காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாள் விடுமுறை

காரைக்கால், மாங்கனி திருவிழா நடைபெறும் சிறப்புக்குரிய ஸ்தலமான காரைக்கால் கைலாசநாதர் கோயில் கும்பாபிஷேகம் நாளை நடைபெறுகிறது. நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை திருநள்ளாறு கோவில் திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. இதன் காரணமாக காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு (நாளை மற்றும் நாளை மறுநாள்) 2 நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறைகளை ஈடுசெய்யும் வகையில் வரும் 14 மற்றும் 21ம் தேதிகளை வேலை நாட்களாக அறிவித்து காரைக்கால் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 1 More update தினத்தந்தி Related Tags … Read more

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்; ஜானிக் சின்னெர் அரையிறுதிக்கு முன்னேற்றம்

பாரீஸ், கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான ஜானிக் சின்னெர் (இத்தாலி), கஜகஸ்தானின் அலெக்சாண்டர் பப்ளிக் உடன் மோதினார். இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜானிக் சின்னெர் 6-1, 7-5, 6-0 என்ற செட் கணக்கில் அலெக்சாண்டர் பப்ளிக்கை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். 1 More update … Read more

திருமணம் கடந்த உறவு; இந்தோனேசியாவில் காதல் ஜோடிக்கு பொதுவெளியில் 100 சவுக்கடி தண்டனை

ஜகார்ட்டா, இந்தோனேசியாவில் கடந்த 2022-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சட்டத்திருத்தத்தின்படி, திருமணம் கடந்த உறவு வைத்துக் கொள்வது தடை செய்யப்பட்டது. குறிப்பாக இந்தோனேசியாவின் ஆசே மாகாணத்தில், இஸ்லாமிய ஷரியா சட்டத்தின்படி திருமணமாகாத ஜோடி பாலியல் உறவு கொள்வது சட்டவிரோதமாகும். இந்த நிலையில், திருமணம் கடந்த உறவில் ஈடுபட்ட குற்றச்சாட்டிற்காக பண்டா ஆசே நகரில் ஒரு காதல் ஜோடிக்கு பொதுவெளியில் 100 சவுக்கடி தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர சூதாட்டம், மது அருந்துதல் உள்ளிட்ட குற்றங்களுக்காக மேலும் 3 பேருக்கு மொத்தம் … Read more

RCB Event Stampede: "மனதார வருந்துகிறோம்" – கூட்டாக இழப்பீடு அறிவித்த ஆர்.சி.பி, KSCA!

பெங்களுருவில் ஆர்சிபி அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது, சின்னசாமி ஸ்டேடியத்துக்கு வெளியே ரசிகர்களின் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. முறையான திட்டமிடல் இல்லாமல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்ததே இந்த சம்பவத்துக்கு காரணம் என்று விமர்சிக்கப்படுகிறது. பெங்களூரு அதேசமயம், இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்திருக்கும் முதல்வர் சித்தராமையா, உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு அறிவித்து, இச்சம்பவம் தொடர்பாக விசாரணைக்கும் உத்தரவிட்டிருக்கிறார். இந்த நிலையில், ஆர்.சி.பி வீரர்களுக்கு … Read more

காஞ்சியில் ரோபோட்டிக் உதிரிபாக ஆலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்

காஞ்சிபுரத்தில் ரூ.300 கோடியில் ரோபோடிக் பாகங்கள் உற்பத்தி ஆலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி வாயிலாகத் திறந்துவைத்தார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 2024-25-ம் ஆண்டில் 9.69 சதவீத பொருளாதார வளர்ச்சியுடன் இந்திய அளவில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது. இது,கடந்த 10 ஆண்டுகளில் இம்மாநிலம் அடைந்த அதிகபட்ச வளர்ச்சியாகும். அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கி, தமிழகத்தின் பொருளாதாரம் 1 ட்ரில்லியன் டாலர் அளவுக்கு வளர்ச்சி பெறத் தேவையான முதலீடுகளை ஈர்க்க தமிழக அரசு … Read more

“ஆர்சிபி வெற்றி மகிழ்ச்சியை அழித்த துயரம்!” – நெரிசல் உயிரிழப்புக்கு சித்தராமையா வருத்தம்

பெங்களூரு: பெங்களூரு நகரில் நடப்பு ஐபிஎல் சாம்பியன் ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். ‘இது எதிர்பாராத அசம்பாவிதம்’ என கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா வருத்தம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, “மாநில அரசும், கிரிக்கெட் சங்கமும் ஐபிஎல் பட்டம் வென்ற ஆர்சிபி அணிக்கு வெற்றி விழாவை இன்று ஏற்பாடு செய்தது. இது இப்படியொரு துயர சம்பவமாக மாறும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் மொத்தமே … Read more

பஞ்சாவ் முதல்வருக்கு பாஜக அமைச்சர் கண்டனம்

சண்டிகர் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கு மத்திய பாஜக அமைச்சர் ரவ்நீத் சிங் பிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரியில்,பஞ்சாபின் லூதியானா மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. குர்பிரீத் சிங் கோகி தற்செயலாக துப்பாக்கியால் சுட்டதில் பலியானதால், காலியான அந்த தொகுதிக்கு வருகிற 19-ந்தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. பாஜக ஆபரேஷன் சிந்தூர் பற்றி பேசி இந்த தேர்தலுக்கான பிரசாரத்தில் ஈடுபட்டது என கூறப்படுகிறது. பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் சண்டிகாரில் செய்தியாளர்களிடம்  சிந்தூர் பெயரை கொண்டு வாக்குகளை … Read more

ஆர்சிபி பேரணிக்கு அதிகாரிகள் எதிர்ப்பா? முதல்-மந்திரி சித்தராமையா கூறிய தகவல்

பெங்களூரு, ஆர்சிபி அணிக்கான பாராட்டு விழா நடந்த சின்னசாமி மைதானத்தின் வெளியே நடந்த கூட்டநெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களை மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்த முதல்-மந்திரி சித்தராமையா மற்றும் துணை முதல்-மந்திரி சிவகுமார் ஆகியோர் ஆறுதல் கூறினர். இதைத் தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக முதல்-மந்த்ரி சித்தராமையா செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பெங்களூருவில் துயரமான நிகழ்வு நடந்துள்ளது. இந்த விபத்தில் 33 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 … Read more

கிரிக்கெட்டுக்கு இது ஒரு சோகமான நாள்: அணில் கும்ப்ளே

பெங்களூரு, 18-வது ஐ.பி.எல். தொடரில் அகமதாபாத் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி இறுதிப் போட்டியை வென்று முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம் அந்த அணியின் நீண்ட கால ஏக்கம் தீர்ந்துள்ளது.இதனை கொண்டாட பெங்களூருவில் ஏற்பாடு செய்யப்பட்டது.அதன்படி பெங்களூரு அணி வீரர்களுக்கு , கர்நாடக முதல்-மந்திரி, துணை முதல்-மந்திரி, ஆகியோர் தலைமையில் பாராட்டு நிகழ்வுக்கு ஏற்பாடு … Read more

காசாவில் இஸ்ரேல் அதிரடி தாக்குதல்; 55 ஆயிரத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை

காசா சிட்டி, காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. அதேவேளை, பணய கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், … Read more