்கேற்பதற்கு முன்னதாக நேற்று மாலை மதுரை பெருங்குடி – மதுரை மதுரா கோட்ஸ் மேம்பாலம் வரையிலும் சுமார் 22 கி.மீ … Read more

ஆபரேஷன் சிந்தூர் குறித்து கட்டுரைப் போட்டி: வெற்றியாளர்கள் டெல்லியில் சுதந்திர தின விழாவில் பங்கேற்கலாம்

புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் குறித்து கட்டுரைப் போட்டி ஒன்றினை, ஜூன் 1-ம் தேதி முதல் 30-ம் தேதி வரையில் பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது. போட்டியில் வெற்றிபெறும் முதல் மூன்று போட்டியாளர்களுக்கு ரொக்கப் பரிசும், டெல்லி செங்கோட்டையில் நடைபெற இருக்கும் சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்க வாய்ப்பும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பாதுகாப்புத்துறை அமைச்சகம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பாதுகாப்புத்துறை அமைச்சகம் இளம் உள்ளங்களை தங்களின் குரல்களை எழுப்ப அழைக்கிறது. பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் இந்திய … Read more

ரஷ்யாவில் பாலம் இடிந்து விழுந்து 7 பேர் உயிரிழப்பு: உக்ரைன் சதியா என விசாரணை

மாஸ்கோ: ரஷ்யாவில் மேற்கு பகுதியில் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் ரயில் ஒன்று சிக்கி, அதிலிருந்த ஓட்டுநர் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். முதல்பாலம் இடிந்த சம்பவம், உக்ரைன் எல்லைக்கு அருகில் உள்ள பிரையான்ஸ் பகுதியில் சனிக்கிழமை இரவு நடந்துள்ளது. பயணிகள் ரயில் மீது பாலம் இடிந்து விழுந்ததில் ரயில் ஓட்டுநரும் உயிரிழந்ததாக அரசு தெரிவித்துள்ளது. சிறிது நேரத்துக்கு பின்பு, உக்ரைன் எல்லைப்பகுதியின் குர்ஸ்க் பிராந்தியத்தில் மற்றொரு பாலம் இடிந்து வேறொரு … Read more

கேளிக்கை வரியை குறைத்த அரசு..நடிகர் டி.ராஜேந்தர் நன்றி!

Local Authorities Entertainment Tax (LBET) வரியை குறைத்து அரசாணை வெளியிட்ட மாண்புமிகு தமிழக முதல்வர், .M.K. ஸ்டாலின் அவர்களுக்கு தமிழ் சினிமாவின் நன்றிகள் என்று டி.ராஜேந்தர் தெரிவித்திருக்கிறார்.  

கோவிட்-19 அதிகரித்து வருவதை அடுத்து பயணிகள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று இந்திய ரயில்வே அறிவுறுத்தல்

கோவிட்-19 மற்றும் பிற வைரஸ் தொற்றுகளால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பயணம் செய்யும் போது பயணிகள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று இந்திய ரயில்வே அறிவுறுத்தியுள்ளது. அதிகரித்து வரும் வெப்பம், மாசுபாடு மற்றும் வானிலை மாற்றங்கள் காரணமாக நோய்கள் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதை அடுத்து இந்த ஆலோசனையை வழங்கியுள்ளது. இதுகுறித்து தனது எக்ஸ், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில், மத்திய ரயில்வே அமைச்சகம் மற்றும் பல்வேறு மண்டல ரயில்வே பிரிவுகள், பயணிகள் தங்கள் … Read more

Rinku Singh: நாட்டின் இளம் நாடாளுமன்ற உறுப்பினரை மணக்கும் ரிங்கு சிங் – யார் அந்த ப்ரியா சரோஜ்?

ஐ.பி.எல்லில் கொல்கத்தா அணிக்காக ஆடி வரும் ரிங்கு சிங், தன்னுடைய அதிரடி பேட்டிங் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர். இந்திய டி20 அணியில் கிடைக்கும் வாய்ப்புகளில் சிறப்பாகச் செயல்பட்டுவருகிறார். இதனிடையே ரிங்கு சிங்கும், வழக்கறிஞரும், எம்பியுமான ப்ரியா சரோஜ்ஜூம் காதலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன. ரிங்கு சிங் – ப்ரியா ப்ரியா சரோஜ் இந்நிலையில் இருவருக்கும் வரும் ஜூன் 8 ஆம் தேதி லக்னோவில் உள்ள தனியார் ஓட்டலில் நிச்சயதார்த்தம் நடைபெற இருப்பதாகவும், நவம்பர் 18ஆம் தேதி … Read more

மன்னாரில் கரை ஒதுங்கிய தமிழக நாட்டுப் படகு: இலங்கை கடற்படையினர் விசாரணை

ராமேசுவரம்: இலங்கையில் உள்ள மன்னாரில் கரை ஒதுங்கிய தமிழகத்தைச் சார்ந்த நாட்டுப் படகை அந்நாட்டு கடற்படையினர் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடல் மார்க்கமாக கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் இந்திய-இலங்கை எல்லை கடலோரப் பகுதிகளில் இரு நாட்டு கடற்படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை இலங்கையிலுள்ள மன்னார் கடற்பகுதியில் தமிழகத்தைச் சேர்ந்த நாட்டுப் படகு ஒன்று கரை ஒதுங்கியிருப்பதாக அந்நாட்டு கடற்படையினருக்கு தகவல் கிடைத்து. மன்னார் கடற்பகுதிக்குச் சென்ற … Read more

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த மகாராஷ்டிர இன்ஜினீயர் கைது

பாகிஸ்தானுக்கு உளவுப் பார்த்ததாக மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த இன்ஜினீயர் கைது செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிர மாநிலம் மும்பையை அடுத்த தானேவிலுள்ள கல்வா பகுதியைச் சேர்ந்தவர் ரவீந்திர முரளிதர் வர்மா(27). மத்திய பாதுகாப்புத்துறைக்குச் சொந்தமான ராணுவ தொழில்நட்ப நிறுவனம் ஒன்றில் ஜூனியர் இன்ஜினீயராக ரவீந்திர முரளிதர் வர்மா பணிபுரிந்து வந்தார். இவருக்கு தெற்கு மும்பையில் உள்ள கடற்படைக்குச் சொந்தமான கப்பல் துறைக்குள் நுழைவதற்கான மத்திய அரசின் அனுமதி இருந்தது. மேலும் அவர் கடற்படை கப்பல்களிலும் பணிபுரிந்துள்ளார். இந்நிலையில் முரளிதர் வர்மாவை, … Read more

"கோலி சோடா" இயக்குனர் விஜய் மில்டன் படத்தில் இணைந்த நடிகர் பரத்

புகழ்பெற்ற இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்கும் எதிர்பார்ப்புக்குரிய தமிழ்-தெலுங்கு இருமொழி படத்திற்கு திறமையான நடிகர் பரத்தை வரவேற்பதில் ரஃப் நோட் புரொடக்‌ஷன் மகிழ்ச்சி அடைகிறது.