பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும் பராகுவேயும் ஒற்றுமையாக நிற்கின்றன – பிரதமர் மோடி

புதுடெல்லி, 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் சான்டியாகோ பெனா பலாசியோஸ், பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, இருநாடுகளின் உறவு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இருதரப்பு உறவை மேம்படுத்துவது தொடர்பாக இரு தலைவர்களும் ஆலோசனை மேற்கொண்டனர். முதல்முறையாக இந்தியா வந்துள்ள அவரை மத்திய மந்திரி ஹர்ஷ் வர்தன் மல்த்ரா நேரில் சென்று வரவேற்றார். அவருக்கு பாலம் விமானப்படை தளத்தில் பாரம்பரிய முறைப்படி வீரர்களின் அணிவகுப்பு மரியாதை கொடுக்கப்பட்டது. பராகுவே … Read more

உதயநிதி ஸ்டாலினுக்கு காய்ச்சல், தொடர் இருமல்: அரசு, கட்சி நிகழ்ச்சிகள் தள்ளிவைப்பு

சென்னை: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு காய்ச்சல், தொடர் இருமல் இருப்பதால் அவரது அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கடும் காய்ச்சல் மற்றும் தொடர் இருமலால் அவதிப்பட்டு வருகிறார். அடுத்த சில நாட்களுக்கு அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார். அதனால், அவர் கலந்துகொள்ள இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் தள்ளிவைக்கப்படுவதாக தமிழக அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, உதயநிதியின் உடல்நலம் தேறி விரைவில் குணமடைய வேண்டும் என … Read more

தீவிரவாதம் எனும் நச்சுபாம்பை நசுக்குவோம்: பிரதமர் நரேந்திர மோடி உறுதி

பாட்னா: தீவிரவாதம் எனும் நச்சுப் பாம்பு மீண்டும் தனது தலையை தூக்க முயன்றால், துளையிலிருந்து வெளியே இழுக்கப்பட்டு நசுக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். பிஹார் மாநிலம் கராகத் நகரில் ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் பேசியதாவது: இந்தியப் பெண்கள் அணியும் குங்குமத்தின் சக்தியை பாகிஸ்தானும் இந்த உலகமும் பார்த்தன. பாகிஸ்தான் ராணுவப் பாதுகாப்பில் இருந்த தீவிரவாதிகளை நாம் மண்டியிட வைத்தோம். பஹல்காம் … Read more

சாலை விபத்தில் தம்பதி உயிரிழப்பு – மகனின் திருமண அழைப்பிதழ் கொடுத்துவிட்டு திரும்பியபோது சோகம்

பிஜ்னோர், உத்தரபிரதேசத்தின் பிஜ்னோர் மாவட்டத்தில் மகனின் திருமண அழைப்பிதழ் கொடுத்துவிட்டு பைக்கில் வீடு திரும்பிய தம்பதி சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குப் சிங் (62 வயது) – லலிதேவி (56 வயது) தம்பதியின் மகனுக்கு வருகிற 9-ந்தேதி திருமணம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் உறவினர்களுக்கு மகனின் திருமண அழைப்பிதழை கொடுத்துவிட்டு இருவரும் பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். நாகினா – தாம்பூர் சாலையில் வந்து கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் அவர்கள் … Read more

இறுதிப்போட்டியில் எந்த அணி வெற்றி பெறும்..? – யோக்ராஜ் சிங் கணிப்பு

மும்பை, 10 அணிகள் பங்கேற்றிருந்த 18-வது ஐ.பி.எல். தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. கடந்த மார்ச் 22-ம் தேதி தொடங்கிய இந்த தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற உள்ளது. அதன்படி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணியளவில் நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன. ஐ.பி.எல். வரலாற்றில் இரு அணிகளும் இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வெல்லாததால் முதல் கோப்பையை வெல்லப்போகும் அணி … Read more

இஸ்ரேல் தாக்குதல்: பாலஸ்தீனியர்கள் 14 பேர் பலி

காசா, இஸ்ரேல் மீது காசாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு, 2023ம் ஆண்டு அக்டோபரில் தாக்குதல் நடத்தியது. இதைத் தொடர்ந்து, ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. இஸ்ரேல்- ஹமாஸ் இடையே நடக்கும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா நீண்ட முயற்சி செய்து வருகிறது. இந்நிலையில் காசா பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர், அதில் பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் … Read more

தமிழகத்தில் மழை வாய்ப்பு குறைந்துள்ள நிலையில் மீண்டும் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு

தமிழகத்தில் மழை வாய்ப்பு குறைந்துள்ள நிலையில், வெப்பநிலை மீண்டும் உயரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை கடந்த 24-ம் தேதி தொடங்கியது. இதை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. வானமும் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனால் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பநிலையும் குறைந்தது. எங்கும் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டவில்லை. இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது மழை வாய்ப்பு குறைந்துள்ளதால், வெப்பநிலை மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதுகுறித்து … Read more

ஒடிசா அரசு அதிகாரி வீட்டில் ரூ.2.5 கோடி ரொக்கம் பறிமுதல்: ரூ.500 நோட்டுகளை ஜன்னல் வழியாக வீசினார்

புவனேஸ்வர்: ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் மூத்த அரசு அதிகாரி பைகுந்த நாத் சாரங்கியின் வீடுகளில் நேற்று சோதனை நடத்தப்பட்டது. அப்போது ரூ.2.5 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. லஞ்ச வழக்கில் இருந்து தப்பிக்க 500 ரூபாய் நோட்டுகளை ஜன்னல் வழியாக அவர் அள்ளி வீசினார். ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் ஊரக வளர்ச்சி துறையின் தலைமை அலுவலகம் செயல்படுகிறது. அந்த அலுவலகத்தில் சாலை திட்ட தலைமை பொறியாளராக பைகுந்த நாத் சாரங்கி பணியாற்றி வருகிறார். அவர் அதிகமாக லஞ்சம் … Read more

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இருமடங்காக அதிகரிப்பு..! கல்வித்துறை தகவல்

சென்னை: சென்னையில் செயல்பட்டு  மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இருமடங்காக  அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகம் முழுவதும்  தனியார் பள்ளிகளின் எண்ணிக்கையும், தனியார் பள்ளிகள் மீதான மோகம்  அதிகரித்து   வந்தாலும், அரசு வழங்கும் பல்வேறு சலுகைகள் காரணமாக, அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.  அரசுப் பள்ளிகளில் தங்களது பிள்ளைகளை சேர்க்க பெற்றோர் அதிக ஆர்வம் காட்டி வருகின்றர். மேலும் ஆசிரியர்களும் வீடு வீடாக சென்று மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி வருகின்றனர். மேலும், … Read more

டெல்லி: திரவுபதி முர்முவுடன் பராகுவே ஜனாதிபதி சந்திப்பு

புதுடெல்லி, பராகுவே நாட்டின் அதிபர் சான்டியாகோ பெனா பலாசியோஸ் இந்தியாவில் 3 நாள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அவர் இந்தியாவில் டெல்லி, மும்பை நகரங்களில் பயணம் மேற்கொள்கிறார். இதற்காக டெல்லி பாலம் விமான நிலையத்தில் இன்று வந்திறங்கிய அவரை மத்திய இணை மந்திரி ஹர்ஷ வர்தன் மல்கோத்ரா நேரில் சென்று வரவேற்றார். இதன்பின்னர், அவருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பிரதமர் மோடியை நேரில் சந்தித்து இருதரப்பு உறவுகள் பற்றி ஆலோசனை மேற்கொண்டார். … Read more