6 மாதங்களுக்கு முன் நடந்த வேறொரு சம்பவம்: விசாரணை கைதி மீது தாக்குதல்

பெரியகுளம்: தேனி மாவட்டம் தேவதானப் பட்டியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் பாண்டியராஜன். இவர், தனது கட்சிக்காரர் ஒருவருக்கு ஆதரவாக தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து, தனது கட்சிக்காரருடன் வந்து புகார் அளித்ததை நிரூபிப்பதற்காக 14.1.2025-ல் காவல் நிலையத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை தனக்கு வழங்குமாறு தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பாண்டிய ராஜன் மனு அளித்தார். அதையேற்று, அன்றைய தினத்தில் பதிவான சிசிடிவி காட்சிகள் அவரிடம் வழங்கப்பட்டது. … Read more

மக்கள் இயக்கமாக மாறிய டிஜிட்டல் இந்தியா திட்டம்: 10 ஆண்டுகள் நிறைவை ஒட்டி பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி: டிஜிட்​டல் இந்​தியா திட்​டம் 10 ஆண்​டு​களை நிறைவு செய்​துள்ள நிலை​யில் இத்​திட்​டம் மக்​கள் இயக்​க​மாக மாறியுள்ளது என்று பிரதமர் நரேந்​திர மோடி பெரு​மிதம் தெரி​வித்​துள்​ளார். கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி டிஜிட்​டல் இந்தியா திட்​டம் தொடங்​கப்​பட்​டது. இத்​திட்​டம் வெற்​றிகர​மாக 10 ஆண்​டு​களை நிறைவு செய்​துள்​ளது. இதையொட்டி பிரதமர் நரேந்​திர மோடி தனது சமூக வலை​தளப் பக்​கத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: பத்து ஆண்​டு​களுக்கு முன், இந்தியா மிகுந்த நம்​பிக்​கை​யுடன் அறியப்​ப​டாத பிரதேசத்​தில் ஒரு துணிச்​சலான பயணத்தை … Read more

டிசம்பர் 29 வரை தாம்பரம் – மதுரை எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதல் பெட்டிகள்

சென்னை வரும் டிசம்பர் 29 ஆம் தேதி வரை தாம்பரம் – மதுரை எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன தெற்கு ரயில்வே, ”மதுரையில் இருந்து புறப்பட்டு தாம்பரம் வரும் எக்ஸ்பிரஸ் ரயிலில் (வண்டி எண்.22624) இன்று (வியாழக்கிழமை) முதல் வருகிற டிசம்பர் 27-ந்தேதி வரையிலும், மறுமார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு மதுரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (22623) நாளை (வெள்ளிக்கிழமை) முதல் வரும் டிசம்பர் 28-ந்தேதி வரையிலும் கூடுதலாக 3-வது வகுப்பு ஏ.சி. எக்கனாமிக் … Read more

“இது ஓர் அரச பயங்கரவாதம்” – அஜித்குமார் குடும்பத்துக்கு ஆறுதல் கூறிய திருமாவளவன் ஆவேசம்

திருப்புவனம்: “அஜித்குமார் கொலையை போலீஸ் ‘எக்ஸஸ்’ என்ற சொல்லுக்குள் சுருக்கிவிட முடியாது. இது ஒரு ‘ஸ்டேட் டெரரிஸம்’. இந்த அரச பயங்கரவாதத்தை வன்மையாக கண்டிக்கிறேன்” என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் போலீஸ் விசாரணையில் கொல்லப்பட்ட அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு விசிக தலைவர் திருமாவளவன் ஆறுதல் கூறினார். தொடர்ந்து அஜித்குமாரின் புகைப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “அஜித்குமாரை சித்ரவதை செய்து கொலை செய்தது கண்டிக்கத்தக்கது. 5 … Read more

இமாச்சலப் பிரதேசத்தில் கனமழை, திடீர் வெள்ளப்பெருக்கு: 10 பேர் பலி; 34 பேரை காணவில்லை

சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை, மேகவெடிப்பு மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக கடந்த 32 மணி நேரத்தில 10 பேர் உயிரிழந்தனர், 34 பேர் காணாமல் போயினர். மாநிலம் முழுவதும் நூற்றுக்கணக்கான சாலைகள் மற்றும் மின்மாற்றிகள் சேதமடைந்தன. இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக 10 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர், 34 பேர் காணாமல் போயுள்ளனர் என்று அதிகாரிகள் இன்று (புதன்கிழமை) தெரிவித்தனர். செவ்வாய்க்கிழமை … Read more

Tirupur Dowry Case : உண்மையான குற்றவாளி ரிதன்யாவின் தந்தைதான்! மீடியாவிடம் சொன்ன விஷயம்..

Tirupur Dowry Suicide Case : திருப்பூரை சேர்ந்த ரிதன்யா, வரதட்சனை கொடுமை காரணமாக தற்கொலை செய்து உயிரிழந்ததது, தமிழ்நாட்டு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இதையடுத்து, நெட்டிசன்கள் சிலர் ரிதன்யாவின் தந்தைதான் ஏ1 குற்றவாளி என்று கூறி வருகின்றனர். அது ஏன் என்பது குறித்து இங்கு பார்ப்போம்.  

சீமான் மீது திருச்சி டி.ஐ.ஜி. வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கு! உயர்நீதிமன்றம் இடைக்கால தடை

மதுரை: நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மீது திருச்சி டி.ஐ.ஜி. வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கின் விசாரணைக்கு  உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்காலத்தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, திருச்சி மாவட்ட டிஐஜி வீ. வருண்குமார் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், என் மீதும் எனது குடும்பத்தினர் மீதும் அவதூறு தகவல்களை பரப்பி, உள்நோக்கத்துடன் சீமான் பேட்டியளித்து வருகிறார். இதனால் நானும், என் குடும்பத்தாரும் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளோம். … Read more

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புதிய கருவி: தீ விபத்து ஏற்பட்டால் தானாகவே வெடித்து தீயணைக்கும் ‘பந்து’

சென்னை: தீ விபத்து ஏற்பட்டால் தானாகவே வெடித்து தீயை அணைக்கும் வகையில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பந்து வடிவிலான நவீன தீயணைப்பு கருவி பொருத்தப்பட்டுள்ளது. விரைவில் டிஜிபி அலுவலகம் மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் இந்த கருவி பொருத்தப்பட உள்ளது. சென்னை காவல் ஆணையரகத்தின் தலைமை அலுவலகம் வேப்பேரியில் 8 தளங்களுடன் உள்ளது. தரை தளத்தில் பொதுமக்களின் புகார் மனுக்கள் திங்கள் முதல் வெள்ளி வரை அரசு விடுமுறை தினங்கள் தவிர … Read more

எனது மரணத்துக்குப் பிறகும் இந்த அறக்கட்டளை தொடரும்: தலாய் லாமா

புதுடெல்லி: 600 ஆண்டுகள் பழமையான தனது அறக்கட்டளை தன்னுடைய மரணத்திற்குப் பிறகும் தொடரும் என்று புத்த மதகுரு தலாய் லாமா முறையாக உறுதிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக தலாய் லாமா தனது எக்ஸ் பக்கத்தில் இன்று (ஜூலை 2) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “செப்டம்பர் 24, 2011 அன்று, திபெத்திய ஆன்மிக மரபுகளின் தலைவர்கள் கூட்டத்தில் நான் ஓர் அறிக்கை வெளியிட்டேன். திபெத்துக்கு உள்ளேயும், வெளியேயும் உள்ள சக திபெத்தியர்கள், திபெத்திய பவுத்தத்தைப் பின்பற்றுபவர்கள், திபெத்தியர்களுடன் தொடர்பு … Read more