நாட்டை கொள்ளையடிக்கிறது காங்கிரஸ்: ஒடிசாவில் பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு

ஜார்சுகுடா: ஒடிசாவில் ரூ.60,000 கோடி மதிப்​பிலான நலத்​திட்​டங்​களுக்கு பிரதமர் நரேந்​திர மோடி நேற்று அடிக்​கல் நாட்​டி​னார். பல்​வேறு திட்​டங்​களை அவர் தொடங்கி வைத்​தார்.

இந்த விழா​வில் பேசிய பிரதமர் மோடி, ‘காங்​கிரஸ் கட்சி நாட்டை கொள்​ளை​யடிக்​கிறது’ என்று குற்​றம் சாட்டி உள்​ளார். ஒடி​சா​வில் முதல்​வர் மோகன் சரண் மாஜி தலை​மை​யில் பாஜக ஆட்சி நடை​பெறுகிறது. அந்த மாநிலத்​தின் ஜார்​சுகுடா நகரில் நேற்று அரசு நலத்​திட்ட விழா நடை​பெற்​றது. இதில் பிரதமர் நரேந்​திர மோடி பங்​கேற்று ரூ.60,000 கோடி மதிப்​பிலான நலத்​திட்​டங்​களுக்கு அடிக்​கல் நாட்​டி​னார். பல்​வேறு திட்​டங்​களை அவர் தொடங்​கி​வைத்​தார்.

விழா​வில் அவர் பேசி​ய​தாவது: நாடு முழு​வதும் 4 கோடி ஏழை குடும்​பங்​களுக்கு கான்​கிரீட் வீடு​கள் கட்​டிக் கொடுக்​கப்​பட்டு உள்​ளன. இந்த திட்​டத்​தில் ஒடி​சா​வில் மட்​டும் 40,000 ஏழை குடும்​பங்​கள் பயன் பெற்​றுள்​ளன. ஒடி​சா​வில் புதி​தாக 2 செமி கண்​டக்​டர் ஆலைகள் அமைக்க மத்​திய அரசு அண்​மை​யில் ஒப்​புதல் வழங்​கியது. இதன்​மூலம் ஒடிசா இளைஞர்​களுக்கு வேலை​வாய்ப்பு கிடைக்​கும்.

கப்​பல் கட்​டு​மான திட்​டத்​துக்​காக மத்​திய அரசு சார்​பில் அண்​மை​யில் ரூ.70,000 கோடி திட்​டம் அறிவிக்​கப்​பட்​டது. இந்த திட்​டத்​தின் கீழ் ஒடி​சா​வில் கப்​பல் கட்​டு​மான தளம் அமைக்​கப்பட உள்​ளது. இதன்​மூலம் ஏராள​மான இளைஞர்​களுக்கு வேலை​வாய்ப்பு கிடைக்​கும். மத்​தி​யிலும் நாடு சுதந்​திரம் அடைந்​தது முதல் காங்​கிரஸ் கட்​சி, நாட்டை கொள்​ளை​யடித்து வந்​தது. கடந்த 2014-ம் ஆண்டு மத்​தி​யில் பாஜக ஆட்சி அமைக்க மக்​கள் வாய்ப்பு வழங்​கினர். இதன் மூலம் காங்​கிரஸின் கொள்ளை தடுத்து நிறுத்​தப்​பட்​டது.

கடந்த காங்​கிரஸ் ஆட்​சிக் காலத்​தில் அத்​தி​யா​வசிய பொருட்​கள் மீது அதிக வரி விதிக்​கப்​பட்​டது. உதா​ரண​மாக ஒரு குடும்​பத்​தில் ஓராண்​டுக்கு ரூ.1 லட்​சம் செலவு செய்​தால், ரூ.25,000 வரி செலுத்த வேண்​டிய சூழல் இருந்​தது. பாஜக ஆட்​சிக் காலத்​தில் இந்த வரி ரூ.5,000 ஆக குறைந்​திருக்​கிறது. இதன்​மூலம் ஏழை, நடுத்தர வர்க்க மக்​கள் மிகுந்த பலன் அடைந்​துள்​ளனர்.

காங்​கிரஸ் ஆட்​சிக் காலத்​தில் மக்​களின் பணம் கொள்​ளை​யடிக்​கப்​படு​கிறது. எனவே காங்​கிரஸ் மற்​றும் அதன் கூட்​டணி கட்​சிகளிடம்​ இருந்​து பொது​ மக்​கள்​ வில​கி இருப்​பது நல்​லது. திருப்பதி, பாலக்காடு உள்ளிட்ட 8 ஐஐடிகளில் ரூ.11,000 கோடி யில் விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் மூலம் அடுத்த 4 ஆண்டுகளில் இந்த ஐஐடிகளில் கூடுதலாக 10,000 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள் என்று பிரதமர் நரேந்திர தெரிவித்தார். இவ்​வாறு பிரதமர்​ மோடி பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.