டொனெட்ஸ்க் பிராந்தியத்தை ரஷியாவுக்கு விட்டு தரமாட்டேன் – உக்ரைன் அதிபர் திட்டவட்டம்

கீவ்,

ரஷியா – உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்தநிலையில் இப்போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முயற்சித்து வருகிறார். ரஷிய அதிபர் புதினுடன் வருகிற 15-ம் தேதி டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

அமைதி ஒப்பந்தத்தின்படி சில நிலங்களை உக்ரைன் விட்டுக்கொடுக்க வேண்டியதிருக்கும். இரு நாடுகளும் நில பரிமாற்றங்கள் செய்து கொள்ள வேண்டும் என்று டிரம்ப் தெரிவித்தார். இதற்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி எதிர்ப்பு தெரிவித்தார். இந்தநிலையில், ஜெலென்ஸ்கி கூறியதாவது:-

போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ள டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் மீதமுள்ள 30 சதவீதத்திலிருந்து உக்ரைன் விலக வேண்டும் என்று ரஷிய அதிபர் புதின் விரும்புகிறார். உக்ரைன் தனது கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களிலிருந்து விலகாது. அது அரசியலமைப்பிற்கு முரணானது. எதிர்கால ரஷிய படையெடுப்பிற்கு ஒரு ஊக்கமாக மட்டுமே செயல்படும் என்றார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.