புதுடெல்லி: பிஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த், ஜோய்மால்யா பக்ஷி அடங்கிய அமர்வு நேற்று மீண்டும் விசாரித்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், “தேர்தல் ஆணையத்துக்கு அதன் பொறுப்பு தெரியும். வாக்காளர் பட்டியலில் சேர்க்கை, நீக்கத்துக்குப் பிறகு இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும். இந்த விவகாரம் தொடர்புடைய மனுக்கள் இன்னும் முடித்து வைக்கப்படவில்லை” என்று குறிப்பிட்டு விசாரணையை நவம்பர் 4-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
“வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கையை பிற மாநிலங்களில் தடுக்கும் நோக்கில் தவறான தகவல்களை மனுதாரர்கள் தெரிவித்து வருகின்றனர்” என்று தேர்தல் ஆணையத்தின் பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.